வேளாண் விளைபொருட்களின் ஒப்பந்த சாகுபடி சட்டம் – பார்வை

கேள்வி: தமிழக அரசு கொண்டு வந்திருக்கும் ஒப்பந்த சாகுபடி குறித்த சட்டம் வேளாண்மையில் பெரிய புரட்சியை உண்டு பண்ணுமா?

பதில்: ஒரு புண்ணாக்கும் பண்ணாது.

தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் வேளாண் விளைபொருட்களைக் குறிபிட்ட வியாபாரிகள் மூலமாகத்தான் விற்க வேண்டும் என்பது மாதிரியான APMC Act முதலில் இருந்தே இல்லை. கிட்டத்தட்ட ஒரு free market முதலில் இருந்தே இருக்கிறது. யார் வேண்டுமானாலும் வியாபாரி ஆகலாம், விவசாயிகளும் யாரிடம் வேண்டுமானாலும் விற்கலாம். மண்டிக்கு அனுப்பி சீட்டு வாங்கித்தான் விற்க வேண்டும் என்ற நிர்பந்தம் எதுவுமில்லை.

தற்போது அமுலுக்கு வந்துள்ள ஒப்பந்தச் சாகுபடி சட்டம் draft ஆக கடந்த ஆண்டு சுற்றிக்கொண்டு இருந்தபோது கிண்டிலில் போட்டு வரி வரியாக படித்துப் பார்த்ததில் கொஞ்சம் புதிய பதவிகள் உருவாக்கப்பட்டு இருபது முப்பது அதிகாரிகள் சும்மா மிக்சர் தின்னுகொண்டு உட்கார்ந்திருக்கப் போவது உறுதி என்பது உறுதியாகப் பட்டது.

மற்றபடி ஒப்பந்தத்தில் ஈடுபடும் நிறுவனம் எக்காரணத்துக்காவும் விவசாயிகளின் நிலத்தில் உரிமை கோர முடியாது. கார்ப்பரேட் கம்பெனிக்காரன் நிலத்தையெல்லாம் வாங்கிவிடுவான் என்ற வாட்சப் வதந்திக்காரன்களை நம்ப வேண்டாம். பிரச்சினைகள் ஏதாவது வந்தால் உரிமையியல் வழக்காக வருடக்கணக்கில் நீதிமன்றத்துக்கு நடந்து பாரத்துக்கொள்ள வேண்டியதுதான்.

ஒப்பந்தத்தில் ஈடுபடும் நிறுவனம் ஒப்பந்த மதிப்பில் 0.3%-உம் அதற்கு 18% ஜிஎஸ்டி-யும் கட்ட வேண்டும். இப்படி ஒப்பந்தம் எல்லாம் போட்டால் அப்புறம் அதிகாரிகளுக்கு தீபாவளி மாமூல் அழுது தொலைக்க வேண்டும் என்று கம்பெனிகளுக்கு தெரியாததல்ல.

இந்த சட்டத்தின் draft-இல் ______ state/UT என்று இருந்தது. அந்த கோடிட்ட இடங்களில் எல்லாம் தமிழ்நாடு என்று எழுதி வைத்து ஒப்புதல் வாங்கப்பட்டிருக்கிறது.

சொல்லப்போனால் பழுது பார்க்க வேண்டியது அரசு வேளாணமைத்துறையைத்தான். அதை விடுத்து என்னென்னமோ பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு பணியிட மாறுதலுக்கு குறைந்தது ஒன்றரை இலட்ச ரூபாய், பதவி உயர்வுக்கு இரண்டு இலட்சம் என ரேட் கார்டு போட்டு வசூல் செய்கின்றனர்.

இந்த தொகையை ஈடுகட்ட விதை, பூச்சிக்கொல்லி, உர விற்பனை உரிமம் பெற்ற கடைக்காரர்களிடம் ஆயிரம் கொடு, இரண்டாயிரம் கொடு என்று வேளாண்மைத்துறை அதிகாரிகள் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கின்றனர். அதற்கு ஏதாவது ஒரு சிறப்புத் திட்டம் மூலம் மானியம் வழங்க வழிவகை செய்து அவர்கள் கெளரவத்துடன் வாழ ஏதாவது அரசாங்கம் செய்ய வேண்டும். அதிகாரிகளின் ஜீப் கிளம்பிய பின்னர் ”கை, கால் நல்லாத்தானே இருக்குது, இவனுங்களுக்கு என்ன கேடு?” என்று கடைக்காரர்கள் ஏக வசனத்தில் பேசுவது நாரசாரமாக இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.

பெப்சி – உருளைக்கிழங்கு – காப்புரிமை வழக்கு விவகாரம்

பெப்சி – உருளைக்கிழங்கு – வழக்கு விவகாரம்.

நீங்க கஷ்டப்பட்டு வாயப்பொத்தி, வயித்தபொத்தி சம்பாரிச்சு ஒரு வீடு கட்டி வாடகைக்கு விட்டுட்டு வெளியூர் போயிடறீங்க. எனக்கு வாடகைக்கு விட்ட அதை நான் உள்வாடகைக்கு விட்டு நாலு காசு பாத்தா சரியா தப்பா?

மணல் ஆற்றிலிருந்து வந்தது. செங்கல், சிமெண்ட்டுக்கான கச்சாப்பொருள் எல்லாம் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நம் முன்னோர்கள் பாதுகாத்து வைத்த காடுகளை, மலைகளைத் தோண்டி எடுத்துவரப்படுகிறது. பணம் என்பது வங்கி கடன் வழங்கியது. வங்கிக்கு அரசாங்க முதலீடும் பொதுமக்களின் முதலீடுமே மூலதனம். அதாவது வங்கி கடனாக அளிப்பது மக்களின் பணம். மின்சாரத்தை ஆற்று நீரிலிருந்தும் ஏன் காற்றிலிருந்தும் கூட இலவசமாகத்தான் இயற்கை அருள்கிறது.

அதாவது ஒரு வீடு என்பது நம் முன்னோர்கள் பாதுகாத்து வைத்த இயற்கை வளங்களாலேயே உண்டக்கப்பட்டிருக்கிறது. அப்படியிருக்க ஒரு அச்சடித்த ஸ்டாம்பு பேப்பரை வைத்திருக்கும் நபர் எப்படி இந்த நாட்டின் குடிமகனாகிய என் தார்மீக உரிமையை மறுக்கலாம்? அதாவது அந்த ஹவுஸ் ஓனர் எப்படி நான் உள்வாடகைக்கு விடுவதைத் தடுக்கலாம்?

இந்த நாட்டின் குடிமகனுக்கு ஒரு வீட்டை உள்வாடகைக்கு விட உரிமையில்லையா? ஓனருக்கு வாடகை கொடுத்த பிறகு நான் என்ன செய்தால் அவருக்கு என்ன?

ooooooo———————————–ooooooo

விதைகளுக்கு, பயிர் இரகங்களுக்கு இந்தியாவில் காப்புரிமை (patent) கிடையாது. அவை நாட்டின் சொத்து. யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். ஆனால் நீங்கள் உழைத்து ஒரு குறிப்பிட்ட பயிர் இரகத்தை மேம்படுத்தியிருந்தால் அதன் மீது breeder rights உண்டு. மற்றவர்கள் வர்த்தக ரீதியாக அதைப் பயன்படுத்தி வியாபாரம் செய்தால் இராயல்ட்டி கேட்கலாம்.

அதேநேரத்தில் நீங்கள் உருவாக்கிய இரகத்தை மேற்கொண்டு மேம்படுத்தியோ, பிற இரகங்களுடன் கலக்கியோ ஒரு புதிய இரகத்தை உண்டாக்கி, உங்களுடைய இரகத்திலிருந்து அது வேறானது என்று நிரூபித்துவிட்டால் அந்த இரகம் மீது நீங்கள் உரிமை கோர முடியாது.

புழக்கத்தில் இருக்கும் ஒரு இரகத்தின் பண்புக்கூறுகளை (traits) உறுதிப்படுத்த DUS characters மற்றும் Grow Out Test (GoT) உடன் இன்று DNA fingerprinting-உம் சேர்ந்துவிட்டது. வீரிய இரக விதை வியாபாரத்தில் வழக்கமாக என்ன நடக்குமென்றால் ஒரு பெரிய கம்பெனி பெருத்த R&D பொருட்செலவுடன் ஒரு இரகத்தை சந்தைக்கு கொண்டுவரும். சில லெட்டர்பேடு கம்பெனிகள் அந்த இரகத்தை அதே கம்பெனியின் பழைய இரகம் ஒன்றுடன் கிராஸ் செய்து கிடைக்கும் இரகத்தைத் திரும்ப அந்த புதிய இரகத்துடன் கிராஸ் செய்து சந்தையில் வேறு பெயரில் இறக்கி விட்டுவிடுவார்கள். இந்த மாதிரி நிறைய தந்திரோபாயங்கள் இருந்தாலும் புரிதலுக்காக இங்கே மிக எளிமையாக சொல்லப்பட்டிருக்கிறது.

இதன்மூலம் DUS, GoT, DNA fingerprinting சோதனைகள் எல்லாவற்றையும் ஏமாற்றிவிடலாம். பெரிய கம்பெனியால் இதை சட்டப்படி ஒன்றும் செய்ய முடியாது என்று அந்த லெட்டர்பேட் கம்பெனிக்குத் தெரியும். அதனால் பெரிய கம்பெனி சித்ரா என்று பெயரிட்டு விற்பனை செய்தால் இவர்கள் சுசித்ரா என்று பெயரிட்டு பொட்டலம் அடிப்பார்கள்.

சிம்லாவில் உள்ள உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிலையத்தினால் வெளியிடப்பட்ட சில இரகங்கள் சிப்ஸ் வியாபாரத்துக்கு பேருதவி புரிந்தாலும் பின் கருகல் நோய் பாதிப்பு காரணமாகவும், சந்தையிலிருந்து தங்களது கம்பெனி தயாரிப்புகளின் தரம் வேறுபட்டு நிற்க வேண்டும் என்பதாலும் பெப்சி, ஐடிசி போன்ற பல நிறுவனங்கள் in-house reaserch -இல் இறங்கி புதிய இரகங்களை உருவாக்கும் பணியில் வெற்றியும் கண்டன.

அதாவது public domain-இல் உள்ள கருமூலப்பொருளில் (germplasm) இல்லாத சில பண்புக்கூறுகளை வெளிநாட்டிலிருந்து கொண்டுவந்த parent line-களைப் பயன்படுத்தி பல்வேறு உத்திகளின் மூலமாக மேம்படுத்தி ஒரு இரகத்தை வெளியிடும்போது அதை அரசாங்கத்திடம் எல்லா நிறுவனங்களும் பதிவு செய்துகொள்ளும். அதை மற்றவர்கள் வர்த்தக ரீதியாகப் பயன்படுத்துவது குற்றமாகும். (Genetically Modified என்பது வேறு. மரபீனி மாற்றம் எனப்படும் அதை பருத்தி தவிர வேறு எந்த பயிரிலும் குழப்பிக்கொள்ள வேண்டாம்).

Protection of Plant Varieties and Farmers Rights Act இல் Breeders right என்ற ஒன்றும் உள்ளது. அதாவது பயிர் இரகங்களைப் பாதுகாத்து வைத்து அதைத் தொடர்ந்து நல்ல விதைகளை பிரித்தெடுத்து மேம்படுத்தி வருவதால் farmer-உம் ஒரு breeder ஆவார்.

உதாரணமாக கோயமுத்தூர் வரிக் கத்தரி என்ற ஒன்று உண்டு. CVK எனப்படும் ஊதா நிறத்தில் வெள்ளைக் கோடுகள் போட்ட கத்தரி கோயமுத்தூர் சுற்றுவட்டாரத்தில் இயல்பாகக் கிடைப்பது. இதில் வேறு சில இரங்களைக் கலக்கி அதே மாதிரி கத்திரியை உருவாக்கி வந்து இனிமேல் யாரும் CVK எனப்படும் கோயமுத்தூர் வரிக் கத்தரியைப் பயன்படுத்தினால் எங்கள் கம்பெனிக்கு இராயல்ட்டி தர வேண்டும் என்று கேட்க முடியாது. புதிய இரகமானது பொதுப் புழக்கத்தில் (Public domain) உள்ள இரகங்களைவிட முற்றிலும் வேறானது என்று நிரூபிக்க வேண்டும். ஒருவேளை காய்ப்புழுவுக்கு இயற்கையாகவே எதிரான ஒரு இரகத்தைக் கொண்டுவந்தால் (அதை முறையாக பதிவு செய்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் அது பொதுப் பொருளாகிவிடும்) அதற்கு மற்றவர்கள் விதைக்காகப் பயன்படுத்தும்போது இராயல்ட்டி கோரலாம்.

கரும்பில் இன்று 10% சர்க்கரை ரெக்கவரி மட்டுமே ஆலைகளுக்குக் கிடைக்கிறது. அதாவது ஒரு டன் கரும்பைப் பிழிந்து காய்ச்சினால் நூறு கிலோ சர்க்கரை கிடைக்கும். நீங்கள் அரிதான ஏதாவது ஒரு wild இரகம் ஒன்றைப் பிடித்துவந்து ஏற்கனவே இருக்கும் இரகங்களுடன் கலப்பினங்களை உண்டாக்கி 25% சர்க்கரை ரெக்கவரி வருமளவுக்குச் செய்து அதை முறையாகப் பதிவு செய்துகொண்டால் அதை யாரேனும் வர்த்தக ரீதியாகப் பயன்படுத்தும்போது இராயல்ட்டி கோரலாம்.

அதே நேரத்தில் சாதாரண கரும்பில் 10% ரெக்கவரி எடுக்கும் ஆலை ஒன்று புதிதாக சில வடிப்பான்களையோ, வேறு கருவிகளையோ நிறுவி 25% ரெக்கவரி எடுத்தால் அந்த process -ஐ பேடன்ட் செய்ய முடியும். அதாவது சர்க்கரை எடுக்கும் process-க்கு patent. சர்க்கரை என்னும் product-க்கு patent அல்ல. ஆனால் இந்தியாவில் process patent-க்கு எந்த மதிப்பும் கிடையாது. ஒன்றுக்கு இரண்டு கருவிகளை நிறுவி அந்த process patent-ஐ பைபாஸ் செய்துவிடுவார்கள். நீதிமன்றங்களுக்கு இந்த டெக்னிக்கல் விவகாரங்கள் சுத்தமாக புரியாது. புரிந்தாலும் அரசியல் அழுத்தம் அல்லது உணர்ச்சிவசப்பட்ட கூட்டம் எந்தப் பக்கம் அதிகமாக இருக்கிறதோ அந்தப் பக்கமே தீர்ப்பு வரும்.

குஜராத்தைப் பொறுத்தமட்டில் நொறுக்குத்தீனி தயாரிப்பில் பத்துக்கும் மேற்பட்ட பெரிய கம்பெனிகள் உண்டு. மூன்று மாவட்டத்துக்கு ஒரு பிராண்ட் இராஜாவாக இருக்கும். அங்கே Lays, Kurkure, etc. போன்ற பன்னாட்டு நிறுவன பிராண்டு எல்லாம் சேர்ந்து 20% சந்தையை வைத்திருந்தாலே ஆச்சரியம்.

இந்த பிரச்சினையைப் பொறுத்தமட்டில் பெப்சியின் உருளைக்கிழங்கு இரகத்தை சாகுபடி செய்த்தற்காக மட்டுமே வழக்குத் தொடரப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் குஜராத்திகள் சிப்ஸ் போட்டு விற்பனை செய்ய ஆரம்பித்துவிட்டதால்தான் “இதுவரை ஆன சேதத்துக்கும் சேர்த்து” என்று பெரிய தொகைக்கு வழக்கு போட்டிருக்கிறது பெப்சி.

வியாபாரத்தில் எந்த மனசாட்சியும் இல்லாதவர்கள் குஜராத்திகள். E-way bill உட்பட GST-யில் இத்தனை கிடுக்குப்பிடிகள் இருந்தும் வீடுகளுக்கு டைல்ஸ் வாங்கும்போது “பில் போட்டா ஜிஎஷ்டி 28% வரும் பையா” என்று சொல்லி தமிழகத்தில் எப்படி டைல்ஸ் வியாபாரம் நடக்கிறது என்று அனைவருக்கும் தெரியும்.

பி.டி. பருத்தி அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வரும் முன்னரே சட்டைப் பாக்கெட், பேண்ட் பாக்கெட், செக்-இன் லக்கேஜ், ஹேண்ட் லக்கேஜ், குழந்தைகளின் ஹேண்ட்பேக் என எல்லாவற்றிலும் ஒவ்வொரு விதையை மட்டும் மட்டும் போட்டு அமெரிக்காவிலிருந்து எடுத்து வந்து இங்கே back cross செய்து அந்த பண்புக்கூறுகளை interogress செய்து விற்பனை செய்தது, ரவுண்டப் களைக்கொல்லி எதிர்ப்புத்திறன் வாய்ந்த பருத்தி இரகம், பி.டி. கத்தரி இரகம் போன்ற அதிகாரப்பூர்வமாக விற்க அரசு அனுமதியே இல்லாதவற்றையும் விற்பனை செய்வது என நவீன fraud எல்லாமே குஜராத்தில் இருந்துதான் ஆரம்பிக்கும்.

இந்தியாவிலேயே தமிழகத்திலும், குஜராத்திலும்தான் மனைவி பெயரில் Firm-ஐப் பதிவு செய்து கணவர்கள் தொழில் நடத்துவது அதிகம். பெப்சி வழக்குத் தொடர்ந்திருக்கும் அந்த அப்பாவி விவசாயிகள் “மே பேகுன்னாரா சாப்” என்று சொல்லிக்கொண்டே இருந்தாலும் அவர்களது மனைவி, மகன், மகள் பெயரில் நடக்கும் வியாபாரத்தின் வீரியத்தை அறியாமல் ஒரு பன்னாட்டு கம்பெனி கோடை காலத்தில் நடக்கவிருக்கும் குளிர்பான விற்பனை பாதிக்கப்படலாம் என்று தெரிந்தும் இறங்குகிறது என்றால் அதன் முக்கியத்துவம் என்ன, வீரியம் என்ன என்று புரிந்துகொள்ள வேண்டும்.

பெப்சி தனது பொருட்செலவில் உண்டாக்கிய இரகத்தை ஒப்பந்தம் போட்டு வாங்கி – ஏமாற்றிவிட்டு – இன்று உள்ளூர் சிப்ஸ் கம்பெனிகளுக்கு விற்பவர்கள் நாளை அதன் சர்வதேச போட்டியாளர்களுக்கும் விற்பார்கள். அந்த கம்பெனிக்காரன் கேள்வியே கேட்கக்கூடாது. ஏனென்றால் அவர்கள் அப்பாவி விவசாயிகள். பச்சையாக அடுத்தவன் உழைப்பைத் திருடித் தின்றுவிட்டு விவசாயி என்ற போர்வையில் ஒளிந்துகொள்ளும் அயோக்கியர்களை ஆதரிப்பது ஒரு குரூர மனநிலை.

நிலம் வைத்திருப்பவன் அடுத்தவன் உழைப்பை எவ்வளவு வேண்டுமானாலும் சுரண்டிக்கொள்ளலாம். அது மேலிருந்து பணத்தாலும், ஆராய்ச்சியாலும் வரும் இன்டெலெக்சுவல் உழைப்பாக இருந்தாலும் சரி, கீழிருந்து வரும் கூலிக்கார மக்களின் ஃபிஸிகல் உழைப்பாக இருந்தாலும் சரி.

சுற்றுச்சூழல் ஆர்வலர், இயற்கைப் போராளி, விவசாய செயற்பாட்டாளர் என்றாலே பாரம்பரியமான மரபுசார் முறைகள் கேள்வி கேட்கப்படவே கூடாது என்று கிராமப் பொருளாதாரத்தின் சாதிப் படிநிலைகளைப் பாதுகாப்பவர்கள், உழைப்புச் சுரண்டலுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள்தான். எனவே ஆர்வலர்கள் பெப்சியின் நிலையை நியாயப்படுத்தினால்தான் ஆச்சரியம்.

இது நில உரிமையாளர்கள் விவசாயி என்ற போர்வையில் செய்துகொண்டிருந்த அறிவுசார் சுரண்டலின் மீது வைக்கப்பட்டிருக்கும் முதல் அடி. இஃது எமோஷனலாகப் பார்க்கப்பட்டு பெப்சிக்கு பின்னடைவே ஏற்படும் என்றாலும் புதிய தொழில்நுட்பங்களுக்கும் அதன்மேல் இந்தியாவில் செய்யப்பபடும் முதலீட்டுக்கும் என்ன மதிப்பு இருக்கும் என்பதை இந்த விவகாரம் தெளிவுபடுத்தும். மற்றபடி சும்மா கார்ப்பரேட் கம்பெனி, அப்பாவி விவசாயி லபோதிபோ என்று சில்லறைகளைச் சிந்தவிடாமல் வேடிக்கை பார்ப்பது இந்தத் தொழிலில் ஈடுபடாத பொதுமக்களின் உடம்புக்கு நல்லது. இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம். உங்கள் வீட்டை ஒருவர் உள்வாடகைக்கு விடுவது போன்ற விவகாரத்தில் என்ன நிலைப்பாடு எடுப்பீர்களோ அதேதான் பெப்சி-உருளைக்கிழங்கு விவகாரத்திலும் நியாயமாக இருக்கும்.

வேளாண் பட்டதாரி மாணவிகளுக்கு இடுபொருள் நிறுவனங்களில் வேலை தரப்படுவதில்லையா?

கேள்வி: வேளாண் பல்கலைக்கழகத்தில் விவசாயப் பட்டப்படிப்பை முடித்த பெண் விண்ணப்பதாரர்களை Core Sector Companies எனப்படும் விதை, உரம், பூச்சிக்கொல்லி, பயோகன்ட்ரோல், சொட்டுநீர்ப் பாசனம், டிராக்டர், பண்ணை இயந்திரக்கருவிகள் வர்த்தகத்தில் உள்ள நிறுவனங்கள் வேலைக்கு எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது. இஃது உண்மையா? கொஞ்சம் விளக்கமாக இதுகுறித்து எழுதவும்.

பதில்: ஆமாம், பெண் விண்ணப்பதாரர்களை Core Sector Input Companies பெரும்பாலும் தவிர்த்து விடுகின்றன. இதற்குக் காரணம் 70% மாணவிகளும், 30% கம்பெனி நிர்வாகத்தில் உள்ள ஆண் அதிகாரிகளுமே காரணமாவர்.

கம்பெனிகள் இலாப நோக்கில் செயல்படுபவை. அதற்கான மனநிலை, செயல்திறன், தன்னூக்கம், அசாதாரண சூழ்நிலைகளைக் கையாளும் திறன் போன்றவை அவசியம். ‘எனக்கு வழங்கப்பட்ட வேலைகளை முடித்துவிட்டேன், மற்றபடி எது நடந்தாலும் நான் பொறுப்பாக முடியாது’ என்ற attitude தனியார் நிறுவன வேலைகளுக்கு மட்டுமல்ல, சொந்தத் தொழில் செய்பவர்களுக்கும் இருக்கவே கூடாத ஒன்று. Ownership என்பது மிக முக்கியம்.

மாணவிகள் சந்தை சார்ந்த வேலைவாய்ப்புகளுக்கு வராததற்கான காரணத்தில் அவர்களது மனத்தடையே பெரும்பங்கு வகிக்கிறது. அத்தகைய மனத்தடையை உருவாக்குவதில் உதவிப் பேராசிரியர்களும், சீனியர் மாணவிகளும், ‘எக்ஸாம் பிரிப்பேர் பண்றேன்’ என்று வீட்டில் பணம் வாங்கி செலவு செய்துகொண்டு சும்மா சுற்றும் பட்டதாரி மக்களும் முக்கியமானவர்கள். மூத்த பேராசிரியர்கள் தங்களது ஆராய்ச்சித்திட்டத்தில் வேலை செய்து வாழ்க்கை முழுவதும் தற்காலிக ஒப்பந்தப் பணியாளராக அடிமையாகவே வாழும் ஒரு கும்பலை உருவாக்கி வைத்திருக்கின்றனர். இந்த முத்தரப்பு கும்பல், குருடர்கள் யானையைத் தடவிப்பார்த்த கதையாக input industry குறித்த பல மாயக் கதைகளைப் பரப்பிவிட்டவண்ணம் உள்ளனர்.

Open Market Jobs எனப்படும் சந்தை சார்ந்த வேலைகளில் வெற்றிகரமாகப் பணிபுரிய 80% தனிநபரின் குணாதிசியங்களே முக்கியமானது. Technical Knowledge 20% இருந்தாலும் போதுமானது. தெரியாதவற்றை யாரிடமாவது ஃபோன் போட்டுக் கேட்டுக்கொள்ளலாம், கூகுள் செய்திடலாம். ஆனால் எதிரில் உட்கார்ந்திருக்கும் நபரை எப்படிக் கையாளப் போகிறோம் என்பதுதான் நாம் செய்யப்போகும் வேலையின் வெற்றிதோல்வியைத் தீர்மானிக்கிறது.

எடுத்த எடுப்பிலேயே ஏர்கன்டிஷன்டு க்யூபிக்கிளில் உட்கார்ந்து For your information and necessary action என்று மின்னஞ்சலைத் தட்டிவிடும் வேலை மட்டுமே வேண்டும் என்று பல மாணவிகள் இருக்கின்றனர். இதற்கு அவர்களுடைய அப்பா ஏதாவது கம்பெனி ஆரம்பித்துக் கொடுத்தால்தான் உண்டு.

இன்புட் இன்டஸ்ட்ரி வேலை என்றதும் விவசாயிகளின் தோட்டத்துக்குச் சென்று தங்கள் கம்பெனி மருந்து, விதைகளை சீட்டு எழுதித் தருவதுதான் என்று இண்டஸ்ட்ரி வேலைக்கே சென்று பார்த்திராத ஒரு கும்பல் எழுதி வருகிறது. இவர்கள் பெரும்பாலும் நம்மாழ்வார் பக்தர்களாவர். கடைசி வரைக்கும் யாரையாவது குறைசொல்லிக்கொண்டே அரசாங்க வேலை கிடைக்கும்வரை கார்ப்பரேட் சதி, இலுமினாட்டி என்றெல்லாம் பேசிக்கொண்டிருப்பர். இவர்களிடம் எந்த வேலையையும் சொந்தமாகச் செய்யக்கூடிய தன்னூக்கமோ, உற்சாகமோ இருக்காது; நல்ல பொழுதையெல்லாம் வீணாகப் பேசிக் கழித்திடுவர்.

மார்க்கெட்டிங் வேலை, மார்க்கெட்டில் வேலை என்றதும் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்குமா என்ற கேள்வி வரும். தமிழ்நாடு, கார்நாடகா, குஜராத், பஞ்சாப் போன்ற மாநிலங்கள் ஓப்பீட்டளவில் பாதுகாப்பானவை. பெண்களைப் பணியிலமர்த்தும்போது ஓரளவுக்கு பாதுகாப்பான பகுதியில் மட்டுமே பணிபுரிய உயரதிகாரிகள் அனுப்புவார்கள். பெற்றோர் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்பது பெரும்பாலும் ஒரு சாக்கு மட்டுமே. தினசரி பல புதிய மனிதர்களை, இடங்களைப் பார்க்கத் துணிந்த மாணவிகளுக்குப் பெற்றோரை சம்மதிக்க வைப்பது அவ்வளவு கடினமான காரியமன்று.

தனியார் நிறுவன சந்தை சார்ந்த வேலை என்றால் எக்கச்சக்கமாக வேலை வாங்குவார்கள் என்ற கருத்தாக்கம் உண்டு. அது பல்கலைக்கழகத்துக்குள் சும்மா இருந்து பழகியவர்களால் சொல்லப்படுவது. உங்களுக்குத் தெரிந்த இன்புட் இண்டஸ்ட்ரி ஆட்கள் எத்தனை பேர் அப்படி சொல்கின்றனர் என்று சிந்திக்க வேண்டும். இதே ஆட்கள் வெளிநாடு சென்றதும் எப்படி வேலை செய்கின்றனர் என்று பார்க்க வேண்டுமே.

சந்தையில் வேலை செய்யும்போது பெண் என்ற முறையில் சீண்டல்கள் வருமா என்ற கேள்வி எழலாம். நிச்சயமாக வரும். வங்கி அதிகாரியாக, வேளாண்மைத்துறை அதிகாரியாக பணிபுரிவது என்பதில் பெண்களுக்கு அந்த பணியால் கிடைக்கும் ஒரு பாதுகாப்பு வளையம் இருந்துகொண்டே இருக்கும். ஒரு பெண், வங்கி அதிகாரியாகக் ஒரு கிளையன்ட்டைப் பார்க்க செல்வதும், உரக்கம்பெனி அதிகாரியாக கிளையன்ட்டைப் பார்க்கச்செல்வதும் நிச்சயமாக ஒன்றல்ல.

எல்லோரும் ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள்தான். சிலர் வாட்சப்பில் குட்மார்னிங் அனுப்புவார்கள், இரவு சரக்கடித்துவிட்டு மிஸ்டுகால் கொடுப்பார்கள், தேவையில்லாமல் போன் போட்டு வழிவார்கள், செட்டாகுமா என்று நூல் விட்டுப் பார்ப்பார்கள். இதையெல்லாம் மிகச் சாதாரணமாக சிரித்துக்கொண்டே (மனதிற்குள் “போடா மயிறு, உன்னை மாதிரி எத்தனை பேரைப் பாத்திருப்பேன்” என்ற நினைப்புடன்) இடதுகையால் புறந்தள்ளிவிட்டு முன்னோக்கிச் செல்லத் தெரிந்த மாணவிகளுக்கு Core sector company-களில் வானமே எல்லை.

அண்மையில் பிரபல பன்னாட்டு நிறுவன கருத்தரங்கில் பார்த்தபோது, கலந்துகொண்ட 170 பேர்களில் இரண்டு பேர் மட்டுமே அக்ரி படித்த பெண்கள்; அவர்களும் அலுவலகத்தில் உட்கார்ந்திருப்பவர்கள். இன்று அத்தனை நிறுவனங்களிலும் ஒற்றை இலக்க எண்களில் மட்டுமே பெண்கள் பணியில் உள்ளனர். Gender equality குறித்து அதிகம் பேசுகிறார்கள், ஆனால் மாணவிகள் வேலைக்கு வர ஆர்வம் காட்டுவதில்லை.

இன்புட் கம்பெனிகளில் எல்லா வேலைகளையும் நாமேதான் செய்யவேண்டும் என்றதுமே பல பெண் விண்ணப்பதாரர்கள் பயந்து விடுகின்றனர். மேலை நாடுகளில் வாழ்க்கை முறையே அதுதான் என்றாலும் நமக்கு இங்கு கீழே குற்றேவல் புரிய ஆட்கள் இல்லாவிட்டால் கை நடுங்குகிறது.

ஆமாம், நீங்களேதான் எல்லா வேலைகளையும் செய்யவேண்டும். அந்த வாரத்திற்கான பயணத் திட்டம், அன்றைக்கு எங்கெங்கு செல்ல இருக்கிறோம், யாரையெல்லாம் சந்திக்க இருக்கிறோம், அதன் நோக்கம் என்ன, சம்பந்தப்பட்ட நபர்கள் நாம் செல்லும்போது இருப்பார்களா என எல்லாவற்றையும் நாம்தான் பார்த்துக்கொள்ள வேண்டும். நாமே கார் அல்லது பைக்கை தினசரி 100 – 200 கிமீ ஓட்ட வேண்டும், பஞ்சரானால் கூட நாமேதான் கழட்டி ஸ்டெப்னி மாட்ட வேண்டும். ஊர் ஊராகச் சென்று சாப்பிடுவது, தேநீர் பருகுவது, தபால் அனுப்புவது, மின்னஞ்சலுக்குப் பதில் சொல்வது, வாடிக்கையாளர் புகார்களைக் கையாளுவது, இடையில் ஆடியோ கான்பரன்ஸ் வீடியோ கான்பரன்ஸ் என அனைத்தையும் on the move-இல் நீங்களேதான் செய்ய வேண்டும். கார் சேற்றில் சிக்கலாம், விபத்துக்குள்ளாகலாம், டிராபிக்கில் சிக்கி நமது மொத்தத் திட்டமும் பாழாகலாம் – எல்லாவற்றையும் நீங்களேதான் பார்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக வேலைநேரத்தில் 80% தனியாகவே வேலை செய்துகொண்டிருக்க வேண்டியிருக்கும்.

Travelling எனக்கு ரொம்ப புடிக்கும் என்று கதை விடுவது வேறு. அழகாக வால்வோ பேருந்து, இரயில், விமான டிக்கெட் அல்லது டேக்சி எடுத்துக்கொண்டு சென்று நல்ல ரிசார்ட்டில் வெல்கம் டிரின்ங் குடித்துவிட்டு செல்பி எடுத்து ஹேஷ்டேக் போட்டு travelling is my hobby என்று சொல்வதும், தினசரி ஊர் ஊராகப் பணி நிமித்தமாக பயணிப்பதும் முற்றிலும் வேறு.

வரச்சொல்லிவிட்டு போன் எடுக்க மாட்டார்கள், நாமும் முகவரி, வழி, வண்டித்தடம் என எதையும் கேட்காமல் 150 கிலோமீட்டர் போன பிறகு கூப்பிட்டால் switched off என்று வரும். அவர்களது இடத்தைத் தேடுகையில் டீசல் நிரப்பாமல் நீண்டதூரம் போயிருப்போம, பங்க்கைக் கண்டுபிடித்து நுழைந்ததும் டீசல் தீர்ந்துவிட்டது என்ற அதிர்ச்சி கிடைக்கும். மழை பெய்ய ஆரம்பித்திருக்கும். ஏடிஎம்-இல் பணம் எடுக்க காலையில் கிளம்பும்போது மறந்திருப்பிருப்பீர்கள். உங்கள் கணவரோ, பாய்ஃபிரண்டோ அந்த நேரத்தில் கூப்பிட்டுக் கொஞ்சவோ அல்லது கத்தவோ செய்யலாம். இவை எல்லாவற்றையும் நீங்களே சமாளிக்க வேண்டும்.

இருக்கறது ஒரு வாழ்க்கை. அதில் இப்படியெல்லாம் கஷ்டப்பட வேண்டுமா என்று தோன்றலாம். உண்மையில் இது எதுவுமே கடினமானதல்ல. உள்ளே நுழைந்து பழகிவிட்டால் தினசரி புதுப்புது அனுபவங்கள் கிடைத்தவண்ணம் இருக்கும். வேலையில், வாழ்க்கையில் ஒருபோதும் சலிப்புத் தட்டாது. சும்மா போரடிக்கிறது என்ற எண்ணமே வராது. நேற்றுப் பார்த்த அதே அலுவலகம், அதே ஆட்கள், அதே வேலை என்ற சூழ்நிலை நீங்களே எதிர்பார்த்தாலும் வராது. ஐந்து, பத்து வருடங்கள் கழித்துப் பார்த்தால் இந்த சமுதாயம் குறித்த உங்களது புரிதல் முற்றிலும் மாறியிருக்கும்.

கல்யாணம், ஹனிமூன், குழந்தைகள், கணவன், மாமியார், அலுவலகப் பணிச்சுமை, பணச்சிக்கல்கள், உடல் உபாதைகள் என்பதெல்லாம் எந்த வேலையாக இருந்தாலும் கூட வந்துகொண்டேதான் இருக்கும். வீட்டுக்கு வீடு வாசற்படி. ஒருவேளை அந்த வேலைக்குப் போயிருந்தால் ஜாலியாக இருந்திருக்கலாமோ என்பது மிகப்பெரிய மாயை. அடுத்தவர்களது கணவன் அழகாகத் தெரிவது போலத்தான் இதுவும்.

வங்கிப் பணிகள், அரசு வேளாண்மைத்துறை பணி, குரூப் 1, சிவில் சர்வீசஸ், உதவிப் பேராசிரியர் பணி என வழக்கமான வட்டத்தைத் தாண்டி வெளியேறி புதிய சூழலுக்குள் நுழைய வேண்டும், ஒப்பந்த ஆராய்ச்சியாளராகப் பல்கலைக்கழகத்துக்குள் இளமைக்காலத்தை வீணடிக்கக்கூடாது, விரைவில் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும், சீனியாரிட்டிக்காக நாட்களை ஓட்டக்கூடாது, எந்த சூழ்நிலை வந்தாலும ஒரு கை பார்க்கவேண்டும், I’m not someone என்ற மனநிலை கொண்ட மாணவிகளுக்கு Input industries எப்போதும் திறந்தே இருக்கிறது.

அரசாங்க வேலைக்குச் செல்ல முடியாதவர்கள், கிடைக்காதவர்கள் மட்டுமே அக்ரி இன்புட் இண்டஸ்ட்ரியில் வேலை செய்வதாக நீங்கள் நம்பினால் அஃது உங்களது அறியாமை மட்டுமே. ஆண்டுக்கு ஐம்பது இலட்சம், ஒரு கோடி சம்பளம் வாங்குபவர்கள் அங்கே ஏராளம். நாற்பது வயதில் ஆண்டுக்கு 75 இலட்சம் சம்பளம் வாங்கும் பல பெண்கள் அக்ரி இண்டஸ்ட்ரியில் இருக்கின்றனர். சொந்த தொழிலில் இருப்பவர்கள் பலர் ஒரு காலத்தில் ஏதாவது ஒரு கம்பெனியில் பணிபுரிந்து வெளியேறியிருப்பார்கள். மார்க்கெட் அனுபவமே அவர்களது முதலீட்டுக்கான பாதுகாப்பு.

வெறும் Designation-இல் ஒன்றுமே இல்லை நிறைய சம்பாதிக்க வேண்டும், பல இடங்களை மக்களைப் பார்க்க வேண்டும், ஒருகட்டத்தில் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும், 35 வயதிற்குள் பிஎம்டபிள்யூ வாங்கி பார்த்திடனும், ஓய்வுபெறும்போது நூறு சர்வதேச ஆராய்ச்சி சஞ்சிகைகளில் உள்ள ஆய்வுக்கட்டுரைகளை மகன்/மகளுக்கு விட்டுச்செல்வதை விட நூறு கோடி மதிப்புள்ள சொத்தையோ/கம்பெனியையோ விட்டுச்செல்ல வேண்டும் என்ற சிந்தனையுள்ள மாணவிகள் வேளாண் தொழில்துறையில் நுழைவது மிகவும் நல்லது. கேரியர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எந்த வரையறையும் இல்லை. த்ரில் இல்லாத ஒரு சோகையான, சோம்பேறி வாழ்க்கை வாழவா பிறந்திருக்கிறோம்?

அக்ரோ இண்டஸ்ட்ரி சார்ந்த வேலைவாய்ப்புகளைத் தேர்ந்தெடுப்பது என்று முடிவுசெய்யும் மாணவிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில விசயங்கள்:

1) படிப்பு முடிந்தததும் முற்றிலுமாக கல்லூரி/பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேற வேண்டும். அடிக்கடி அங்கு செல்வதை, விடுதி அறைகளில் தங்குவதை, குறிப்பாக பிஎச்டி படிக்கும் தோழிகளின் சகவாசத்தைத் தவிர்க்க வேண்டும். கல்யாணம் ஆகும்வரை கற்போம், கல்யாணம் ஆனபிறகு கற்பிப்போம் என்ற கொள்கையுடைய தோழிகளுடன் கண்டிப்பாக சேரவே கூடாது.

2) பேராசிரியர்கள் பாடம் சொல்லித்தர மட்டுமே தகுதியானவர்கள். வாழ்க்கைப் பாடத்தை வெளியில்தான் கற்க முடியும். எனவே படிப்பு முடிந்தபிறகு – டெக்னிகல் விசயங்களைத் தவிர – அடிக்கடி பேராசிரியர்களிடம் ஆலோசனை கேட்பதை முற்றாக நிறுத்திவிட வேண்டும். (ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி என்று அக்ரி பிசினஸ் பேராசிரியரிடம் சென்று கேட்பதற்குப் பதிலாக சும்மாவே இருந்துவிடலாம். தெரிந்தால் அவர் பண்ணியிருக்க மாட்டாரா?)

3) ஓர் அலைபேசி எண்ணைத் தொடர்ந்து வைத்திருக்க வேண்டும். ஏழு நம்பர் வைத்திருந்தாலும் நீங்கள்தான் எடுத்து பதில் சொல்ல வேண்டும் என்ற புரிதல் இருந்தால் சரி.

4) தகுதியான நபர்களை – ஆண், பெண் என்ற பாரபட்சம் இல்லாமல் – முடிந்தவரை நேரில் சென்று சந்திக்கப் பழக வேண்டும். அவர்கள் சொல்லும் சில தகவல்கள் உங்கள் எதிர்காலத்தையே மாற்றியமைக்கலாம். நமக்குத் தேவையானதை நாம்தானே தேட வேண்டும். வீட்டில் வந்து யார் சொல்லிவிட்டுப் போவார்கள்?

5) ஒவ்வொரு ஆண்டும் புதிதாக ஏதாவது ஒன்றைக் கற்க வேண்டும். படிப்பு மட்டுமே அல்ல – புகைப்படக்கலை, போன்சாய், மலையேற்றம் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

6) வாசிப்பு மிகவும் முக்கியம். செய்தித்தாள்கள் தவிர பொதுவான புத்தகங்களை மாதம் ஒன்றாவது படித்திட வேண்டும்.

7) பைக், கார் ஓட்டுவது இன்று அத்தியாவசியம். பாதுகாப்பாக வாகனம் ஓட்ட கற்றுக்கொள்ள வேண்டும்.

8) புதிதாக தொழில் ஆரம்பித்தவர்கள், வெற்றிகரமாக நடத்துபவர்கள் மட்டுமல்லாது ஏதோ காரணத்தால் தொழிலை மூடியவர்களையும் தேடித்தேடி சந்தித்து உரையாட வேண்டும். அந்த உரையாடல்களால் கிடைக்கும் ஞானத்தை எந்த பவர்பாய்ன்ட்டாலும் உங்களுக்கு வழங்கிட முடியாது.

9) தேவையில்லாத வாட்சப் குழுக்கள்,கெட்-டுகெதர், மீட்-அப், ஹேங்ஓவர்-களில் இருந்து வெளியேறிட வேண்டும். சில வருடங்கள் ஏற்கனவே உங்களுடன் பழகிய நண்பர்களுடன் குறைவான தொடர்பில் இருப்பதில் தவறில்லை. அவர்களுடன் touch-இல் இல்லை என்பதால் நீங்கள் யாருடனும் பழகாமல் aloof ஆகச் சுற்றுகிறீர்கள் என்றாகிவிடாது.

10) தொழில் தொடங்கும் எண்ணம் இருந்தால் அந்த லைனில் உள்ளவர்களை அணுகி ஆலோசனை பெற்று உடனே ஆரம்பித்திட வேண்டும். ஒருவேளை அது தோல்வியடைந்தாலும் கவலைப்படக்கூடாது. Project பெயில் ஆகிவிட்டது என்று தூக்கிப்போட்டுவிட்டு அடுத்ததற்கு நகர வேண்டும். தேங்கக்கூடாது, We have to move on.

11) வேலை தேடுவதாக அல்லது மாறுவதாக இருந்தால் அந்தந்த துறைகளில் இருப்பவர்களைத் தொடர்புகொண்டு அதற்கான முறையான வழிமுறைகளில் செய்ய வேண்டும். வாட்சப்பில் சி.வி. அனுப்புவது போன்றவற்றைத் தவிரக்க வேண்டும்.

12) இன்புட் இண்டஸ்ட்ரியில் வேலைக்கு எடுக்க மாட்டேங்கிறார்கள் என்று உங்கள் தோழிகளிடமும், சீனியர்களிடமும், உதவிப் பேராசிரியர்களிடமும் புலம்பும் நேரத்தில் நாலு கம்பெனிக்கு விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே அதில் இருப்பவர்களின் சிபாரிசைக் கோரலாம். உங்கள் ஹாஸ்டலுக்கு, கேன்டீனுக்கு வந்து உங்களைப் பெயர்சொல்லி அழைத்து யாராவது வேலை கொடுப்பார்களா?

13) மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். உயர்ந்த பதவிக்கோ, மிகப்பெரிய கம்பெனிக்கோ போக முடியவில்லையே என்ற வருத்தமெல்லாம் தேவையே இல்லை. நாளை என்ன நமக்காக இருக்கிறது என்பது யாருக்குமே தெரியாது. அதனால் அடுத்த ஐந்தாண்டு, பத்தாண்டு திட்டங்களைத் தீட்டி அதை நோக்கி பயணிக்க வேண்டும்.

14) Relationship இல்லாமல் யாரும் இல்லை. காதல் தோல்வி, கல்யாண ஏக்கம் போன்றவற்றை மாலை ஆறு மணிக்குப் பிறகு மட்டுமே வைத்துக்கொள்ள வேண்டும். பகல் நேரங்களில் சுறுசுறுப்பாக உருப்படும் வழியைப் பார்க்க வேண்டும்.

15) ஒவ்வொரு சூழ்நிலையையும் handle செய்ய அசாத்தியமான துணிச்சல் வேண்டும். “இந்த ஜாப் உனக்கு செட் ஆகாதும்மா” என்று சொல்லப்பட்டபோது “வேலை என்னன்னு மட்டும் சொல்லுங்க, என்னால செய்ய முடியலன்னா நானே போயிடறேன்” என்று கேட்டு, அதை சவாலாக எடுத்துக்கொண்டு வேலைக்கு வந்த பல பெண்கள் இன்றளவும் மார்க்கெட்டில் சிறப்பாக பணிபுரிகின்றனர். பயந்தாங்கொள்ளிகளுக்குத்தான் சொல்வதற்கு ஆயிரம் காரணம் இருக்கும். துணிந்தவர்களுக்கு அதை செய்துகாட்ட வேண்டும் என்ற ஒரே காரணம் மட்டுமே.

ஒரு வேலை, சம்பளம், கல்யாணம், குழந்தைகள், கொஞ்சூண்டு சேமிப்பு, ஆயிரம் சதுர அடியில் ஒரு வீடு என்று வாழ்ந்துவிட்டு செத்துப் போய்விடுவோமா? ரிட்டயர் ஆனபிறகு மெல்ல கதவைப் பிடித்து, தலையணையை சாய்த்து வைத்து உட்கார்ந்து, டிரைவரை ஓட்டச்சொல்லிவிட்டு பின்சீட்டில் சாமி பாட்டு கேட்டுக்கொண்டு பயணிப்பதற்கு பென்ஸ் இருந்தால் என்ன ஃபியட் பத்மினி இருந்தால் என்ன?

படித்து முடித்து இருபத்தைந்து வயதில் கேரியரை ஆரம்பித்து, நாற்பத்தைந்து வயதில் எவரெஸ்ட் பேஸ் கேம்புக்குச் சென்று சும்மா காபி குடித்துவிட்டு திரும்பி வருமளவுக்குப் பொருளாதார சுதந்திரமும், அன்றாட வேலைகளில் இருந்து ஓய்வும் பெற்றிடுமளவுக்கு சுறுசுறுப்பாக இயங்கிட வேண்டும். எதற்காகவும் தேங்கிடவே கூடாது. Now, get up and move. Keep going…

பசுமை ஆர்வலர், இயற்கை ஆர்வலர், சுற்றுச்சூழல் ஆர்வலர் என்ற ஒரு மேட்டிமைத்தனமான புதிய சாதி

கேள்வி: பசுமைப் போராளி, கார்ப்பரேட் எதிர்ப்புப் போராளி, இயற்கை விவசாயப் போராளி, சுற்றுச்சூழல் ஆர்வலர் போன்ற அடையாளங்களின் பின்னணியில் சாதி ஒளிந்திருக்கிறதா?

பதில்: கிராமப்புறத்தின் பழைமை மாறாமல் இயற்கைக்குத் திரும்புதல் என்பதே சாதிய அடுக்குகளுக்கு ஏற்ப வாழ்வதற்கான அழைப்புதான். பசுமைப் போராளி ஆவதிலும், இயக்கம் அல்லது அமைப்பு நடத்திவதிலும் சாதிய படிநிலைகள் தெளிவாக உண்டு.

இயற்கை விவசாயம் + கார்ப்பரேட் எதிர்ப்பு குறித்த அமைப்புகளில் சாதிக்கு ஏற்பவே பிரபலத்தன்மையும், வசூலும் அமைகிறது.
உங்களுக்குத் தெரிந்த பிரபலமான ஐந்து ஆர்கானிக் ஆக்டிவிஸ்ட் அமைப்புகளைக் கவனித்துப் பார்த்தீர்களேயானால் அதன் நிறுவனர்கள் அல்லது பெருந்தலைகள் பிராமணர்களாக இருப்பதைக் காணலாம். அபூர்வமாக அப்படி இல்லாவிட்டாலும் அசைவ உணவு எதிர்ப்பு, கோசாலை, விவசாயத்தைக் காப்பதில் கோவில்களில் இருக்கும் பாரம்பரிய வழிபாட்டு முறைகளில் முக்கியத்துவம், நீட் தேர்வு ஆதரவு, மெரிட் சிஸ்டம் போன்ற கருத்துகளில் தாராளமாகப் புழங்குபவர்களாக இருப்பர்.

அத்தகைய பிராமணப் பின்புலமுள்ள அமைப்புகளுக்கே பெரும்பாலான நன்கொடை வருவாய்கள், புகழ், பெருமை எல்லாம் கிடைக்கும். தோற்றாலும் வென்றாலும் நல்ல விளம்பரமும், நன்கொடைகளும் கணிசமாக கிடைக்கும் என்பது மாதிரியான ஏரியா எனில் இந்த அமைப்புகள் இறங்கிவந்து வழக்குத் தொடுக்கும். பெரும்பாலும் கார்ப்பரேட் கம்பெனிகளை இவை வழக்குக்கு இழுக்குமே தவிர அரசாங்கத்தை எதிர்த்து வழக்குத் தொடருவதைக் கவனமாகத் தவிர்க்கும்.

பிராமண அடையாளங்களைத் தாங்கிய இந்த அமைப்புகள் அப்பழுக்கற்ற தங்கங்களாக உருவகப்படுத்துப்பட்டு சூத்திர வேசிமகன்களிடம் விளம்பரப்படுத்தப்படும். மனுஸ்மிரிதியால் தேவடியாப்பயல் என்று விளிக்கப்படும் சூத்திர ஆக்டிவிஸ்டுகள் நடத்தும் ஒன்றிரண்டு அமைப்புகளுக்கு அரசாங்கத்தை எதிர்த்து நடத்தும் வழக்குகள், பெரிய கவனம் கிடைக்காத ஆனால் நீதிமன்றங்களுக்கு செருப்புத் தேய நடக்கவேண்டிய விவகாரங்களை எல்லாம் கொடுத்து வழக்குத் தொடரும்படி, பிரச்சாரம் செய்யும்படி அறிவுறுத்தப்படும். இவர்களும் செருப்பைத் தூக்கி தலையில் வைத்து விட்டிருக்கிறார்கள் என்றே புரியாமல் தமக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்திருப்பதாகக் கருதி கொஞ்சம் கொஞ்சமாகப் போராளி ஆகிவிடுவார்கள்.

மஞ்சளுக்கும், வேம்புக்கும் அமெரிக்கா காப்புரிமை பெற்ற விவகாரத்தில் வந்தனா சிவா அம்மையாருடன் நம்மாழ்வார் இணைந்து போராடி வென்றதாக ஐயாவின் வானகம் ரிசார்ட்டில் இயற்கை விவசாயப் பயிற்சி பெற்ற பலரும் சொல்வதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் வேப்பங்கொட்டையில் இருந்து எடுக்கப்படும் Azadirachtin என்ற பூச்சிக்கொல்லியின் ஒரு பகுதி காப்புரிமையை ஜெர்மானிய கம்பெனி ஒன்றிடம் இராயல்ட்டி கட்டியே இந்தியாவில் பிரபல நிறுவனங்கள் வாங்கி விற்பனை செய்கின்றன என்பதைத் துறையில் புழங்குபவர்கள் அறிவர்.

தமிழகத்தின் குறிப்பிடத்தக்க இயற்கை வேளாண்மை பிரச்சாரகர்கள் பிராமணர்களாக இருந்தாலும் சூத்திரர் ஆன நம்மாழ்வாரின் வானகம் ரிசார்ட் ஆனது சமகாலத்திய வேளாண் பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்கவல்லதாக நிறுவப்பட்டிருப்பது பெரிய நகைமுரண் கிடையாது. ஐயாவின் கோசாலை, கோசாணம், பாரம்பரிய மருத்துவ ஞானம் குறித்த உரைகளைக் கேட்டவர்களுக்கு வர்ணாசிரம அமைப்பின்மீது அவருக்கு உள்ள அன்பை அறிவார்கள்.

இயற்கை வேளாண்மை சார்பான அமைப்புகள் மட்டுமல்லாது விவசாயிகளின் பல்வேறு அமைப்பு தலைவர்கள் வெளிப்படையாகவே சாதிய ஆதரவாளர்களாவர். மரபுக்குத் திரும்புதல், பாரம்பரிய வாழ்வியல் முறை என்றாலே சாதிக்குத் தக்க வாழ்வியல் முறை என்பதே இந்தியாவில் பொருளாகும். விவசாயத்தைக் காப்போம் என்பதற்கும் “விவசாயிகளைக் காப்போம்” என்பதற்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு என்பதை உணர்வது முக்கியமானதாகும்.

விவசாயப் பல்கலைக்கழகத்தில் முறையாகப் பயின்று பட்டம் பெற்றவர்கள் ஏன் சொல்லிக்கொள்ளும்படியாக தொழில்களை ஆரம்பித்து வெற்றி பெறுவதில்லை?

விவசாயப் பல்கலையில் பல பட்டப்படிப்புகள் இருந்தாலும் புழங்குவதற்கு எளிதாக அக்ரி என்று மட்டும் இப்போதைக்கு அழைத்துக் கொள்வோம். அக்ரி ஒருவர் தொழில் முனைவோர் ஆவதற்கு சில காரணங்களே இருந்தாலும், ஆகாமல் இருப்பதற்கு பல காரணங்கள் உண்டு.

1) கல்லூரியில் சேரும்போதே அக்ரி படித்தால் ஐஏஎஸ் ஐபிஎஸ் ஆகலாம், பாங்கி அதிகாரி ஆகலாம், அக்ரி டிபார்ட்மெண்ட்டில் அதிகாரி ஆகலாம், குரூப் 1 போகலாம், பெரிய புள்ளி ஆகலாம், நல்ல முரட்டு இடத்தில் கல்யாணம் பண்ணலாம், அப்புறம் ஜாலியா இருக்கலாம் என்று பெற்றோர்களும், உற்றோர்களும் ஒரு மாணவனை மூளைச்சலவை செய்தே சேர்க்கின்றனர். நன்றாக சம்பாதிக்கத்தானே இதெல்லாம் என்று கடைசி வரைக்கும் பணத்தின் முக்கியத்துவத்தை யாரும் உடைத்துப் பேசுவதில்லை.

2) சிலபஸ் முழுவதும் பல்வேறு அரசாங்கத் துறைகளில் வேலை செய்ய பணியாளர்களை உருவாக்கும் வண்ணமே அமைந்துள்ளது. தொழில்முனைவோர் குறித்த தாள்களெல்லாம் ஒப்புக்குசப்பான் மாதிரியான ஜல்லியடிக்கும் சமாச்சாரம். மற்றபடி பல்கலைக்கழக உணவகம், நகலகம் என எங்கேயும் மாணவர் கிளப்கள் பகுதி நேரமாக எடுத்து வியாபாரம் செய்ய அனுமதிப்பதில்லை.

3) பேராசிரியர்களும், சீனியர்களும் ஒரு மாணவன் UG சேர்ந்ததும் எப்படி PG சேருவது, PhD சேருவது, எப்படி உதவித்தொகை பெறுவது, நுழைவுத்தேர்வுகளில் வெற்றிபெறுவது என்பது குறித்து வண்டி வண்டியாக அறிவுரைகள் வழங்குகின்றனர். மேலும் எப்படி சொந்த சாதியில் ஃபிகர் தேற்றுவது, பிஎச்டி முடித்து அங்கேயே RA-வாகி இருவரும் அங்கேயே உதவிப் பேராசிரியராகி, ஒன்றாக ஆராய்ச்சி பண்டு வாங்கி செட்டில் ஆவது என்பதற்குக் கிடைக்கும் வாய்மொழி ஆலோசனைகளை பதிவு செய்தால் ஒவ்வொன்றும் நானூறு பக்கத்துக்கு குறையாமல் மூன்று தொகுதிகள் புத்தகம் வெளியிடலாம்.

4) உயர்கல்வி பயில்வேன், சிவில் சர்வீஸ் எக்சாம் எழுதுவேன், ARS, குரூப் 1, இதர பிற யூபிஎஸ்சி தேர்வுகளில் எதுவும் முடியாதபோது வங்கி அதிகாரி அல்லது அரசாங்க வேளாண்துறை அதிகாரி ஆவதற்கு முயற்சி செய்வேன், வெளிநாடுகளுக்குச் சென்று படிப்பேன்/அங்கேயே ஆராய்ச்சியாளராகத் தொடர்வேன், ஆனால் இங்கே உதவிப் பேராசிரியர் வேலை கிடைத்தால் வந்துவிடுவேன். இஃது எதுவும் செட் ஆகவில்லை என்றாலும் தற்காலிக உதவியாளர் வேலைகள் ஏதாவது செய்வேன். இதில் எதுவுமே முடியாதபோது சொந்தமாகத் தொழில் தொடங்கலாமா என்று யோசிப்பேன் என்ற மனநிலையிலேயே 99% மாணாக்கர்கள் அக்ரி படிக்கின்றனர். அதாவது வேலைவாய்ப்பு கிடைத்தால் வேலை செய்வேன். கிடைக்காவிட்டால் வேலை தேடுவேன். சுய தொழில் பற்றிய எண்ணமே மனதில் எழாத அளவுக்கு பார்த்துக் கொள்வது மட்டுமே லட்சியம்.

5) வெளியில் சென்றால் வேலை எதுவும் கிடைக்காது என்று பல்கலைக்கழகத்தைவிட்டு வெளியே சென்றே பார்க்காத ஒரு கூட்டம் மாணவர்களை உயர்கல்வி நோக்கி உந்தித் தள்ளுவது. UG முடித்து வெளியேறுபவர்கள் பாக்கியவான்கள். வாழ்க்கையில் நீண்ட அனுபவத்தையும், போதுமான காலத்தையும் கையில் வைத்துக்கொண்டு கரையேறுகிறார்கள். PG படித்துவிட்டு வெளியேறலாம் என்று நினைப்பவர்களைப் பயமுறுத்தி, ‘பிஎச்டி பண்ணலன்னா ஒரு வேலையும் கிடைக்காது, உருப்படாம போயிடுவ’ என்று பயமுறுத்த ஒரு பெரும் கூட்டம் உண்டு.

6) ஒரு ஜெராக்ஸ் கடை நடத்துவது எப்படி என்று கூட தெரியாத பேராசிரியர்கள் என்ட்ரபிரீனர்ஷிப், மார்க்கெட் இண்டெலிஜென்ஸ், டெக்னாலஜி இன்குபேட்டர், பிசினஸ் வென்ட்ச்சர்ஸ் என்று எல்லா இடத்திலும் உட்கார்ந்துகொண்டு தாலி அறுப்பது. இவர்களிடம் பயின்றுவிட்டு வரும் மாணாக்கர்கள் பாங்கி கரண்ட் அக்கவுன்ட், ஜிஎஸ்டி நம்பர், ஐ.டி. ரிட்டர்ன்ஸ் என்பதெல்லாம் எதற்கு என்றுகூட தெரியாமல் வந்து பிசினஸ் ஆரம்பிக்கனும் என்று கேட்கிறார்கள்.

7) தனியார் இடுபொருள் நிறுவனங்களில் தயக்கமின்றி நுழையும் இளைஞர்கள் குறுகிய காலத்தில் முரட்டு சம்பளங்களை அடைந்துவிடுகிறார்கள். தங்களுடைய மனநிலையில் இருப்பவர்களையும் அடையாளம் கண்டு உள்ளே இழுத்துக்கொண்டு சென்றுவிடுகின்றனர்.

8) காதல் – இஃது உங்களுக்கு அபத்தமாகவும் தோன்றலாம். விவசாயக் கல்லூரிகளில் UG படிக்கும்போது பருவ தாகத்துக்குத் தீனி போட்டு தேக சாந்தி தேடிக்கொண்டவர்கள் யாருமே சொல்லிக்கொள்ளும்படியான தொழில்முனைவோர் ஆனதில்லை என்பது மரபு. காதல் மன்னன், காசனோவா ஆக இருந்து தொழிலதிபரான (ஆண்/பெண்) விதிவிலக்குகள் இருந்தால் தாராளமாக சுட்டிக்காட்டவும்.நமக்கு முன்னும் பின்னும் விவரம் தெரிந்த பல ஆண்டு அக்ரி மக்களையும், தொழில்களில் ஈடுபட்டு வெற்றி பெற்றவர்களிடமும் கிடைத்த நீண்ட உரையாடல்களில் இருந்து கணிக்கப்பட்டது. (உழவியல் துறையின் மரியாதைக்குரிய மூத்த பேராசிரியர் ஒருவர் எங்களுக்கு UG முதல்நாள், முதல் வகுப்பு எடுத்தபோது This is not a place to select your life partner என்று சொல்லி, வாழ்த்தி ஆரம்பித்தது இன்றும் நினைவில் இருக்கிறது).

படித்தவுடன் சிலர் பெற்றோர்களின் குடும்பத் தொழில்களைப் பார்க்க சென்றுவிடுகின்றனர். அவர்கள் அக்ரி படித்ததால் மட்டுமே தொழில் முனைவோர் ஆவதில்லை என்பதால் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம்.

பலவிதமான தனியார் நிறுவனங்களில் – இடுபொருள் விற்பனை மட்டுமல்லாது – நுழைபவர்களே பெரும்பாலும் சொந்த தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்ற திசையில் நகர்கின்றனர். அவர்களது தைரியம், தன்னம்பிக்கை, சந்தையில் மக்களை எதிர்கொள்ளும்போது கிடைக்கும் அனுபவம், பலரும் துணிச்சலாக இறங்கி இலாபமீட்டுவதைப் பார்ப்பதால் கிடைக்கும் உத்வேகம் தாண்டி, அவர்களிடம் இருக்கும் ஒருவிதமான வேலை பாதுகாப்பின்மையும் சுயதொழில் ஆரம்பிக்கக் காரணமாகிறது.

வேளாண் இடுபொருட்கள் விற்பனையில் இருக்கும் கணிசமான அக்ரி மக்கள் தனியார் நிறுவனங்களில் இருந்து வெளியில் வந்து தொழில் ஆரம்பித்தவர்களே. வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால் ஒரு கட்டத்தில் கம்பெனியில் மேல் மட்டத்தில் உள்ளவர்களோடு ஏற்படும் உரசல்களாலோ அல்லது கம்பெனியில் ஏற்படும் நிர்வாக மாறுதல்களின்போது தெருவில் விட்டுச் செல்லப்படும்போதோ கம்பெனிக்காக அஞ்சுக்கும் பத்துக்கும் உழைத்தது போதும் என்று ஒரு வைராக்கியத்தில் தொழில் ஆரம்பிக்கின்றனர். இந்த மாதிரியான ஆட்கள் பணத்தை இழப்பதில்லை; இவர்களிடம் வியாபாரம் செய்பவர்களும் பணத்தை இழப்பதில்லை. பணியிடங்களில் கையாடல் செய்து வெளியேற்றப்பட்டவர்கள் வேறு வழி இல்லாமல் தொழில் முனைவோர் ஆனதாகப் பெரிதாக ஏதும் காணோம்.

எந்தத் தொழிலையும் ஆரம்பிப்பதற்கு வயது ஒரு விசயமில்லை. ஆனால் வியாபாரம், பணம் குறித்த attitude மிகவும் முக்கியமானது. ரிஸ்க் எடுப்பதற்கான ஒரு நபரின் மொத்த தைரியமும், திட்டமிட்ட தெளிவும் home loan எடுக்கும்போது மொத்தமாக முடிவுக்கு வருகிறது. அடிநிலமும் இல்லாமல், கட்டடமும் இல்லாமல் நடு வானத்தில் நான்கு சுவர்களை சதுர அடி நாலாயிரம் ரூபாய் என தனது Form – 16-ஐ நம்பி வங்கியில் வட்டிக்கு வாங்கி அபார்ட்மென்ட் வாங்கும்போது ஒரு நபருடைய தொழில் முனைவோர் quotient முழுவதும் செத்து விடுகிறது. பின்னர் அவர்களாக உத்வேகம் பெற்று எந்தத் தொழில்களையும் ஆரம்பிப்பதில்லை. ஏதாவது அதீத காரணங்களால் வேலை பறிபோனால் தொழில் ஆரம்பிக்க வாய்ப்புண்டு.

அரசாங்க முன்னெடுப்புகளில் நபார்டு வங்கியின் Agri clinics & Agri Business Cenrltres என்ற திட்டம் கணிசமான அக்ரி மக்களைத் தொழில் ஆரம்பிக்க உதவி வருகிறது. இருபதுக்கும் மேற்பட்ட தொழில்களில் ஐந்து இலட்சம் முதல் ஒரு கோடி வரைக்குமான கடனில் 35% பொதுப் பிரிவினருக்கும், 44% பெண்களுக்கும், பட்டியலினத்தவருக்கும் மானியம் உண்டு. ஆரம்பித்து இரண்டு வருடங்கள் நல்லபடியாக நடத்தப்படும் தொழில்களுக்குத் தரப்படும் மானியம் ஓர் அருமையான ஊக்கத் திட்டம்.

மற்றபடி துணைவேந்தர், பதிவாளர், கமிசனர், செக்ரட்டரி, நபார்டு உயரதிகாரி போன்ற அரசாங்க உயர் பதவிகளில் இருந்து ஓய்வுபெற்றவர்கள் தொழில் ஆரம்பித்து வியாபாரம் செய்தாலும் அவர்களைத் தொழில் முனைவோர்களாக யாரும் கருதுவதில்லை. அது வியாபாரமே கிடையாது. அவர்களது வாரிசுகள் அக்ரோ இண்டஸ்ட்ரி ஆரம்பித்து நடத்துவதும் ஒரு வகையான கொடுக்கல்வாங்கல் கணக்கின் அடிப்படையில்தான்.

அறுபது, எழுபதாயிரத்துக்கும் அதிகமான சம்பளம் பெறும் அரசாங்க வேலைகளில் இருக்கும் அக்ரி மக்கள் ஏழெட்டு வருடங்களில் ஒருவகையான மனச்சோம்பலை அடைந்துவிடுகின்றனர். அவர்களுக்கு சிறு சிறு வேலைகள் கூட கீழ்நிலைப் பணியாளர்களால் செய்து தரப்பட்டு விடுவதால் எதையாவது தாமாக முன்வந்து செய்யும் ஆர்வத்தை இழந்து இளம் தொப்பையுடன் சோர்வாகி விடுகின்றனர். யாராவது புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைப் பார்க்கும்போது, கேள்விப்படும்போது ஒருவித சலிப்புடனேயே பேசுவதைக் காண முடிகிறது. வங்கியில் இருக்கும் அக்ரி மக்களுக்கும் இது பொருந்தும். அபூர்வமாக அரசாங்க வேளாண்மைத்துறையில் இருக்கும் சிலர் ஓய்வு நேரங்களில் வியாபாரம் செய்து பார்க்கும் முயற்சியில் இறங்குகின்றனர்.

வேளாண் பல்கலைக்கழகத்தில் பயின்று தொழிலதிபர் ஆனவர்கள் குறித்து எந்தவொரு தரவுகளும் எங்கேயும் இருப்பதாகக் காணோம். IIM-யில் பயின்று தொழிலதிபர் ஆனவர்களின் வெற்றிக்கதைகளை ராஷ்மி பன்சால் போன்றவர்கள் புத்தகமாகவே வெளியிட்டிருக்கின்றனர். அந்த புத்தகமும் நல்ல வியாபாரம் ஆகியிருக்கிறது.

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் வெளிவரும் மருத்துவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் அக்ரி மக்களின் எண்ணிக்கை குறைவு, வேலைவாய்ப்பும் அதிகமாக இருந்தது. இன்று பல தனியார் கல்லூரிகள் திறக்கப்பட்டு அதிக எண்ணிக்கையில் பட்டதாரிகள் வெளிவருவதால் கணிசமான மக்கள் தொழிலதிபர் ஆவார்கள் என்று நம்புவோம்.

அக்ரி படித்து ஏன் ஒரு பயலும் வியாபாரம் பண்ண வர மாட்டேங்கிறான் என்று என்னதான் நமக்கு நாமே கழுவி ஊற்றிக்கொண்டாலும் நமக்கு எல்லாம் இருக்கும் ஒரே ஆறுதல் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம். எத்தனை வெட்னரி டாக்டருங்க சொந்தமா வியாபாரம் பண்றாங்கன்னு பாருய்யா என்று சொல்லி சமாதானம் செய்து கொள்வோமாக!

வேளாண் விளைபொருட்களுக்கு அரசாங்கமே விலை நிர்ணயம் செய்வது சாத்தியமா?

கேள்வி: வேளாண் விளைபொருட்களுக்கு அரசாங்கம் விலையை நிர்ணயம் செய்து விவசாயிகளுக்கு இலாபம் கிடைக்க செய்திட வேண்டும் என்று அடிக்கடி சொல்லப்படுகிறது. அது சாத்தியமா? ஏன் எந்த அரசாங்கமும் அதை செய்ய முன்வரவில்லை?

பதில்: அந்த, இந்த, எந்த அரசாங்கத்தாலும் அதை செய்ய முடியாது. அடுத்த 20 வருடங்களில் அதற்கான உட்கட்டமைப்பில் பாதி ஏற்படுத்தினாலே மாபெரும் சாதனையே.

விவசாயம் இன்னும் முறைப்படுத்தப்படாத, போதுமான எந்த தரவுகளும் இல்லாத, வரி இல்லாத வருமானமுடைய கடைநிலைத் தொழிலாகவே இருக்கிறது. அதில் மாபெரும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், அரசியல், சூழ்ச்சிகள் என எல்லாம் உண்டு. ஜாதி இல்லாமல் இந்தியாவில் விவசாயம் என்ற தொழில் இல்லை. அதனுடன் இணைந்த வர்ணாசிரம பேதங்களும் அதனடிப்படையில் இருக்கும் சுரண்டல்களும் கொஞ்சம் கொஞ்சம் விவசாயம் என்ற பெயரில் தாக்குப்பிடிக்க வைத்தன.

இன்று கல்வி அனைவருக்குமானது என்றாகிவிட்டபடியால் பல்வேறு தொழில் வாய்ப்புகள் – கோவில் அர்ச்சகர் தவிர்த்து – அனைத்து சாதியினருக்கும் கிடைப்பதால் விவசாயத் தொழிலிலிருந்து வெளியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதன்படி ஆட்கள் குறைகிறார்கள் என்றால் இயந்திரங்களின் எண்ணிக்கை பெருகுகிறது; பல சிறு, குறு
விவசாயிகளும் விவசாயத்தை விட்டு வெளியேறுகிறார்கள் என்றால் விவசாயிகளின் எண்ணிக்கை குறையத்தானே வேண்டும். குறைவான விவசாயிகள் நிறைய மக்களுக்கான சந்தைக்கு உற்பத்தி செய்து தருகிறார்கள் என்றால் இலாபம் அதிகரிக்கத்தானே வேண்டும்? அப்படியும் நடக்கவில்லையே ஏன்?

காரணம், நம்மிடம் வேளாண்மை குறித்த data என்ற ஒன்று உருப்படியாக இல்லை. பொய்த் தரவுகளின் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவுகள் எதிர்பார்க்கும் விளைவுகளைத் தராது. அவை வெறும் ஊகங்களாகவே இருக்கும். ஊகங்கள் எதிர்மறை விளைவுகளையும் தரும். உதாரணமாக, சில ஆண்டுகளுக்கு முன்னர் உடுமலைப்பேட்டை, பல்லடம் சுற்றுவட்டாரத்தில் அரசு வேளாண்மைத்துறை சமர்ப்பித்த பரப்பளவு கணக்கின்படி தோராயமாக 200 டன் மக்காச்சோள விதைகளே விற்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நண்பர் ஒருவர் மேலாளராக பணிபுரிந்த நிறுவனம் மட்டும் 600 டன் விதைகளை விற்றது. மற்ற முன்னணி நிறுவனங்கள், லெட்டர்பேட் நிறுவனங்கள் எல்லாம் சேர்த்து 800 டன் விதைகள் விற்றிருக்கும். ஆனால் அரசாங்க கணக்கீட்டின்படி இத்தனை ஆயிரம் டன் மகசூல் வரும் என்று ஊகித்து இன்ன விலைக்கு மக்காச்சோளம் விற்கும் என்று எதையாவது சொல்வதும், actual மகசூல் பலமடங்கு அதிகமாக வந்து விலை அதளபாதாளத்திற்கு போவதும் இப்படித்தான்.

சிலநேரங்களில் அரசாங்கப் புள்ளிவிவரம் ஒன்றைச் சொல்லும். ஆனால் அந்த பயிருக்கான பரப்பளவு அதில் பாதிகூட இருக்காது. சில வருடங்களுக்கு முன்னர் பருப்பு விலை எகிறியதை நினைவில் கொள்க. சின்னச்சின்ன வியாபாரிகள் முதல் பெரிய சேட்ஜீக்கள் வரை தங்களால் இயன்ற அளவு சரக்கை இருப்பு வைத்திருப்பார்கள். அஃது எந்த டேட்டாவிலும் வராது. உண்மையில் விலை ஏறினால் இந்த சரக்குகள் அந்த இழுவையில் வெளியேறி சந்தையில் கலக்கும். அதனால் நுகர்வோருக்கு ஓரளவுக்கு இலாபமே. இதைப் பதுக்கல் என்று கூற முடியாது. ஒரு பொருள் அடிமாட்டு விலைக்கு விற்கும்போது நிறைய வாங்கி இருப்பு வைத்து விலை ஏறும்போது விற்பதைப் பதுக்கல் என்று அழைப்பதே தவறு. உற்பத்தி அளவுக்கதிகமாக இருக்கும் பொருட்களில் எல்லாவற்றையும் வாங்கி இருப்பு வைத்து செயற்கையாக தட்டுப்பாட்டை உருவாக்க முடியாது. அடிமாட்டு விலையில் அவர்கள் வாங்கவில்லை என்றால் அவற்றை உற்பத்தி செய்தவர் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு குப்பையில்தான் கொட்ட வேண்டும். அதே பொருள் விலை ஏறுகையில் இந்த so called பதுக்கல் சரக்கு என்ற ஒன்றும் இல்லாவிட்டால் நுகர்வோருக்கு பெரும் செலவு ஏற்படும். கையிலிருக்கும் உபரி குறைவதால் ஒட்டுமொத்த வாங்கும் திறன் குறையும்; மேற்கொண்டு என்ன ஆகும் என்பதை பல பொருளாதார நிபுணர்கள் அவ்வப்போது விளக்கி வருகிறார்கள். ஆனால் நமக்கு வறட்டு கம்யூனிசம் அல்லது முரட்டு முதலாளித்துவம்தான் பிடிக்கிறது!

காய்கறிகள் விலை ஏறும்போதெல்லாம் குளிர்பதன கிட்டங்கிகள் இல்லை என்று சொல்லப்படுகிறது. நமக்கு உற்பத்தியின்மீது எந்த கட்டுப்பாடும் இல்லை என்பதால் குளிர்பதன கிட்டங்கி கான்செப்ட் எப்படி எடுபடும் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. கிலோ பத்து ரூபாய்க்கு விற்கிறது என்பதற்காக மிளகாயைக் குளிர்பதனக் கிடங்கில் போட்டு மூன்று மாதம் வைத்திருந்து எடுக்க நினைக்கையில் வெளிச்சந்தையில் பத்து ரூபாய்க்கே விற்பதாக வைத்துக்கொள்வோம். மேலும் இரண்டு மூன்று மாதங்கள் பொறுமையாக கிடங்கிலேயே வைத்திருக்கலாம். வெளிச்சந்தையில் பத்து, பன்னிரெண்டு ரூபாய்க்கே விற்றால் ஐந்தாறு மாதங்கள் கிடங்கில் வைத்திருந்த வாடகைக்கு என்ன செய்வது? இதில் எல்லாமே ஊகத்தின் அடிப்படையிலான ரிஸ்க்-தான். டேட்டா என்ற ஒன்று இருந்தால்தானே! இரண்டு மாதம் கழித்து விலை ஏறும் என்றால் விவசாயிகளும் உற்பத்தி செய்து குவித்துவிடுவார்களே.

விவசாயிகளும் எதிலும் முறையாக பதிவு செய்துகொள்வதெல்லாம் கிடையாது. அப்படியே ஏதாவது சங்கம், சொசைட்டி என்று ஏதாவது வந்தாலும் சில வருடங்களிலேயே அந்த பகுதியில் உள்ள பெருவாரியான சாதியினரால் அவை hijack செய்யப்படுவதால் பலர் உதிரிகளாகவே நின்றுவிடுகிறார்கள். உழவு ஓட்டி, பார் அமைத்து லேட்டரல் குழாய்களை இழுத்துவிட்ட பின்னர்தான் பல விவசாயிகள் என்ன வெள்ளாமை வைப்பது என்றே முடிவு செய்கின்றனர். ஊரில் எல்லோரும் வாழை என்றால் நாமும் வாழை, எல்லோரும் வெங்காயம் என்றால் நாமும் வெங்காயம், எல்லாரும் தக்காளி என்றால் நாமும் தக்காளி. இல்லாவிட்டால் சந்தையில் அப்போதைக்கு எதற்கு விலை இருக்கிறதோ அதையே நாமும் பயிர் செய்வோம் என பலரும் இறங்குவார்கள். என்ன பயிர் சாகுபடி செய்யப் போகிறோம் என்று கடைசிநேரம் வரைக்கும் ஏகப்பட்ட விவசாயிகள் முடிவே செய்வதில்லை என்பதால் எந்த commodity என்ன விலைக்கு விற்கும் என்று யாராலும் ஊகிக்க முடிவதில்லை.

பண்டிகைகளை ஒட்டி சில பண்டங்கள் நல்ல விலைக்கு விற்கும் என்பது நீண்டகாலமாக புழங்கிவரும் ஒரு கருதுகோள் (hypothesis). உதாரணமாக, ஓணம் பண்டிகைக்கு வாழை, செண்டுமல்லி என சிலவற்றுக்கு விலையேற்றம் இருக்கும். அதையும் இன்று பல விவசாயிகள் அடித்து நொறுக்கிவிட்டார்கள்; எந்த பண்டிகையையும் விட்டு வைப்பதில்லை.

வட இந்தியாவில் ஜூன் மாதம் கரிஃப் பருவம் தொடங்குவதால் அறுவடை சமயத்தில் இருக்கும் பயிர்கள் பெரும்பாலும் இருக்காது என்பதால் தமிழகத்தில் ஜூன் மாதத்தில் வேளாண் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும். பள்ளி, கல்லூரிகள் திறப்பதாலும், வைகாசி மாதத்தில் பல முகூர்த்தங்கள் இருப்பதாலும் நல்ல விலை கிடைத்துவந்தது. அதை சரியாக புரிந்துகொண்ட கிழக்கிந்திய விவசாயிகள் முரட்டுத்தனமாக சாகுபடி செய்து இங்கே ஏற்றுமதி செய்து, ஜூன் மாதம் வருடந்தோறும் தமிழகத்தில் இயல்பாகவே விலையேற்றம் இருக்கும் என்ற கருதுகோளை இந்த ஆண்டு உடைத்து விட்டனர்.

சாலை வசதிகள் பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்னர் இருந்ததைக் காட்டிலும் இன்று பலமடங்கு உயர்ந்துவிட்டது என்பதை வெகுசன பத்திரிகைகளின் கட்டுரையாளர்களும், அதிகாரிகளும் புரிந்துகொள்வதில்லை. வாகனங்களின் திறன்களும் பலமடங்கு உயர்ந்துவிட்டது. பத்து டன் காய்கறிகளை ஏற்றிக்கொண்டு ஓர் இரவில் 700 கிலோமீட்டரை ஒரு லாரி கடக்கிறது. 100 கிமீ வேகத்திலேயே இடைவிடாது இயக்குகிறார்கள். கார்களில்கூட இந்த காய்கறி லாரிகளுடன் போட்டியிட இயலாது. Fastag வில்லை ஒட்டப்பட்ட சரக்குந்துகள் வாட்சப்பில் கிடைக்கப்பெற்ற லொக்கேஷனை கூகுள் மேப்ஸில் அந்தந்த மாநில ஓட்டுநர்களின் மொழியிலேயே துரத்திவந்து விடியும்போது டெலிவரிக்கு அணிவகுத்து நிற்கின்றன. ஒரிசா, சட்டீஸ்கரிலிருந்து கோயம்பேடு வருவதெல்லாம் இன்று சப்பை மேட்டர். இன்று நாசிக்கில் பறிக்கப்பட்ட தக்காளி நாளை மறுநாள் சென்னையிலுள்ள அபார்ட்மென்ட் ஏதாவது ஒன்றில் சாம்பாரில் கொதித்துக்கொண்டிருக்கும்.

முன்பெல்லாம் பட்டம் என்ற ஒன்று மிகவும் முக்கியமானது. இன்று வீரிய இரகங்களின் வருகையால் பட்டம் என்ற ஒரு வாரத்தையை உழவர்களே மறந்துவிட்டனர்! பல தனியார் நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு புதிய இரகங்களை சந்தையின் தேவைக்கேற்ப உருவாக்குகிறார்கள். ஆனால் அவை மரபணு மாற்றப்பட்டவையோ, உடலுக்கு தீங்கு தருபவையோ என்று அச்சப்படத் தேவையில்லை. அந்தக் காலம் மாதிரி இல்லாமல் திறமையான ஆட்களைத் தக்க வைத்துக்கொள்ள தனியார் நிறுவனங்கள் சம்பளத்தை வாரி வழங்குகின்றன. மென்பொருள் துறையினரை ஒப்பிட்டால் அதே வயதினர் வேளாண் ஆராய்ச்சி, அபிவிருத்தி மற்றும் விற்பனைத் துறைகளில் முரட்டு சம்பளம் பெறுகின்றனர். எண்ணிக்கையில் இவர்கள் குறைவு என்றாலும் கூர்மதியும், அயராத தன்னூக்கமும் உடையவர்கள் என்பதால் சந்தையின் போக்கைக் கவனித்து அதை எப்படியாவது நிரப்பிவிடுகின்றனர்.

விதைகள் விற்கும் அளவினை வைத்து மகசூலைக் கணக்கிட முடியுமா என்றால் அதுவும் இல்லை. மகசூல் கூடவோ, குறையவோ செய்வதற்கு இயற்கையும் ஒத்துழைக்க வேண்டும் என்பதோடு அவை எவ்வாறு dispose செய்யப்படுகிறது என்பதைக் கண்காணிக்கவோ கட்டுப்படுத்தவோ இயலாது என்பதால் இங்கும் ஊகமே மிஞ்சுகிறது. உதாரணமாக, கோயமுத்தூர், சேலம், திண்டுக்கல் பகுதிகளில் ஏக்கருக்கு இரண்டரை கிலோ வெண்டை விதை பயன்படுத்துவார்கள். விழுப்புரம் சுற்றுவட்டாரத்தில் ஏக்கருக்கு ஐந்து அல்லது ஆறு கிலோ பயன்படுத்துவார்கள். ஆனால் கோயமுத்தூரில் எடுக்கும் மகசூலைக் காட்டிலும் விழுப்புரத்தில் குறைவாகவே எடுக்கிறார்கள்.

தனியார் நிறுவனங்கள் புழங்காத பயிர்களில் அரசாங்கம் முரட்டுத்தனமான மானியம், இறக்குமதி, அந்த தொழிலில் உள்ள நிறுவனங்களுக்கு கடன், ஊக்கத்தொகை என வழங்கி சரிக்கட்டிவிடுகிறது. கரும்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியில் தனியார் நிறுவனங்கள் ஈடுபடுவதில்லை என்பதால் அரசங்கமே அதை செய்துகொள்வதுடன் ஆலைகளுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் உதவிசெய்வது ஓர் உதாரணமாகும்.

உலக வர்த்தக மையத்தில் இந்தியாவும் உறுப்புநாடு என்பதால் பல நேரங்களில் உள்நாட்டுச் சந்தையைத் திறந்துவிட்டாக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இறக்குமதியைக் கட்டுப்படுத்தினால் ஏற்றுமதி அடிவாங்கும், அந்நியச் செலாவணி வரத்து படுக்கும், டாலர் எகிறும் என்பதால் அரசாங்கம் கொஞ்சம் மென்மையாகவே நடந்துகொள்கிறது. வளர்ந்த நாடுகளைக் காட்டிலும் நமக்கு மானியம் கொடுக்க இன்னும் நிறைய provision உள்ளது என்றாலும் பயனாளிகளை அடையாளங் காணுவதிலும், அதைக் கொண்டுபோய் சேர்ப்பதிலும், மானியத்தை வாங்குபவர்கள் நாணயமாக நடந்துகொள்வதிலும் மிகப்பெரிய சந்து இருப்பதால் உலக வர்த்தக மையத்தை இந்தியா கண்ணில் விரல்விட்டு ஆட்டும் சம்பவங்கள் நடக்க வேண்டுமெனில் மோடி கறுப்புப் பணத்தை மீட்டு 15 இலட்சம் நமது அக்கவுண்ட்டில் போடும் காலம் வரை காத்திருக்க வேண்டும். இரண்டும் நடப்பதற்குள் நாமெல்லாம் இயற்கை எய்திவிடுவோம்!

வங்கியாளர்கள் சொத்துப் பத்திரம் மாதிரி ஏதாவது எளிமையான கொல்லேட்டரலோ அல்லது அரசாங்க கியாரண்டியோ இருந்து குறைவான வட்டியில் கடன் வழங்கினால் இந்த பிரச்சினை தீர்ந்துவிடும் என்கிறார்கள். வங்கிகளுக்கு கொழுந்தியாள் முறையான காப்பீட்டுக் கம்பெனிகள் போதுமான இன்சூரன்ஸ் இல்லாததுதான் பிரச்சினை எனவே எங்களுக்கு பிரீமியத்தை வாரி வழங்கினால் பிரச்சினை ஓவர் என்கிறார்கள்.

Celebrity எழுத்தாளர்கள் என்ற அடைமொழியில் தேவையில்லாத அல்லது தொடர்பில்லாத விசயங்கள் ஊடகங்களின் பிரச்சார காரணங்களுக்காகப் பெரிதுபடுத்தப்படுகின்றன. அதனால் முக்கிய விவகாரங்களைக் கோட்டை விட்டு விடுகிறோம். சாய்நாத் எழுதியதில் பாதி அவ்வகையில் வரும். நம்மாழ்வார் சொன்னதும் எந்த பிரச்சினையையும் தீர்க்காது; வர்ணாசிரம அமைப்பு முறைக்கு எந்த பங்கமும் வந்துவிடக்கூடாது என்பதை நீட்டி முழக்கி பாரம்பரியம், இயற்கை என்று சொல்லிக் கொண்டிருந்தார். தேவேந்தர் ஷர்மா என்பவரை உணவுக் கொள்கைகள் ஆராய்ச்சியாளர் என்று சொல்லி தூக்கி நிறுத்துகிறார்கள்; எட்டாம் வகுப்பு மாணவனின் வயதுக்கான IQ இருந்தாலே அவர் சொல்லும் எல்லாம் கதைகள் என்று புரியும்.

இந்தியா மாதிரி அவ்வளவு எளிதில் கட்டுப்படுத்த முடியாத மக்கள்தொகை கொண்ட நாட்டில் அரசாங்கம் ஒரே நேரத்தில் pro-producer, pro-consumer ஆக நடந்துகொள்ள முடியாது. எல்லாவற்றிலும் நீக்கமற பின்னிப் பிணைந்திருக்கும் ஜாதியைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், ஜாதிகளின் வாழ்விடமான கிராமங்களின் தொழிலான விவசாயத்தில் எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியாது. ஜாதிகளுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வைக் குறைப்பதிலும், இணக்கமான சூழ்நிலையையும் வைத்திருக்க முயற்சி செய்யும் மாநிலங்கள் மட்டுமே ஓரளவுக்கு விவசாயத்துறையை சீரமைக்க இயலும். மாடுகள் விவசாயத் தொழிலின் ஓர் அங்கம். அதை வளர்ப்பதும், விற்பதும் இயல்பானது. வளர்ப்பவன் புனிதமானவனாகவும், அவனுக்கு தேவையில்லாதவற்றை dispose செய்யும்போதும் புனிதமானவனாகவும் இருக்கிறான். ஆனால் அவற்றை வாங்கிச்செல்பவன் கொடூரனாகச் சித்தரிக்கப்படும் இடத்தில் சமநிலை எப்படி வரும்? மாடுகளை Dispose செய்யவே கூடாது என்றால் வேளாண்மையின் பொருளாதாரச் சங்கிலி என்ற ஒன்று அறுந்துவிடும் என்ற அடிப்படையே தெரியாத நம்மாழ்வார் போன்றவர்கள் இயற்கை வாழ்வியல் விஞ்ஞானி என்று பிரச்சாரம் செய்யப்படும் ஊரில் ஜப்பான் போன்ற நாடுகளின் விவசாயத்தை உதாரணம் மட்டுமே காட்ட முடியும்.

ஆகவே, வேளாண் விளைபொருட்களுக்கு அரசாங்கம் விலை நிர்ணயம் செய்து நட்டம் ஏற்படாமல் விவசாயிகளைக் காப்பாற்றும் என்பதெல்லாம் இன்னும் இருபது முப்பது ஆண்டுகளுக்கு சாத்தியமில்லாத ஒன்று.

பதினோறாம் வகுப்பு வேளாண் அறிவியல் தொழிற்கல்விப் பாடத்தின் கருத்தியல் மற்றும் செய்முறை (Theory & Practical) புத்தகங்களுக்காக வெளியிடப்படும் பிழைக்களஞ்சியம். 

தமிழகப் பாடநூல் வெளியீடுகள் வரலாற்றில் முதன்முறையாக பதினோறாம் வகுப்பு வேளாண் அறிவியல் தொழிற்கல்விப் பாடத்தின் கருத்தியல் மற்றும் செய்முறை (Theory & Practical) புத்தகங்களுக்காக வெளியிடப்படும் பிழைக்களஞ்சியம்.

இலக்கிய நூலாக இருந்தால் காத்திரமான விமர்சனம் என்று குறிப்பிடலாம். பாடநூல் என்பதால் ஆத்திரமான விமர்சனம் அல்லது சீராய்வு என்று வைத்துக்கொள்வோம்.

பொறுப்புத் துறப்பு (Disclaimer): +1 மாணவர்களின் வேளாண்மைப் பாடநூலை சும்மா புரட்டிப்பார்க்க ஆரம்பித்ததில் பல பிழைகள் கண்ணில் பட, அதையெல்லாம் தொகுத்து ஒரு கட்டுரையாக வெளியிட்டால் மாணாக்கர்களுக்குப் பயன்படலாம் என்ற நோக்கில் எழுதியிருக்கிறேன். கல்லூரிப்படிப்புக்குப் பிறகு பத்தாண்டுகளுக்கும் மேலாக வேளாண் தொழிற்துறையில் பணிபுரிந்திருந்தாலும் Academia, teaching என்பதெல்லாம் எனக்குப் பரிச்சயமில்லாத ஒன்று. அதனால் +1 வகுப்புக்குப் பாடத்திட்டத்தின் சுமை குறித்து எதுவும் தெரியாது. ஆனாலும் Concept, Fact, அறிவியல் விதிமுறைகளில் பிழை இருக்கும்போது அது அனைவராலும் பிழையாகவே பார்க்கப்படும். இதைத் தொகுப்பதற்கு எனக்குப் பின்னணியில் எந்த இயக்கமும், நபர்களும் இல்லை. இந்தக் கட்டுரையில் பிழையென சுட்டிக்காட்டப்படும் எதுவும் சரியென நிறுவும்பட்சத்தில் அவை நீட் உட்பட இதர நுழைவுத்தேர்வு, போட்டித்தேர்வுகளில் சரியாக இருக்குமா என்பதைத் துறைசார் நூல்களிலும், இணையத்திலும் ஒருமுறை சரிபார்த்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேளாண் அறிவியல் – கருத்தியல் (Theory)

பக்கம் 30: /சுற்றுச்சூழல் வெப்பமடைவதால் CFC உருவாகி ஓசோன் படலத்தை அரித்து அதன் அடர்த்தியைக் குறைக்கிறது/

CFC என்பது மனிதர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்டது. இயற்கையாக உருவாகும் CFC-யால் ஓசோன் படலம் ஓட்டையாகிறது என்பது இன்றைய பிரச்சினை அல்ல.சுற்றுச்சூழல் வெப்பமடைவதால் CFC உண்டாகி ஓசோன் படலத்தை அரிக்கிறது என்பதெல்லாம் குழப்பமான வாசகம்.

பக்கம் 34: /மண்ணியலின் தந்தை ஃபிரடெரிக் ஆல்பர்ட் ஃபேலோ (1794-1877)/

Friedrich Albert Fallou அடிப்படையில் ஒரு வழக்கறிஞர். அவரை நவீன மண்ணியலின் தந்தை என்று விக்கிபீடியா மட்டுமே சொல்கிறது. TNAU-வின் மண்ணியல் பாடங்கள் உட்பட இதர நூல்கள் உருசிய அறிஞர் வசிலி வசிலேவிச் டோக்குச்சேவ் [Vasilii Vasilevich Dokuchaev (1846-1903)] என்பவரையே மண்ணியலின் தந்தை என்று குறிப்பிடுகின்றன.

பக்கம் 57: /கொழுப்புச்சத்தானது கொழுப்பில் கரையாதது மற்றும் கொழுப்பில் கரையக்கூடியது என இரு பிருவுகளைக் கொண்டது. கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களான A, D, E மற்றும் K வின் உறிஞ்சுதலை அதிகரிக்க உதவுகிறது. இக்கொழுப்புச்சத்தால் உருவாகும் ஒமேகா 3 உடல் நலத்திற்கு ஏற்றது/

இந்த வாசகங்களில் இருந்து பெறப்படும் தகவல் என்ன? முதல் வரியும் கடைசி வரியும் என்ன பொருளைத் தருகிறது?

பக்கம் 109: /1995 ஆம் வருடத்தில் முளைத்த தாமரையின் விதையே இன்றுவரை நீண்ட உறக்கநிலை கொண்ட விதையாக ரேடியோ கார்பன் காலக் கணிப்பு மூலமாக கணிக்கப்பட்டுள்ளது. இதன் உறக்க நிலை 1300 வருடங்கள் என்பது ஆச்சரியமான ஒன்றாகும்/

Seed Dormancy என்பதற்கும் Seed Viability என்பதற்கும் உள்ள தொடர்பையும் வேற்றுமையையும் கவனமாகப் பார்க்க வேண்டும். 1300 வருடங்கள் விதை உறக்க நிலையில் இருந்தது என்பதைவிட விதைக்கு Viability இருந்தது என்பதே சரியான interpretation. விதை உறக்கம் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தைத் தாண்டி தொடர்கிறது – 1000 வருடங்கள் தாண்டியும் – என்றால் அது விதை உறக்கத்தினால் மட்டும்தான் நிகழ்கிறது என்று எடுத்துக்கொள்ள முடியாது. சைபீரியாவில் 32000 ஆண்டுகளுக்கு முந்தைய விதை ஒன்றையும், இஸ்ரேலில் 2000 வருடங்களுக்கு முந்தைய விதை ஒன்றையும் ரேடியோ கார்பன் காலக் கணிப்பு மூலமாக கண்டுபிடித்ததோடு முளைக்கவும் வைத்திருக்கிறார்கள். இது இந்த அத்தியாயத்தை எழுதிய ஆசிரியருக்கே வெளிச்சம்!

பக்கம் 116: TNAU தானியங்கி விதை மற்றும் நாற்று வழங்கும் இயந்திரத்தை நிறுவியிருக்கிறது என்பது குறித்த தகவலைக் கட்டம் கட்டி +1 மாணாக்கர்களுக்கு போதிப்பதெல்லாம் தேவையில்லாத ஒன்று. நூறு கோடி ரூபாய்க்கு நெருக்கமாக காய்கறி விதை விற்பனை நடக்கும் தமிழகத்தில் ஒரு கோடிக்குக் கூட விதைகளை விற்பனை செய்ய முடியாத தோட்டக்கலைத்துறை விஞ்ஞானிகள் செய்யும் தேவையில்லாத PR stunt-களில் இதுவும் ஒன்று. இந்த இயந்திரத்தை என்னமோ இவர்களே கண்டுபிடித்திருந்தாலாவது ஒரு நியாயம் இருக்கிறது. கோடிக்கணக்காண ரூபாய்க்கு விதைகளை விற்பனை செய்யும் கம்பெனிகள் கூட செய்யாத வேலைகளை எப்படி வெட்கமே இல்லாமல் மக்கள் வரிப்பணத்தில் செய்கிறார்களோ?!

பக்கம் 142: ஊட்டச்சத்து பற்றாக்குறை அறிகுறிகள் குறித்த அட்டவணையில் இரும்புச்சத்தின் பற்றாக்குறை அறிகுறிகளை மெக்னீசியத்திலும், மெக்னீசியத்தின் பற்றாக்குறை அறிகுறிகளை இரும்புச்சத்திலும் கொடுத்துள்ளனர். Interveinal chlorosis என்பது இரும்புச்சத்து பற்றாக்குறையின் முக்கிய அடையாளமாகும். போட்டித் தேர்வுகளிலும் இது தவறாமல் கேட்கப்படும். Indicator plants குறித்து ஓரிரு வரிகள் கூட கொடுக்கப்படவில்லை.

பக்கம் 168: விதைக்கும் முன் தெளித்தல் களைக்கொல்லியின் உதாரணமாக பாராகுவாட் டை குளோரைடு கொடுக்கப்பட்டிருக்கிறது. இதை எழுதிய, சரிபார்த்து ஒப்புதல் அளித்த ஆசிரியர் குழுவை எந்த கெட்ட வார்த்தை சொல்லி வேண்டுமானாலும் திட்டலாம். பாராகுவாட் என்பது முளைத்தபின் தெளிக்கும் களைக்கொல்லி. டிரைஃபுளூரலின் தேர்திறன் அற்ற களைக்கொல்லிக்கு உதாரணமாகக் காட்டப்பட்டிருக்கிறது. இதுவும் தவறு. டிரைஃபுளூரலின் என்பது தேர்த்திறன் உடைய களைக்கொல்லி. மேலும் சந்தையில் தேடினாலும் கிடைக்காத களைக்கொல்லியைப் பாடத்தில் சேர்க்கவேண்டிய அவசியம் என்ன?

பக்கம் 169: கரும்புக்கு மெட்ரிபூசின் எனும் களைக்கொல்லி முளைப்பதற்கு முன் தெளிக்கும் களைக்கொல்லியாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால் மெட்ரிபியூசின் என்பது முளைத்தபின் தெளிக்கும் வகை. இந்த மாதிரியான அடைப்படைத் தவறுகளெல்லாம் மன்னிக்கவே முடியாதவை.

பக்கம் 183: குளோர்பைரிபாஸ் எல்லாம் சந்தையில் தடை செய்ய காத்திருக்கும் அதரபழசான இரசாயனம். இதையெல்லாம் உதாரணம் காட்ட வேண்டிய அவசியமே இல்லை.

பக்கம் 190: /1943 ஆம் ஆண்டு இந்தியாவில் உணவுப்பஞ்சம் ஏற்படக் காரணமாக இருந்தது நெல் குலை நோய் என்பது உங்களுக்குத் தெரியுமா? இது இந்திய வரலாற்றில் வங்காளப் பஞ்சம் என/

இது கட்டம் கட்டி கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்.

1943-இல் வங்காளப் பஞ்சம் ஏற்படக் காரணமாக இருந்தது Rice Brown spot or Fungal Blight எனப்படும் பழுப்புப் புள்ளி நோய் . இது Helminthosporium oryzae எனும் பூஞ்சாணத்தால் வருவது. பஞ்சத்துக்குப் பல்வேறு காரணங்கள் இந்த நோயைத் தவிர இருக்கின்றன; பல நூல்கள் அந்தப் பஞ்சம் குறித்து வந்திருக்கின்றன. நுழைவுத்தேர்வு, போட்டித்தேர்வுகளில் வங்காளப் பஞ்சம் குறித்த இந்த கேள்வி தவறாமல் இடம்பெறும். இதுகூடத் தெரியாமல் அந்த ஆசிரியர் குழு என்ன செய்தது என்று ஆச்சரியமாகவும், ஆத்திரமாகவும் இருக்கிறது.

நெல் குலை நோய் என்பது Pyricularia grisea எனும் பூஞ்சாணத்தால் வரும் Paddy Blast disease.

பக்கம் 208: /சேமிப்பிற்கு பயன்படும் சாக்குப் பைகள் புதியதாக இருக்க வேண்டும். பழைய சாக்குப் பைகளை மாலத்தியான் 50 சதம் ஈ.சி. அல்லது டைக்குளோர்வாஸ் 76 சதம் எஸ்.சி. 0.1 சதம் கரைசலில் நனைத்து நன்கு உலர்த்திய பிறகு உபயோகிக்க வேண்டும்/

மாலத்தியான், டைக்குளோர்வாஸ் எல்லாம் விரைவில் தடை செய்யப்பட இருப்பவை. தானிய சேமிப்புக் கிடங்குகளில் 1980-களுக்குப் பிறகு எதுவுமே கண்டுபிடிக்கப்படவில்லை என்று சொல்ல வருகிறார்கள் போலும்.

பக்கம் 235: பாஸ்ச்சுரைசேசன் குறித்த தகவலில் குறைந்த வெப்பம் கூடுதல் நேரம், அதிக வெப்பம் குறைந்த நேரம் என்பது எத்தனை டிகிரி வெப்பம், எவ்வளவு நிமிடங்கள் என்பதைக் குறிப்பிடாமல் மொட்டையாக இருக்கிறது.

வேளாண் அறிவியல் – செய்முறை (Practical)

பக்கம் 11: தானியப்பயிர்கள்(Cereals) எல்லாம் கிராமினே என்ற குடும்பத்தில் வருபவை எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் இன்று தாவர வகைப்பாட்டியலில் கிராமினே என்பது போயேசியே (Poaceae) என்றே வழங்கப்படுகிறது. நுழைவுத்தேர்வுகள், போட்டித்தேர்வுகளில் 20 ஆண்டுகளுக்கு முந்தைய வார்த்தைகளே இருக்கும் என்று என்ன நிச்சயம் இருக்கிறது?

பக்கம் 12: எண்ணெய் வித்துக்களில் எள், டில்லியேசியே குடும்பம் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. அனால் இன்று எள், பெடாலியேசியே (Pedaliaceae) என்ற குடும்பத்தில்தான் வருகிறது. (டில்லியேசியே என்பதும் அச்சுப்பிழை. அதை டிலியேசியே என்றே குறிப்பிட வேண்டும்).

பக்கம் 20: சோற்றுக் கற்றாழைச் செடியின் குடும்பம் லில்லியேசியே என்று கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இன்று Aloe vera என்பது ஆஸ்ஃபோடேலேசியே (Asphodelaceae) என்ற குடும்பத்தில் வருகிறது.

பக்கம் 21: புதினா மற்றும் மருந்துக்கூர்க்கன் (கோலியஸ்) போன்றவை லேபியேட்டே குடும்பம் என்று கொடுக்கப்பட்டிருக்கிறது. அனால் இன்று லேபியேட்டே குடும்பம் என்பது லேமியேசியே (Lamiaceae) என்றே வழங்கப்படுகிறது.

இதுவும், அதுவும் ஒன்றுதான் என்று நாமே சொல்லிக்கொண்டாலும் தாவர வகைப்பாட்டியலில் இன்றைய பெயரிடுமுறை (Nomenclature) என்ன சொல்கிறதோ அதையே பயன்படுத்த வேண்டும். பழைய பெயர்களைப் பயன்படுத்துவது தவறில்லையென்றாலும் சரியென்றாகிவிடாது.

பக்கம் 44: நுண்ணியிரிகளினால் ஏற்படும் நோய் அறிகுறிகளைக் கண்டறிதல் என்ற அத்தியாயத்தில் நோய்க்காரணியின் (Causal Organism) பெயர், வைரஸ் நோயாக இருப்பின் கடத்தியின் (Vector) பெயர், கட்டுப்படுத்தும் முறைகள் போன்றவை இல்லாமல் மொட்டையான தகவல்களாக வெறும் படங்களாலும், வார்த்தைகளாலும் நிரப்பப்பட்டிருக்கிறது.

பக்கம் 50, 51: நன்மை செய்யும் உயிரினங்கள் என்ற அத்தியாயத்தில் இரை விழுங்கிகள் (Predators) என்ற அட்டவணையில் வழங்கப்பட்டிருக்கும் பூச்சிகளின் அறிவியற்பெயர் எழுதும் முறை முற்றிலும் தவறாக இருக்கிறது.

அறிவியற்பெயர் எனில் ஆங்கிலத்தில் எழுதும்போது பேரினத்தின் முதல் எழுத்து Capital letter-உம், ஏனைய எழுத்துகள் Small letters-உம் சாய்வெழுத்தாக (italic) எழுதியிருக்க வேண்டும். கையால் எழுதும்போது பேரினம், சிற்றினம் இரண்டையும் தனித்தனியாக அடிக்கோடிட வேண்டும். இதையெல்லாம் பத்தாம் வகுப்பில் லின்னேயஸ் வகைப்பாட்டியல் பயில ஆரம்பிக்கும்போதே சொல்லித்தரப்படும். புத்தக ஆசிரியர் குழுவின் ஞானம், Scientific name எப்படி எழுத வேண்டும் என்று வெளியில் இருந்து ஆட்கள் வந்து சொல்லித்தர வேண்டிய நிலைமையில் இருக்கிறது எனும்போது என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

பக்கம் 51: ஐசோட்டிம்மா முட்டை ஒட்டுண்ணி நெல் குருத்துப்பூச்சியைக் கட்டுப்படுத்துவதாகக் குறிப்பிடப்பட்டிருக்க்கிறது. ஐசோடிமியா ஜாவென்சிஸ் (Isotimia javensis) கரும்பு குருத்துப்புழுவுக்கு நல்ல கட்டுபாட்டைக் கொடுத்தாலும் நெல் குருத்துப்பூச்சியைக் கட்டுப்படுத்துகிறது என்பதெல்லாம் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை என்பதே பூச்சியியல் நிபுணர்களின் கருத்து. நிலைமை இவ்வாறிருக்க இதையெல்லாம் +1 மாணாக்கர்களுக்கு சொல்லித்தருவதெல்லாம் கொஞ்சம் ஓவர்!

பக்கம் 52: டெட்ராஸ்டிக்காஸ் ஹோவர்டி புழு, கூட்டுப்புழு ஒட்டுண்ணியானது கரும்பு தண்டு துளைப்பானைக் கட்டுப்படுத்துவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் டெட்ராஸ்டிக்காஸ் ஹோவர்டி கரும்பு உச்சிக் குருத்துப்பூச்சித் (Top Shoot Borer) தாக்குதலைக் கட்டுப்படுத்தவே பரிந்துரைக்கப்படுகிறது. தண்டு துளைப்பான் என்பதும் இடைக்கணுப்புழு (internode borer) எனபதும் நடைமுறையில் ஒன்றாகவே பாவிக்கப்படுகிறது. PhD மாணாக்கர்களுக்கு தரப்படும் அளவுக்கான விஷயங்களை +1 மாணாக்கர்களுக்குத் திணிக்கக்கூடாது.

பக்கம் 60: இயற்கைப் பயிர் பாதுகாப்பு முறைகள் பஞ்சகாவ்யா, அமிர்தக்கரைசல், தசகவ்யா என நிருபிக்கப்படாத முறைகளைப் பயிற்றுவிப்பதற்குப் பதிலாக உயிரியல் கட்டுப்பாடு முறைகளை நிறையவே சேர்த்திருக்கலாம்.

பக்கம் 66: பயிர்ப் பாதுகாப்பு இரஸாயனங்களைத் தயாரிக்கும் முறைகள் குறித்து சொல்லும் அத்தியாயத்தில் இரசாயனங்களின் நச்சுத்தன்மை குறித்த முக்கோணங்கள், என்னென்ன வகையினங்கள் இருக்கின்றன என்பது போன்ற அடிப்படை ஆரம்பிக்காமல் நேரடியாக application-க்கு நுழைந்திருக்கிறார்கள்.

கருத்தியல் நூலில் வந்திருக்கும் புகைப்படங்கள் செய்முறைப் புத்தகத்திலும் பெரும்பாலும் இருக்கிறது. கிட்டத்தட்ட 40% புத்தகம் படங்களாலேயே – அதுவும் தேவையில்லாத படங்களால் – நிரப்பப்பட்டிருக்கிறது. வேளாண் பொருளியல் மற்றும் விரிவாக்கம் என்ற அத்தியாயம் சும்மானாச்சுக்கும் ஒட்டிக்கொண்டிருக்கிறது. தொழிற்கல்வி என்ற Concept-இன் நோக்கம் என்ன என்பதே புரிந்துகொள்ளப்படாமல் ஒவ்வொரு அத்தியாயத்தையும் ஆங்காங்கே வாங்கி ஓட்ட வைத்திருக்கிறார்கள்.

பூச்சியியல் துறையின் மூத்த பேராசிரியர் ஒருவரைப் பாடநூல் வல்லுனராக நியமித்திருக்கிறார்கள். ஆனால் இருப்பதிலேயே பூச்சியியல் குறித்த அத்தியாயத்தில்தான் அதிக பிழைகளும், முரண்பாடுகளுடைய விஷயங்களும் இருக்கின்றன.

பாடநூல் மேலாய்வாளராக பயோடெக்னாலஜி துறையின் இணைப்பேராசிரியர் ஒருவரை நியமித்திருக்கிறார்கள். இந்த புத்தகங்களில் பயோடெக்னாலஜி என்ற அத்தியாயமே இல்லை. ஆய்வகங்களைவிட்டு வெளியே செல்லுவதற்கு அவசியமே இல்லாத பணியிலிருக்கும் ஒருவரிடம் கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு, பயிர்களைத் தாக்கும் நோய்கள், பூச்சிகள், உரம், நீர், பூச்சிக்கொல்லி, விதை, உழவியல் முறைகள், அறுவடைத் தொழில்நுட்பங்கள், மண்வளம் என அனைத்தையும் தொகுக்கும் பணியை வழங்கினால் என்ன நடக்கும்?

மாப்பிள்ளை செத்தால் என்ன மணப்பெண் செத்தால் என்ன, நமக்கு வேண்டியது மாலைப்பணம். நானும் பாடநூல் கமிட்டியில் உறுப்பினராக இருந்தேன் என அனைவரும் அவரவர் C.V-யில் எழுதிக்கொள்வார்கள்.

அதுதான் நடந்திருக்கிறது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்ற உப்புமா பல்கலைக்கழகங்கள் போல் மாறாமல் உருப்படுவதற்கு என்ன செய்யவேண்டும்?

கேள்வி: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்ற உப்புமா பல்கலைக்கழகங்கள் போல் மாறாமல் உருப்படுவதற்கு என்ன செய்யவேண்டும்?

பதில்: மாணாக்கர்கள் ஆராய்ச்சிக் கட்டுரைகளை சர்வதேசத் தரத்திலான சஞ்சிகைகளில் வெளியிடவேண்டும் என்று கட்டாயப்படுத்துவதற்கு முன்னர் நிர்வாக சீர்திருத்தத்தை மேலிருந்து தொடங்கவேண்டும்.

அண்மையில் தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தரது ஓய்வுபெறும் வயது 70 என நிர்ணயித்து திருத்தம் வெளியிடப்பட்டிருப்பது மிக விரிவான ஊழல்களுக்கு கால்கோள்விழா நடத்தப்பட்டிருப்பதாகவே தெரிகிறது.

ஓய்வுபெற்று வீட்டில் பேரக்குழந்தைகளுடன் விளையாட வேண்டியவர்களை அழைத்துவந்து நிர்வாகத்தை நடத்துவதற்கு விடுவது தற்போது பணியிலிருப்பவர்களை கேவலப்படுத்தும் ஒன்றாகும். என்னவோ இவர்களை விட்டால் பணியில் இருப்பவர்களுக்கு நிர்வாகத்தை நடத்தவே தெரியாத மாதிரியும், ஆராய்ச்சிகளுக்கு ஆலோசனை வழங்குவதற்கு ஆளே இல்லாமல் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டுவிடும் என்பது மாதிரியும் பில்டப் கொடுத்து வாழும் வாஸ்கோடகாமாவே, நடமாடும் ஐன்ஸ்டைனே என்று புகழ்மாலை பாடுவதுற்கு ஒரு கூட்டம் இருப்பதும் பல்கலைக்கழகம் எந்த அளவுக்கு சொம்புகலைக்கழகமாக மாறியிருக்கிறது என்று காட்டுகிறது.

பணி ஓய்வுபெற்ற பிறகு ஆராய்ச்சிகளைத் தொடரும் பேராசிரியர்களுக்குப் பல்கலையில் இடமும் ஆய்வகமும் வழங்குவது உலகெங்கிலும் நடைமுறையில் உண்டு. பல பேராசிரியர்கள் ஓய்வுபெற்ற பின் பல்கலையைவிட்டு வெளியேறி தத்தம் துறைகளில் ஆலோசகர்களாகவோ, நிறுவனங்களில் அதிகாரிகளாகவோ, தனியார் கல்லூரிகளில் கெளரவ பேராசிரியர்களாகவோ, தனியாக நிறுவனம் தொடங்கி வியாபாரம் செய்யவதோ உண்டு. அவர்களெல்லாம் உண்மையில் வணங்கத் தக்கவர்கள்.

சில பேராசிரியர்கள் ஏதாவது மந்திரிமார்கள், ஆட்சியாளர்கள் காலில் விழுந்து பணி நீட்டிப்பு வாங்குவதோடு துணைவேந்தர் பதவி வாங்கி வந்து உட்கார்ந்துகொண்டு சட்டாம்பிள்ளைத்தனம் செய்வது இப்போதெல்லாம் வாடிக்கையாகிவிட்டது. போதாக்குறைக்கு அண்டை மாதிலங்களில் ஆள்பிடித்து வந்து துணைவேந்தனாக்கும் அவல நிலைக்கு அண்ணா பல்கலை வந்தமாதிரி தநாவேப வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஓய்வுபெற்று பல்கலையை விட்டு வெளியேறிய பேராசிரியர்கள் காசு கொடுத்து துணைவேந்தன் பதவி வாங்கிவிடும்போது அவர்களுக்கான accountability என்ற ஒன்று முற்றிலும் இல்லாமல் போகிறது. அவர்கள் போட்ட காசை எடுப்பதிலும், பதவிக்காலம் முடிவதற்குள் பை நிறைய சில்லறைகளைத் தேற்றிவிடலாம் என கண்ணில் பட்டவைகளையெல்லாம் விலைபேசி விற்கும் அவலமும் நடப்பதோடு, பல்கலைக்கழக நிர்வாகத்திலோ, அரசாங்கப் பதவிகளிலோ இல்லாத ஊழல் குற்றவாளிகளைக் கண்டு கைகட்டி நின்று ‘பதவில இருக்கனும்னா இப்படிலாம் நக்கித்தான் ஆகனும்’ என்று மாணவர்களுக்கும் ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றனர். அண்மையில் இலஞ்சம் வாங்கி கையும் களவுமாக மாட்டிய பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தன் ஒரு துணைவேந்தன்கள் பட்டாளத்தையே அழைத்துக்கொண்டுபோய் ஊழல் குற்றவாளி சசிகலாவைப் பார்த்து புகைப்படம் எடுத்துக்கொண்டதை மக்கள் பார்த்துக்கொண்டுதான் உள்ளனர்.

தநாவேப சர்வதேச தரத்துக்குச் சொல்ல வேண்டுமானால் சர்வதேசத் தரத்திலான நெறிமுறைகள் இருக்க வேண்டும் என்ற நோக்கில் ஆண், பெண் பாலின பேதமில்லாத வளாகம் உருவாகவேண்டும் என கொள்கை முடிவுகளை எடுத்து 24 மணிநேரமும் திறந்திருக்கும் ஆய்வகங்களோடு முதுநிலை, ஆராய்ச்சி மாணவிகள் 24 மணிநேரமும் சென்றுவரும்வண்ணம் விடுதிகள் நிர்வகிக்கப்பட்டதும் இதே வேளாண் பல்கலையில்தான். தமிழகத்திலேயே 24 மணிநேரமும் ஆராய்ச்சிகளுக்காகத் திறந்திருந்த ஒரே பல்கலைக்கழகமாக ஒருகாலத்தில் இருந்தது.

இன்று தாவரவியல் பூங்காவுக்கு ஜோடியாக வருபவர்கள் திருமணச் சான்றிதழைக் காட்டவேண்டும் என்று கட்டாயப்படுத்தும் நவீன இந்துத்வா கும்பலின் கூடாரமாக மாறியிருப்பதாக விவரம் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள்.

ஒருபக்கம் இயற்கை விவசாயம் என படம் காட்டிவிட்டு மறுபக்கம் எட்டாம்கிளாஸ் படித்தவர்களெல்லாம் பூச்சிக்கொல்லி விற்பனை செய்யக்கூடாது என்று மத்திய அரசு கொண்டுவந்த தடைச்சட்டத்துக்கு ஓட்டை ஏற்படுத்தும்விதமாக ஒரு டுபாக்கூர் டிப்ளமோ படிப்பை அறிமுகப்படுத்தி நுகர்வோருக்கோ, விவசாயிகளுக்கோ, விவசாயப் பட்டதாரிகளுக்கோ எந்த பலனையும் தராத, காசு கொடுத்தால் எதை வேண்டுமானலும் செய்து தருகின்ற போலி ஆராய்ச்சி நிலையமாக மாறியதும் ஓய்வுபெற்ற துணைவேந்தன்களாலேயே நடந்து வருகிறது.

பல பாராட்டுகளையும், முன்னெடுப்புகளையும் பல்வேறு துறைகளில் இந்தியாவிலேயே முதன்முறையாக என்ற பல்வேறு சான்றுகளையும் உடைய பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்தை ICAR இரத்து செய்தது மிகவும் கேவலமான ஒரு நிகழ்வாகும். அங்கீகாரம் இரத்தாகும் அளவுக்கு போர்டு நட்டு அஸ்திவாரம் மட்டுமே போடப்பட்ட தனியார் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியதற்குக் காரணம் எந்த accountability-யும் இல்லாத ஓய்வுபெற்ற நபர்களைத் துணைவேந்தன் என நியமிக்கும் அரசியல் போக்கும் அதற்கு துணைபோகும் ஆசிரியர் சங்கங்களுமே இதற்கு காரணமாகும். தற்போது 70 வயதுவரை துணைவேந்தன் பதவி என சட்டத்திருத்தம் செய்யப்பட்டிருப்பது மிகவும் அபாயகரமான சீரழிவின் ஆரம்பமுமாகும்.

தநாவேப உருப்பட வேண்டும் எனில் உள்ளே பணியிலிருப்பவர்களுக்கு பதவிக்காலத்திலேயே துணைவேந்தர், முதல்வர், பதிவளர் போன்ற பதவிகள் கொடுக்கப்படவேண்டும். ஓய்வுபெற்ற பின் துணைவேந்தன் பதவி “வாங்கி” வந்து சில்லறைகளைத் தேற்றி சொத்து சேர்க்க முயற்சிக்கும் அல்ப கேஸ்களை தவிர்த்தால் மட்டுமே மாற்றம் உண்டாகும். அப்போதுதான் திறமைக்கு மதிப்பு கிடைப்பதோடு உண்மையான ஆராய்ச்சியாளர்களுக்கு, நிர்வாகத் திறமையுடைய பேராசிரியர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும். அதன்மூலம் உள்ளே பணியிலிருப்பவர்களுக்கு ஊக்கம் கிடைப்பதுடன் மாணாக்கர்களின் தரமான ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகள் என விவசாயிகளுக்கும் பலன் ஏற்படுவதோடு ஆண்டுக்கு நூறு கோடி அளவுக்கு செலவிடப்படும் மக்களின் வரிப்பணத்துக்கு ஒரு மதிப்பு ஏற்படும். அப்போதுதான் உதவிப் பேராசிரியர் பதவியில் சேர்ந்து ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு மேல்நோக்கிச் செல்ல விரும்புபவர்களுக்கு சமூகத்தில் ஒரு மரியாதை ஏற்படும்; எங்குமே வெளியில் சென்று பிழைக்க வழிதெரியாதவர்களெல்லாம் உதவிப் பேராசிரியராகி விடுகின்றனர் என்ற அவச்சொல்லும் நீங்கும்.

ஏனெனில் ஆராய்ச்சியிலோ, நிர்வாகத்திறமையோ இல்லாமல் ஓய்வுபெற்றபின் துணைவேந்தன் ஆனவர்களும் அவர்களது சொம்புகளும் ”இன்னிக்கு வர்ற பசங்களுக்கு ஒரு மண்ணும் தெரியறதில்லப்பா. எப்படித்தான் படிச்சு பாஸ் பண்ணித் தொலைச்சிட்டு வர்றானுங்களோ. இந்த கூமுட்டைங்கள வச்சிகிட்டு எப்படி நாங்க ரிசர்ச் புரோகிராம் நடத்தறதுன்னே தெரியல. அந்த காலத்துல நாங்கள்லாம் படிச்சப்போ பாத்தீங்கன்னா…” என்று இன்றைய இளைஞர் சமுதாயத்தையும், நடுவயதில் இருக்கும் பேராசிரியர்கள் கூட்டத்தையும் தொடர்ந்து மட்டம் தட்டி பிரச்சாரம் செய்து தங்கள் இருப்பைத் தக்கவைத்துக் கொள்கின்றனர். இத்தகைய பிரச்சார யுக்திகளை நம்பும் மாணாக்கர் கூட்டம் தவறான முன்னுதாரணங்களால் கல்வி, கேள்வி, ஆராய்ச்சி, வர்த்தகம் என எதிலுமே ஒரு நிறைவான ஆளுமையாக மாறாமல் கார்ப்பரேட் எதிர்ப்பு, பன்னாட்டு சதி என வாட்சப் பார்வர்டுகளில் அரசியல் பயிலுகின்றனர்.

ஆகவே, தநாவேப முன்னோக்கிச் செல்லவேண்டும் எனில் ஓய்வுபெற்ற பின் காசு கொடுத்து துணைவேந்தன் பதவி வாங்கும் நபர்களையெல்லாம் பெரிய ஆளுமை என்று நம்பும் மாயையில் இருந்து வெளிவர வேண்டும். அதற்கு ஆசிரியர் சங்கம் என்ற பெயரில் அங்கு தூங்கிக்கொண்டிருக்கும் அமைப்பே இதற்கான செயல்பாட்டை முன்னெடுக்க வேண்டும்; அல்லது அதை கலைத்துவிட வேண்டும்.

கட்டுரையாளர்கள்:
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள்.

மரச்செக்கு எண்ணெய் குறித்த சில சர்ச்சைகள்

கேள்வி: அண்மையில் மரச்செக்கு எண்ணெய் வியாபாரிகளை கடும் கோபத்திற்குள்ளாக்கிய அரசாங்க விதிமுறைகள் தொடர்பான சர்ச்சைகள் குறித்து விளக்க முடியுமா?

பதில்: உற்பத்தி செய்யப்பட்ட எண்ணெய்வித்துப் பயிர்களை மொத்த வியாபாரிகளுக்கோ, ஆலைகளுக்கோ விற்றுவந்த விவசாயிகள் மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக விற்றால் இலாபம் அதிகமாகும் என்ற நம்பிக்கையில் பல புதிய முயற்சிகளில் ஈடுபட்டனர். அதில் தவறேதுமில்லை; பல தொழில்முனைவோர்கள் அவ்வாறு ஒரு குண்டுசட்டி வாழ்க்கையை உடைத்துக்கொண்டு வெளியில் வந்தவர்களே. அஃது அந்தந்த காலகட்டத்துக்கேற்ப பரிணமித்து வந்தவரைக்கும் எந்த சர்ச்சையும் இல்லாமல் இருந்து வந்தது. கூடு திரும்புதல், மரபுக்கு மாறுதல், பாரம்பரியத்துக்கான பாய்ச்சல், கார்ப்பரேட்டைக் காவு வாங்குதல் போன்ற பெயர்சூட்டல்களோடு வந்தவர்களாலேயே தொடர்ச்சியாக சர்ச்சைகள் தோற்றுவிக்கப்பட்டு விளம்பரத்திற்காக பரப்பப்பட்டும் வருகிறது.

மரச்செக்கு எண்ணெய் என்றாலே பரிசுத்தமானது, புனிதமானது என்றே மார்க்கெட்டிங் செய்யப்பட்டு வருகிறது. நம்முடைய தோட்டத்தில் விளைந்த்தையோ, அக்கம்பக்கத்திலோ எண்ணெய்வித்துக்களை வாங்கி அருகிலுள்ள செக்கில் கொடுத்து ஆட்டும்போது நாமே நின்று வாங்கி வருவதில் தூய்மை, தரம், கலப்படம், சரியான அளவு, விலை என்ற எந்த கேள்வியுமில்லை. அரசாங்கத்துக்கும் இம்மாதிரியான நிகழ்வுகளில் எந்த அக்கறையுமில்லை.

இந்திய ரிசர்வ் வங்கி அச்சடித்துத் தரும் பணத்தைப் பயன்படுத்தி வியாபாரத்தில் ஈடுபடும்போது இந்திய அரசாங்கத்தின் சட்டதிட்டங்களுக்கும், அவ்வப்போது கொண்டுவரப்படும் சட்டதிருத்தங்களையும் மதித்தே பரிவர்த்தனைகளில் ஈடுபடவேண்டும் என்பது Terms & Conditions-இல் தன்னிச்சையான ஒன்றாகும்.

மரச்செக்கு எண்ணெய் விற்றாலும், மாவடு விற்றாலும் FSSAI-யிடம் அனுமதி பெற்றாக வேண்டும். தயாரிப்பு தேதி, காலாவதி நாள், குவியல் எண், தயாரிப்பாளர் முகவரி, FSSAI உரிம எண் போன்றவை கட்டாயமாக குறிப்பிட்டாக வேண்டும். மரச்செக்கு எண்ணெய் உற்பத்தியாளர் என்றால் கேள்விக்கு அப்பாற்பட்ட, பணம் கொடுத்து எண்ணெய் வாங்கிய நுகர்வோருக்கு பதில் சொல்ல அவசியமில்லாத தாதா கிடையாது என்று அரசாங்கம் திட்டவட்டமாகச் சொல்லிவிட்டது. இந்த ஒரே அறிவிப்பிற்காக அரசாங்கம் கார்ப்பரேட் கம்பெனிகளுக்காக செயல்படுவதாக மரச்செக்கு எண்ணெய் வியாபாரிகள் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கின்றனர்.

அப்பாவி விவசாயிகளை ஆயிரம் கேள்வி கேட்கும் அரசு, கார்ப்பரேட் கம்பெனிகளைக் கேட்பதில்லை, அய்யகோ பன்னாட்டு எண்ணெய் விற்பனைக் கம்பெனிகளின் அட்டகாசம், அதானியின் அடக்குமுறை என்று பேஸ்புக் பதிவுகளைக் கண்டு சஞ்சலப்படத் தேவையில்லை. இந்த அப்பாவி மரச்செக்கு விவசாயிகள் தரமில்லாத, கலப்பட எண்ணெயை பள்ளிகளுக்கோ, திருமண மண்டபங்களுக்கோ, உணவகங்களுக்கோ சப்ளை செய்துவிட்டு ஏதாவது விபரீதம் நடந்தவுடன் ஆளும் அரசு அதிகார வர்க்கம் இதை ஓழுங்குபடுத்தவில்லை, செயல்தலைவர் செயல்படவில்லை, சிஸ்டம் சரியில்லை என நடுநிலையாளர்கள் பேட்டி கொடுப்பதைத் தவிர்க்க, குடிமக்களின் உடல்நலனில் அக்கறையில் எந்த அரசு ஆட்சியில் இருந்தாலும் இயல்பாக நடக்கும் ஒன்றாகும்.

வாகை மரச்செக்கில் ஆட்டப்பட்ட எண்ணெய் என்பதற்காக புனிதமான ஒன்றாகிவிடாது. சமூக அக்கறையுடன் பேஸ்புக்கில் பதிவு இடுகிறார்கள் என்றாலும் எண்ணைய்வித்துக்கள் பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்பட்ட வயல்களிலிருந்து வாங்கப்பட்டு எண்ணெய் பிழியும்போது அவற்றின் concentration அதிகமாகி ஆபத்தில் முடியவும் வாய்ப்பிருக்கிறது. இதை ஒப்பிடுகையில் ரிஃபைன்டு எண்ணெய்கள் நிச்சயமாக பாதுகாப்பானவை. எண்ணெய் வித்துக்கள் எங்கிருந்து தருவிக்கப்படுகிறது, எங்கு எப்போது ஆட்டப்படுகிறது, எத்தகைய பாட்டிலில் அடைக்கப்பட்டு விற்கப்படுகிறது என்பது தெரியாதபட்சத்தில் FSSAI உரிமமாவது இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இயற்கை விவசாயம் செய்வதாக பேஸ்புக்கில் படம் போட்டு விற்பனை செய்யும் ஆசாமிகளை நம்பி குடும்பத்தின் உடல்நிலையை அடகு வைக்கக்கூடாது.

ஒரு கிலோ கடலை இன்ன விலை, ஒரு கிலோவுக்கு இத்தனை மி.லி எண்ணெய் மட்டுமே வரும், இத்தனை கிலோ கடலைக்கு இத்தனை கிலோ புண்ணாக்கு வரும், ஒரு கிலோ புண்ணாக்கு இன்ன விலை, ஆட்டுவதற்கு ஆகும் மின்சார, இயந்திரத் தேய்மான, ஆட்கூலி செலவு இவ்வளவு, ஆண்டுக்கு இத்தனை மாதங்கள் மட்டுமே இன்ன விலைக்கு கடலை கிடைக்கும் எனும்போது கடலை எண்ணெய் மட்டும் எப்படி இன்ன விலைக்கு ஆண்டு முழுவதும் கிடைக்கிறது என்ற அதே கணக்கு மரச்செக்கு எண்ணெய்க்கும் உண்டு என்பதை மறந்துவிடக்கூடாது.

நிலவேம்பு கசாயம் நல்லது என்று பேஸ்புக்கில் சூரணம் விற்பனை செய்தவர்கள் அதன் செயல்திறன் குறித்த சில அடிப்படை கேள்விகள் எழுந்தவுடன் ஓட்டம்பிடித்துவிட்டதையும், டெங்குவால் தமிழகத்தில் நிகழ்ந்த மரணங்களையும் நினைவில் கொள்ளவேண்டும். நம் முன்னோர்கள் முட்டாள்கள் அல்லர் என்பது சமகாலத்தின் ஸ்டேண்டர்டு ஸ்டேட்மெண்ட். ஆம், அவர்கள் வியாபாரம் செய்ய வந்தவர்களை வியாபாரிகளாகத்தான் பார்த்ததனர். இன்றைய சமூகம் வியாபாரிகளை எல்லாம் விஞ்ஞானிகளாகக் கருதுவதால் நமது வருங்கால சந்ததி நிச்சயமாக நமக்கு ‘எம் முன்னோர்கள் முட்டாள்கள் அல்லர்’ என்ற அங்கீகாரத்தை தராது.

இந்தியப் பஞ்சாலைத் தொழில்களைச் சூழும் இருண்டகாலம்

கட்டுரையின் தலைப்பு:

கார்ப்பரேட் கம்பெனிகளை அழித்தொழித்து இந்திய விவசாயத்தைக் காப்பாற்றி உழவர்களின் வருமானத்தை 2022-இல் இருமடங்காக்க இருக்கும் மோடி அரசாங்கம்.

அல்லது

இந்தியப் பஞ்சாலைத் தொழில்களைச் சூழும் இருண்டகாலம் (உங்களுக்குப் பிடித்த தலைப்பை வைத்துக்கொள்ளலாம்).

கட்டுரையில் வரும் முக்கிய பாத்திரங்கள்: மோடி சர்க்கார், மான்சாண்டோ, நுஜிவீடு சீட்ஸ், பிளாக்ஸ்டோன் இன்வெஸ்ட்மென்ட்ஸ், Competition Commission of India (CCI) மற்றும் இயற்கை விவசாய ஆர்வலர்கள்.

ஏர்செல் என்ற ஒரு நிறுவனத்தின் தொழில்நுட்பம் இரண்டொரு நாட்களாக இயங்கவில்லை என்றதும் மக்கள் துடித்துப் போய்விட்டனர். இத்தனைக்கும் நான்கைந்து போட்டி நிறுவனங்கள் இன்னமும் இருக்கின்றன; அலைபேசித் தொழில்நுட்பம் என்பது இந்தியாவில் வெறும் பதினைந்து வருட பாரம்பரியத்தை மட்டுமே கொண்டது. இதைப்போலவே வெறும் பதினைந்து வருட வரலாற்றை மட்டுமே கொண்ட B.t. தொழில்நுட்பம் கொண்ட பருத்தியானது மூடுவிழா காண்கிறது. ஆனால் இஃது ஒரு வெற்றியாக ஒருசாராரால் கொண்டாடப்பட்டு, பிரச்சாரமும் செய்யப்பட்டு வருகிறது.

பி. டி. பருத்தியின் பயன்பாடு செல்போன் தொழில்நுட்பம் போல ஐயத்துக்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுவிட்டது. பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகள் ஒருபோதும் இதைக் குறை சொல்வதில்லை என்பதே இதன் சாட்சி. மற்ற தொழில்களில் உள்ள கருவிகளைப் போல Outdate, Update என்பது இதிலும் உண்டு. செல்போன் டவர்களால் சிட்டுக்குருவிகள் சாகின்றன என்பதைப் போல ஒருசில சர்ச்சைகள் பி. டி. பருத்தியைச் சுற்றி இருந்துகொண்டே இருக்கிறது. அதைத் தனியாக அலசலாம்.

பி. டி. பருத்திக்கு இளஞ்சிவப்புக் காய்ப்புழுக்கள் எதிர்ப்புத்திறன் பெற்றதால் கடுமையாகப் பரவுவதோடு, தாக்குதல் அதிகரித்து மகசூல் வெகுவாக குறைந்துவருகிறது. வட இந்தியாவைக் காட்டிலும் தமிழகத்தில் தாக்கம் இந்த ஆண்டு குறைவு என்றாலும் அரசு வேளாண்மைத்துறை மிகவும் குறைவான எண்களையே காட்டி வருவதாக துறைசார் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். டெங்கு காய்ச்சலை ‘சாமார்த்தியமாக’ அரசு கையாண்டதை இதனுடன் தாராளமாக ஒப்பிட்டுக்கொள்ளலாம்.

இந்திய பஞ்சாலைத் தொழில்துறைகளுக்கு முன்னர் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ள இந்தப் பிரச்சினையின் முழு வடிவத்தைப் பார்ப்போம். இந்தியாவின் மிகப்பெரிய பருத்தி விதை நிறுவனம் ஐதராபாத்தைச் சேர்ந்த Nuziveedu Seeds. மான்சாண்டோவிடம் பி.டி. தொழில்நுட்பத்தை இராயல்ட்டி கட்டுவதாக ஒப்பந்தம் போட்டு வாங்கித் தனது இரகங்களில் புகுத்தி விற்பனை செய்து முதலிடத்தில் இருக்கிறது. (பி.டி. தொழில்நுட்பம் என்பது சிம் கார்டு மாதிரி. பருத்தி இரகங்கள் என்பது ஹேண்ட்செட் மாதிரி. பல நிறுவனங்கள் தங்களிடம் இருந்த இரகங்களில் பி.டி ஜீனைப் புகுத்தி பிராந்திய அளவில் மாபெரும் வெற்றிகண்டன). இந்தியாவின் மிகப்பெரிய டெக்ஸ்டைல் ஆலைகளை வைத்திருக்கும் நிறுவனங்களில் நுஜிவீடும் ஒன்று. பொள்ளாச்சியிலிருந்து உடுமலைப்பேட்டை செல்லும் வழியில் பல காற்றாலைகளை நுஜிவீடு சீட்ஸ் லிமிடெட் என்ற பெயரில் காணலாம்.

2011-இல் நுஜிவீடு நிறுவனத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனமான Blackstone investments நிறுவனம் 250 கோடி ரூபாய் முதலீடு செய்கிறது. 2015-16-வாக்கில் பிளாக்ஸ்டோன் நிறுவனம் இலாபத்துடன் வெளியேற விரும்புகிறது. இதனால் வேறொரு முதலீட்டாளரை உள்ளே கொண்டுவரவேண்டும்; சொந்தமாக எந்த தொழில்நுட்பமும் இல்லாமல் – இராயல்ட்டி மட்டும் கட்டிக்கொண்டு – கிட்டத்தட்ட வெறும் ஹார்டுவேர் விற்கும் கம்பெனி என்ற நிலையில் இருப்பதால் புதிய முதலீட்டாளர்கள் தயங்குகின்றனர். பங்குச்சந்தையில் பட்டியலிட்டால் தங்களின் பங்குகளைக் கழட்டி விட்டுவிடலாம் என்று கருதிய பிளாக்ஸ்டோன், IPO வெளியிடும்படி நிர்பந்திக்கிறது. அந்நேரத்தில் மான்சான்டோவுக்கு இராயல்ட்டி கட்டும் அற்பத் தொகையைப் பெரிதுபடுத்தி அதைத் தவிர்த்தால் பிளாக்ஸ்டோனுக்கு லாபம் அதிகமாகும் என்று நிரூபிக்க நுஜிவீடு நிறுவனம் ஆயத்தமாகிறது.

மரபணுமாற்றத் தொழில்நுட்பம் உட்பட பல்வேறு தொழில்நுட்ப விவகாரங்களை இந்தியாவில் அனுமதிக்காமல் இருந்தால் மட்டுமே தங்களது சாம்ராஜ்யம் இராமராஜ்யமாகும் என்று நம்பி செயல்பட்டுவரும் RSS அமைப்பின் பல கிளை அமைப்புகளின் உதவி கோரப்படுகிறது. ஆர்எஸ்எஸ்-இன் பிரதிநிதியான மத்திய அமைச்சராக இருக்கும் இராதாமோகன்சிங்கிடம் நுஜிவீடு நிறுவனத்தின் தலைமை இதை வேண்டுகோளாக வைக்கிறது. கறுப்பணத்தை மீட்டுவிடுவோம் என்று சொல்லி இருக்கும் நோட்டுகளையும் பிடுங்கிக்கொண்டு ஓடவிட்டாலும், எப்படி ஆதரவு தெரிவிக்க ஒரு கூட்டம் இருக்கிறதோ அதேபோல் விவசாயிகளின் வருவாயை இரண்டு மடங்காக்குவோம் என்று சொல்லி இருப்பதையும் பிடுங்கிக்கொண்டு துரத்தினால் மட்டுமே இராமராஜ்யம் சாத்தியம் என்பதைப் படக்கென்று பிடித்துக்கொண்ட அமைச்சர் இந்த இராயல்ட்டி விவகாரத்தில் Competition Commission of India(CCI)-வை களத்தில் இறக்கி விடுகிறார்.

காப்புரிமை பெற்ற ஒரு பூச்சிக்கட்டுப்பாட்டுத் தொழில்நுட்பத்தை அத்தனை இடங்களிலும் கையெழுத்துப் போட்டு ஒரு நிறுவனத்திடம் இருந்து மற்றொரு நிறுவனம் வாங்கி பயன்படுத்துகிறது. இதில் இராயல்ட்டி தொகை அதிகமாக இருக்கிறது, அதனால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள் என்று சொல்லியே CCI களமிறங்கியது. இந்நிலையில் என்னது காந்தி செத்துட்டாரா, விதைகளுக்குக் காப்புரிமையா என்று பல அமைப்புகள் இரகளையில் ஈடுபட்டன. இந்திய விதை நிறுவனங்களின் அசோசியேசன் நுஜிவீடு தலைமையில் இரண்டாக உடைகிறது. பல நிறுவனங்கள் இராயல்ட்டி தரமாட்டோம் என்று சந்தடிசாக்கில் கிடைத்த இலாபத்தை விழுங்கிவிட்டன. இந்நிலையில் பி. டி. தொழில்நுட்பம் பெயிலாகிவிட்டது என்று ஆங்காங்கே உழவர்கள் வழக்குத் தொடர ஆரம்பித்த நிலையில் பி. டி. technology provider ஆகிய மான்சான்டோவே அதற்கு பொறுப்பு என்றும் தாங்கள் வெறும் ஹார்டுவேர் சப்ளையர்கள் என்பதுமாதிரியான பதிலை நுஜிவீடு உட்பட பல நிறுவனங்கள் சொல்ல ஆரம்பித்தன. அதாவது இராயல்ட்டியும் தரமாட்டார்களாம், அந்த தொழில்நுட்பத்தில் ஏதாவது கோளாறு என்றாலும் அதற்கும் பொறுப்பாக மாட்டார்களாம்; மான்சான்டோவைக் கேளுங்கள் என்பார்களாம். அதாகப்பட்டது விண்டோஸ் திருட்டு வெர்ஷன் போட்டுக்கொள்ளலாம், ஆனால் வைரஸ் வந்தால் மைக்ரோசாஃப்ட்காரன்தான் பதில் சொல்லவேண்டும்.

ஜியோ சகட்டுமேனிக்கு விலையைக் குறைத்து மற்ற நிறுவனங்களை அலறவிட்டதையெல்லாம் ‘free tradeனா அப்படித்தாம்பா இருக்கும், வாடிக்கையாளர்களுக்குப் பிரச்சினைன்னாத்தான் நாங்க வரமுடியும், அதுவரைக்கும் அனுசரிச்சு போங்கப்பா’ என்ற CCI, இரண்டு நிறுவனங்களுக்கு இடையேயான இராயல்ட்டி விவகாரத்தில் சீனிலேயே இல்லாத வாடிக்கையாளர்களைக் காரணம் காட்டி ஒரு தொழில் துறையையே ஆட்டம் காண வைத்து இராமராஜ்யத்தை விரிவாக்க உதவியது என்றால் மிகையாகாது.

இயற்கை விவசாய ஆர்வலர்களை சாதி/மத வெறியர்கள் என்றால் சிலர் வருத்தப்படலாம். ஆர்கானிக் விவசாயிகள் வேறு ஆர்கேனிக் விவசாய ஆர்வலர்கள் வேறு என்பதை இந்த இடத்தில் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும். இந்த ஆர்கேனிக் விவசாய ஆர்வலர்கள் முட்டாள்கள் போலத் தோன்றினாலும் காரியப் பைத்தியக்காரர்கள் வகையினர். ஒரு ஏக்கர் நடவுசெய்யத் தேவைப்படும் 450 கிராம் பருத்தி விதை 950 ரூபாய். இது மிக அதிகமான விலை, பகல் கொள்ளை, உழவர்களைச் சுரண்டுகிறார்கள் என்பதே இவர்களது வாதம். ஆனால் கள நிலவரம் முற்றிலும் வேறு; சான்றாக, சில பயிர்கள் ஓர் ஏக்கர் நடவு செய்யத் தேவைப்படும் விதை அளவும், அதன் விலையையும் பார்ப்போம்.

மக்காச்சோளம் – 7 கிலோ – 2200 ரூபாய்
சூரியகாந்தி – 2 கிலோ – 1300 ரூபாய்
தக்காளி – 40 கிராம் – 1600 ரூபாய்
தர்பூசணி – 350 கிராம் – 2500 ரூபாய்

அமெரக்க வர்த்தக சபை நமது பிரதமர் அலுவலகம் வரை முறையிட்டுப் பாரத்துவிட்டது. குஜராத்தில் பன்னாட்டு நிறுவனங்களையும், தொழில்நுட்பங்களையும், புல்லட் இரயிலையும் வரவேற்கும் நீங்களா இப்படிச் செய்வது என்று அரற்றிய அமெரிக்க பிரதிநிதிகளும், மான்சான்டோவும் நீங்களாகவே ஒருநாள் வந்து நிற்கத்தான் போகிறீர்கள், அப்போது நாங்கள் சொல்வதுதான் விலையாக இருக்கும் என்று சூசகமாகத் தெரவித்துவிட்டு மூன்றாம் தலைமுறை பி. டி. தொழில்நுட்பத்தை வணிகப்படுத்துவதற்காக போட்டிருந்த விண்ணப்பத்தைத் திரும்ப வாங்கிக்கொண்டு இந்தியாவில் பருத்தி வியாபாரத்தின் துறையை விற்றுவிட்டு வெளியேறிவிட்டனர்.

கொஞ்சம் கொஞ்சமாக காசு பார்க்க ஆரம்பித்த ஜின்னிங் ஆலைகள் தரமான பஞ்சு வரத்து இல்லாததால் அலற ஆரம்பித்துவிட்டன. பஞ்சாலைகளுக்கான இயந்திரங்கள், உதிரிபாகங்கள் விற்பனை அதளபாதாளத்தை நோக்கி இறங்கிவருகிறது. அதைச் சார்ந்த தொழில்கள் ஆட்டம் காணும் என பல தொழில்துறை சம்மேளனங்கள் அரசை எச்சரித்துவிட்டன. பதஞ்சலி நிறுவனம் சுதேசி பி. டி. தொழில்துட்பத்தை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. அரசாங்க வேளாண் ஆராய்ச்சி அமைப்புகள் வேதங்களில் GMO என்ற கோணத்தில்தான் இன்னும் இயங்கி வருகின்றன.

மிகப்பெரிய ஸ்பின்னிங் ஆலைகளை வைத்திருக்கும் நுஜிவீடு, தரமான பஞ்சு வரத்து இல்லாமல் எப்படி இலாபமடையும் என்ற கேள்வி எழலாம். உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்படும்போது பஞ்சு இறக்குமதி திறந்துவிடப்பட்டு மும்பை, அகமதாபாத்தின் சந்து பொந்துகளில் பான்மசாலாவைக் குதப்பிக்கொண்டு உட்கார்ந்திருக்கும் சில பெயர் தெரியாத சேட்ஜீக்கள் ஹாங்காங்கில் குடோன் வைத்திருப்பதாகக் கணக்கு காட்டி கப்பலிலிருந்து இறக்காமலேயே சீனாவிலோ, வேறு நாடுகளிலோ இருந்து தருவித்து இந்தியாவிலுள்ள பெரிய ஜின்னிங் ஆலைகளுக்கு மட்டும் சப்ளை செய்வார்கள். அந்த ஆலைகள் தேர்ந்தெடுத்த பெரிய ஆலைகளுக்கு மட்டுமே சப்ளை செய்யும். சின்னச்சின்ன ஜின்னிங், ஸ்பின்னிங் ஆலைகளுக்கு அந்த விலை கட்டுபடியாகாது என்பதும் அவை மெல்ல மெல்லச் சாகும் என்பதும் அவற்றிற்கு வங்கிகள் வழங்கிய கடன்களும் சாகும் என்பதோடு வழக்கம்போல பொதுமக்களின் வைப்புநிதிகளுக்கு வட்டி குறைக்கப்பட்டு பணப்புழக்கம் சரிக்கட்டப்படும் என்பதும் யாவரும் அறிந்ததே. ஸ்வராஜ்யா போன்ற இணையதளங்கள் இதை survival of the fittest எனக் கொண்டாடும். ‘Free tradeனா அப்படித்தாம்பா இருக்கும், கஸ்டமர் பாதிக்கப்படறாங்கன்னத்தான் நாங்க வருவோம்’ என்று சொல்லிவிட்டு CCI வழக்கம்போல மிக்சர் தின்னும் என்பதும் தெரிந்ததே.

பசி, பஞ்சம், எதிர்காலத்தைப் பற்றிய பயம், நிலையின்மை வாட்டும்போது மட்டுமே மனிதன் இறைவனை நினைத்து ஏங்குவதும், கடவுள் அவதரிப்பார் என்று நம்பி நாட்களைக் கடத்துவதும் அதிகமாக இருக்கும். நடுத்தர வர்க்கம் அதிகமாக அதிகமாக மக்களின் நுகர்வு அதிகமாவதோடு, தேவைகளும் விழிப்புணர்வும், அரசாங்கத்தின் மீதான மக்களின் எதிர்பார்ப்பும் அதிகமாகும். தமிழகத்தில், கேரளாவில் அத்தகைய சமூக நிலை ஏற்பட்டுள்ளதே இதற்கு உதாரணமாகும். சங்கப்பரிவாரங்கள் தங்களது நீண்டகால survivalலுக்காக மிக அதிக மக்கள் ஈடுபட்டிருக்கும் துறைகளில் அரசாங்க நெருக்கடிகள் மூலம் நசுக்கி 25 வருடம் பின்னே இழுத்துவிட்டுள்ளனர்.
இதன் தொடர்விளைவுகளால் பல தொழில்துறைகள் ஆட்டம்காணும், நடுத்தர வருவாய் வர்க்கம் மேலும் நசுங்கும் என்ற புரிதலே இல்லாமல் நிச்சயமாக அதிசயம் நடக்கும் 2022-இல் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என்று சிலர் சொல்லுவார்களேயானால் அவர்கள் அசாத்தியமான தேசபக்தியுள்ள தேசாபிமானிகள் என்பதில் ஐயம் வேண்டாம். மக்கள் பஞ்சப்பராரிகளாக இருக்கும்வரை கடவுளர்கள் பெயரைச்சொல்லி ஆள்பவர்களின் இருப்புக்கு அச்சுறுத்தல் தோன்றுவதில்லை என்பதே வரலாறு நமக்குப் போதிக்கும் பாடம்.

பி. டி. தொழில்நுட்பம் இல்லாவிட்டால் பருத்தி விவசாயிகள் அழிந்துவிடமாட்டார்கள்; மான்சாண்டோ போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவு தெரிவிக்க இப்படி ஒரு கட்டுரையா, என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில் என்று தோன்றலாம். பி.டி தொழில்நுட்பத்தால் பல இலட்சம் லிட்டர் பூச்சிக்கொல்லிகள் மண்ணில் கொட்டப்படுவது தவிர்க்கப்பட்டிருந்தது. ஒரு வெள்ளாமை எடுக்க 30-40 முறை பூச்சிக்கொல்லி தெளிப்பு என்பது 5-8 முறை (அதுவும் வலுகுறைந்த சாதாரண இரசாயனங்கள்) என்ற அளவுக்கு கடந்த வருடம் வரை இருந்தது. இன்று நடவு செய்த நாளிலிருந்து வாரம் ஒரு தெளிப்பு என பட்டியல் தயாரிக்கப்பட்டு 1990-களில் பின்பற்றப்பட்ட முறையே தூசிதட்டி இறக்கிவிடப்பட்டுள்ளது. வாழ்வா சாவா பிரச்சினை என்று வரும்போது IPM என்பதெல்லாம் காகிதத்தில் மட்டுமே இருக்கும். சிறு கூட்டத்தினரது முட்டாள்தனமான சிந்தாந்த அளவிலான கார்ப்பரேட் எதிர்ப்பால் இலட்சக்கணக்கான லிட்டர் பூச்சிக்கொல்லிகள் நமது மண்ணில் இறங்கி நீர்நிலைகளில் கலந்து வர இருக்கின்றன.

சுதேசி என்ற வாதம் நம்மிடம் ஏதாவது இருந்தால்தானே விளங்கும்? மான்சாண்டோ, பேயர், டவ், டூபாண்ட், சின்ஜென்டா, அடாமா என எல்லாவற்றையும் விரட்டி விடுவோம். நம்மிடம் சுதேசியாக என்ன இருக்கிறது, அதை வைத்து இவ்வளவு பெரிய நாட்டின் தேவைகளைச் சமாளிக்க இயலுமா? நமது படைபலத்தை அதிகரிக்கும்வரை எதிரிகளோடு சமரசமாகப் போவதுபோல போக்குக்காட்டிவிட்டு, தாக்குதலை நடத்துவதுதான் சாமர்த்தியம் என்ற சாணக்கியத்தனங்கள் நடைமுறையில் பயன்படுவதேயில்லை. நம் முன்னோர்கள் காலத்தில் கணிப்பொறி என்ற ஒன்றே இல்லை; ஆனால் ஆர்யபட்டர், இராமானுசன்கள் இருந்தார்கள் என்று சொல்லிக்கொண்டே இருந்தால் இன்று வீட்டில் எப்படி அடுப்பு எரியும்? தங்க ஊசி இருக்கிறது என்பதற்காக கண்ணைக் குத்திக் கொள்ள முடியாது. ஆனால் அதுதான் நடக்கிறது.

கட்டுரையாளர்: ஆர். எஸ். பிரபு
(சமூக அக்கறையாளர், வேளாண் விற்பன்னர், ஏட்டுச் சுரைக்காய், கார்ப்பரேட் கால்நக்கி, மான்சான்டோ கைக்கூலி, காங்கிரஸ் களவாணி, தேசபக்தியில்லாத கருங்காலி – இதில் ஏதாவது ஒன்றை உங்களது பிரியம்போல எடுத்துக்கொள்ளவும்).

#ஜெய்ஹிந்த்