உழவர் உற்பத்தியாளர் கம்பெனி லிமிடெட் என்னும் மாய மான்!

உழவர் உற்பத்தியாளர் கம்பெனி லிமிடெட் என்பது வழக்கம்போல ஒரு கண்துடைப்பு, நிச்சயமாக take off ஆகாத மாடல் என்று இரண்டு வருடங்களுக்கு முன்னர் அவற்றின் பிரச்சாரம் உச்சத்தில் இருந்தபோது நான் குறிப்பிட்டபோதெல்லாம் பலர் – குறிப்பாக academia மக்கள் – என்னை வறுத்தெடுத்தார்கள். வயல் வரப்புகளுக்கே சென்றிராத ஆய்வக ஆராய்ச்சியாளர்கள் ஓய்வூதியதாரர்கள் ஆனபிறகு அவர்களது NGOக்கள் மூலம் “சேவை” செய்வதற்கு மக்கள் வரிப்பணத்தைப் பயன்படுத்துவதைத் தாண்டி இவற்றால் பலன் ஒன்றும் விளையப்போவதில்லை.

சாதிச்சிக்கல், உள்குத்து, வெளிக்குத்து போன்ற எதுவும் இல்லாத உழவர்சந்தை மாடல்களே நடைமுறையில் எளிமையான தீர்வுகள். கர்னாடகாவும் ரயத்பஜார் என்றபெயரில் இதே மாடலை வைத்திருக்கிறது. உழவர்சந்தை மாடலை இன்னும் மேம்படுத்தலாமே தவிர அதைவிட எளிமையான மார்க்கெட்டிங் மாடலை விவசாயிகளிடம் செயல்படுத்துவது நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்று. Value addition, supply chain management, cold storage போன்றவை நேரடியாக விவசாயிகளால் செயல்படுத்த முடியாதவை; அதிக முதலீடும், சந்தை தேடுதல்களும் திரும்பவும் இடைத்தரகர்களை ஊக்குவிக்கும் செயலாகவே அமையும்.

End to end integration என்பதெல்லாம் விவசாயத் தொழிலில் கனவாகவே இருக்கிறது. ஈஷா போன்ற கம்பெனிகள் கூட உழவர் உற்பத்தியாளர்கள் கம்பெனியை ஊக்குவிக்கின்றனவே என்ற கேள்வி எழக்கூடும். அலுவலக சூழலிலும், தனிப்பட்ட குடும்ப வாழ்விலும், சமூக அமைப்பிலும் ஒரு சராசரி மனிதனாகத் தன்னைப் பொறுத்திக்கொள்ள முடியாத தற்குறி ஸம்ஸப்தகர்கள் ஊரான்வீட்டு காசில் நடத்துவதை உதாரணம் காட்டுவதே தவறான ஒன்றாகும்.

தற்போதைய டிரென்டிங் “உழவர் உற்பத்தியாளர் கம்பெனி லிமிடெட்” (Farmer Producer Company Ltd.). முதல் இரண்டு ஆண்டுகள் அவை நபார்டு வங்கியின் தாங்கலில் இயங்கும். பின்னர் விவசாயிகளிடம் ஒப்படைக்கப்படும். தேவைப்பட்டால் இதை ஸ்கிரீன்ஷாட் எடுத்துவைத்துக்கொள்ளுங்கள். 2020-இல் எத்தனை உஉக லிமிடெட் வெற்றிகரமாக இயங்குகிறது, எத்தனை மூடப்பட்டது என்று பார்ப்போம்.

Will Farmer Producer Organizations address Agrarian distress?