அமாவாசை சூத்திரமும்*, ஆல்-இன்-ஆல் அழகுராஜா உரக்கடைகளும்

இன்று பெரும்பாலான பூச்சிமருந்து, உரக்கடைகள் மற்றும் ஹார்ட்வேர், சிமெண்ட் கடைகள் தனியாக தொழில்முறையில் நடத்தப்படுகின்றன என்றாலும் ஒன்றிரண்டு பழைய கடைகள் அப்படியேதான் இருக்கின்றன. அங்கே விதை, உரம், பூச்சிக்கொல்லி மருந்து, மாட்டுத்தீவனம், புண்ணாக்கு, சிமெண்ட், எலெக்ட்ரிகல், ஹார்ட்வேர் சாமான்கள், ஆஸ்பெஸ்டாஸ் அட்டை முதல் மூக்கணாங்கயிறு வரை சகலமும் கிடைக்கும். அவர்களின் ஸ்டைல்-தான் உண்மையான Brick & Mortar format. தேவையான சரக்குகளை பணம்செலுத்தி எடுத்துக்கொள்வார்கள். எவ்வளவு விற்கமுடியுமோ அவ்வளவு மட்டுமே ஆர்டர் கொடுப்பார்கள், கம்பெனி விற்பனை பிரதிநிதிகள் மாத இறுதி டார்கெட்டை நிறைவுசெய்ய டம்பிங் செய்தால் தைரியமாக NO சொல்லுவார்கள். விவசாய இடுபொருட்கள், ஹார்ட்வேர் சாமான்கள், எலெக்ரிகல் சாமான்கள் என அனைத்திலும் 10-15% லாபத்துடன் அந்த சுற்றுவட்டாரத்திலேயே குறைவான விலையில் தருவார்கள். தமிழ் தேதி, மாதம், அஷ்டமி, நவமி, அமாவசை, பவுர்ணமி என கலந்துகட்டி அடிப்பார்கள். அதில் பூச்சிமருந்துகளை எப்படி பேலன்ஸ் செய்கிறார்கள் என்று பார்த்தோமானால் முப்பது வருடங்களுக்கு முன்னரே சந்தையில் வந்த மருந்துகளை விற்பதோடு, புதிய தலைமுறை மருந்துகளையும் கணிசமான அளவுக்கு விற்பார்கள். அது எப்படி?

பயிர்களைத் தாக்கும் முக்கியமான நாசகார பூச்சிகள் எல்லாம் Lepidoptera என்ற ஆர்டருக்குக்கீழே Noctuidae என்ற குடும்பத்தில்தான் இருக்கின்றன. இதன் வாழ்க்கைச்சரிதம் 30 நாட்கள்தான் (முட்டை->லார்வா(புழுப்பருவம்)->ப்யூப்பா(கூட்டுப்புழு)->அடல்ட்(பட்டாம்பூச்சி). இந்த பட்டாம்பூச்சிகள் நல்ல காரிருள் சமயத்தில்தான் mating-இல் ஈடுபடும், அதாவது அமாவாசை சமயத்தில். அடுத்த அமாவாசைக்குள் ஒரு life cycle முடிந்துவிடும். ஆய்வகத்தில் வளர்க்கும்போதுகூட rearing chamber-ஐ கறுப்புத்துணியால் மூடி வைக்காவிட்டால் sterile முட்டைகள் மட்டுமே கிடைக்கும். அதன் புழுக்களின் வளர்ச்சி மொத்தம் ஆறு instar-கள். முதல் இரண்டு இன்ஸ்டார்களின்போது எதையாவது பக்கத்தில் காட்டினாலே செத்துவிடும். கோக், பெப்சி, பிராந்தி அடித்து கன்ட்ரோல் செய்வது, வேப்பிலை, நொச்சி இலைச்சாறு அடிப்பது குறித்து “இயற்கை விஞ்ஞானிகள்” சொல்வது எல்லாமே இந்த டைமிங் சென்ஸ்-தான். மூன்றாவது இன்ஸ்டாருக்கு மேல் இந்த சித்துவேலையெல்லாம் காட்டினால் ‘மூடிட்டு போடா’ என்று சொல்லாதகுறையாக மொத்த காட்டையும் இரண்டு நாளில் தின்று தீர்த்துவிடும். வேறுசில பூஞ்சான, வைரஸ் காரணிகள் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும் என்றாலும் அது இந்த இடத்தில் தேவையில்லாதது.

இங்கேதான் நமது ஆல்-இன்-ஆல் அழகுராஜா பிசினெஸ் மாடல் வருகிறது. அமாவாசைக்கு முதல் இரண்டு நாட்களிலிருந்து ஏழெட்டு நாட்களுக்கு விலை குறைந்த generic மருந்துகளை விற்பார்கள். அதனுடன் ஏதாவது 100% லாபமுடைய பயிர் வளர்ச்சி டானிக்குகளை அள்ளிபோட்டு கொடுத்துவிடுவார்கள். பவுர்ணமிக்கு ஒருவாரம் இருக்கவே புதிய தலைமுறை மருந்துகளுக்கு மாறிவிடுவார்கள். அப்போது டானிக்குகளின் அளவை குறைத்தோ அல்லது விற்காமலோ விட்டுவிடுவார்கள். மொத்தத்தில் எல்லாநாளும் ‘எல்லா பூச்சிமருந்துகளும் நியாயமான விலையில் கிடைக்கும்’ என்று ரொக்க பில்லில் எழுதியிருப்பதுபடியே நடந்துகொள்வார்கள். அந்த 10-15% இலாபம் அவர்களுக்கு நிறைவானதாக இருக்கும். மக்களும் அதற்கு இராசியான கடை என்று நற்பெயர் வைத்திருப்பார்கள். அந்த விற்பனைக்கேற்ப வரும் தங்கக்காசுகள், பரிசுப்பொருட்களை பெற்றுக்கொள்வார்களேதவிர இந்த ஆண்டு இந்தனை கிராம் காயின் வாங்க வேண்டும், பாங்காக் டூர் போகவேண்டும் என்று டார்கெட் வைத்து எதையும் விற்கமாட்டார்கள். Peach of mind – Guaranteed!

ஒரு குரூப் இருக்கிறது. இந்த ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகள் எல்லாம் எதற்குமே உருப்படாதவை, எல்லாமே நம் முன்னோர்கள் கண்டுபிடித்துவிட்டர்கள், உறுப்புமாற்று அறுவைசிகிச்சைகூட விநாயகருக்கு தலை மாற்றியபோதே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது, புஷ்பக விமானத்திலிருந்தான் இன்றைய விமானம் கண்டுபிடித்தார்கள் நீங்கள் எதுவுமே புதிதாக செய்யவில்லை என்று எதற்கெடுத்தாலும் நொட்டம் சொல்லிக்கொண்டே இருப்பது. அவர்களை திருப்திபடுத்தவே முடியாது. ஆராய்ச்சிகளின்மீது, ஆராய்ச்சியாளர்களின்மீது விமர்சனங்கள் இருந்தாலும் ஒட்டுமொத்தமாக simply waste என்று ஒதுக்கிவிட முடியாது என்ற குறைந்தபட்ச அறிவுகூட இருக்காது. அவர்களுக்காக எப்படியெல்லாம் கிளாஸ் எடுக்க வேண்டியிருக்கிறது!

* – இந்த darkness related to the reproduction of Noctuidae insects குறித்து இரண்டு தரப்புகள் இருக்கிறது. ஒரு தரப்பு அதை ஏற்றுக்கொள்ளமாட்டோம், எனவே இது வெறும் hypothesis என்று சொல்லி ஆய்வு முடிவுகளைக் காட்டுகிறது. மற்றொரு தரப்பு நிரூபித்து காட்டுகிறது. பூச்சிகளைக் கொல்வது மட்டும்தான் நானறிந்த கலை, எனவே உங்களுக்கு தெரிந்த ஒரு பூச்சியியல் நிபுணரிடம் கேட்டுப்பாருங்கள். அப்போது நான்கு வகையான நிகழ்தகவுகள் வரலாம். ஒன்று, அதை சரியென சொல்லலாம். இரண்டு, அதை தவறென சொல்லலாம், மூன்று, தெரியாது என சொல்லலாம். நான்கு, ஒருவேளை அவருக்கு தெரியாது என்றாலும் அவரது நிபுணத்துவத்தை விட்டுக்கொடுக்காமல் எனக்கு எல்லாம் தெரியும் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை எனவும் சொல்லலாம்.

சரி, இதைவைத்து நீங்கள் என்ன செய்யலாம். அலுவலகத்தில் நேரம் போகவில்லையெனில் அந்த முடிவுகளை Poisson distribution – இல் உள்ளே நுழைக்கமுடியுமா என்று கோடு போட்டு பார்க்கலாம். அதற்கு வாய்ப்பே இல்லையெனில் மறந்துவிட்டு வேலையை பார்க்கலாம்!!

தனியார் வேளாண்மைக் கல்லூரிகள் தமிழகத்தில் பரவலாக தொடங்கப்படுவதுகுறித்து ஒரு பிரிவினர் அதிருப்தி தெரிவிப்பதேன்? அதைப்பற்றி கொஞ்சம் விரிவாக சொல்ல இயலுமா?

கேள்வி: தனியார் வேளாண்மைக் கல்லூரிகள் தமிழகத்தில் பரவலாக தொடங்கப்படுவதுகுறித்து ஒரு பிரிவினர் அதிருப்தி தெரிவிப்பதேன்? அதைப்பற்றி கொஞ்சம் விரிவாக சொல்ல இயலுமா?

பதில்:
Type One Error occurs when a correct hypothesis is rejected. Type Two Error occurs when a wrong hypothesis is NOT rejected.

தனியார்மய எதிர்ப்பு அல்லது ஆதரவு என்பது சிக்கலான ஒன்று என்றாலும் பெரும்பாலானவை ஒட்டுமொத்த தனியார்மயமாக்கல் எதிர்ப்பு, சந்தர்ப்பவாத எதிர்ப்பு, கண்மூடித்தனமான ஆதரிப்பு மற்றும் நட்டநடு சென்டர் நடுநிலைமை என நான்குவகையே.

தனியார்மய அதிருப்தியாளர்கள் சொல்லும் முக்கியமான காரணம் கல்வியின் தரம் குறைந்துவிடும் என்பதாகும். இங்குதான் பூனைக்குட்டி வெளியே வருகிறது. இன்றுவரை வேளாண்துறையில் முனைவர்களை, ஆராய்ச்சியாளர்களை, வல்லுனர்களை உருவாக்குவதாகச் சொல்லும் த.நா.வே. பல்கலையில் பட்டம் பெற்றவர்களே உதவிப்பேராசிரியர்களாக தனியார் கல்லூரிகளில் பணியாற்றச்செல்கின்றனர். தனியார் கல்லூரி முதல்வர்களும் நேரடியாக த.நா.வேளாண் பல்கலைக்கழகத்தால் நிரப்பப்பட்டு கல்வி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளின் தரம் கண்காணிக்கப்படுகிறது. கல்வி பயில வெறும் கட்டிடங்கள், ஆய்வகங்களைத் தாண்டி தகுதியான ஆசிரியர்களும், முதல்வரும் அறிவுஜீவிகள், மெத்தப்படித்த, நாலும் தெரிந்த நல்லவர்களைத் தன்னகத்தே கொண்டிருக்கும் வேளாண் பல்கலையிலிருந்தே சென்றிருக்கும்போது கல்வியின் தரம் நீரத்துப்போகுமென்பது நகைமுரண். தேர்வுக்கு வினாத்தாள்களை வடிவமைப்பது, விடைத்தாள்களை மதிப்பிடுவது என ஒட்டுமொத்த குடுமியையும் அரசு வைத்திருக்கிறது. BSc agri மாணாக்கர்களுக்கு வகுப்பெடுக்க MSc agri பட்டத்துடன் NET தகுதி போதுமானது என்பது நடைமுறை. ஆனால் இன்றைய தேதியில் PhD பட்டமுடைய முனைவர்களே வகுப்பெடுக்கச் செல்கின்றனர்.
இப்படியிருக்கையில் கல்வியின் தரம் குறைகிறது என்றால் வகுப்பெடுக்கச்செல்பவர்களின் தராதரம் என்னவென்பது தீவிரமாக கேள்விக்குட்படுத்த வேண்டிய ஒன்று.

தனியார்மயத்தால் பாலாறும் தேனாறும் ஒடுமா என்றால் நிச்சயமாக ஓடாது. ஆனால் ஒருவருக்குக் கிடைக்கும் வாய்ப்பை தடுப்பது என்பதே வன்முறை. தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் வெளிவரும் மருத்துவர்களைக் காட்டிலும் குறைவாகவே வேளாண் பட்டதாரிகள் வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது. எண்ணிக்கை அதிகமாக இல்லாத இன்றைய சூழலில் விவசாயிகளிடம் தொழில்நுட்பங்களை கொண்டுசேர்க்க மிகப்பெரிய வெற்றிடம் உள்ளது. நூறுபேர் வெளியில் வந்தால் பத்துப்பேராவது அதே துறையில் இருப்பார்கள், அதில் ஐந்து பேர் விற்பன்னர்களாக விரிவடைவார்கள் என்பது இயல்பு. அதற்கான வாய்ப்பையே உண்டாக்கவிடாமல் செய்வது முறையற்ற செயலாகும்.

கணிசமான எண்ணிக்கையிலான ஆட்கள் இருக்கும்போதுதான் தரமான ஒன்றை/ஒரு ஆலோசகரை நாடுவதற்கு விவசாயிகளுக்கு options இருக்கும். தமிழகத்தில் தினசரி மருத்துவ உதவிகள் தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையைக் காட்டிலும் ஏதோவொரு காரணத்துக்காக வேளாண் நிபுணர்களின் ஆலோசனையை நாடும் விவசாயிகளின் எண்ணிக்கை மிக அதிகம். அப்படியிருக்கையில் ஆட்களை இல்லாத ஒரு செயற்கையான பற்றாக்குறையை வைத்திருக்கவேண்டிய அவசியம் என்ன?

தற்சமயம் நிபுணத்துவம் என்பது மாட்டுச்சாணியின்மூலம் மட்டுமே மாற்றம் வரும் என்று நம்பும் இயற்கை விவசாய ஆரவலர்களிடமும், இரசாயனங்கள் மட்டுமே ஏற்றம் தரும் என்று மூளைச்சலவை செய்யப்பட்ட நிபுணர்களிடமும், உயிரியல் முறையில் பயிர்மேளாண்மை சிறப்பாக செய்யலாம் என்றாலும் பணபலத்தால், ஆள் அம்புகளால் பயோ புராடக்ட்கள் என்ற பெயரில் போலிகளை விற்கும் ஆசாமிகளிடமும் சுருங்கி சின்னாபின்னமாகி நிற்கிறது. இந்த மூன்றையும் பேலன்ஸ் செய்து பயனாளிகளுக்குக் கொண்டுசேர்க்க வேண்டிய வேளாண்துறையும் தேங்கிக்கிடக்கும் கோப்புகளிலில் ஆட்கள் பற்றாக்குறையால் முடங்கியிருக்கிறது.

ஆக, Type One Error occurs when a correct hypothesis is rejected. Type Two Error occurs when a wrong hypothesis is NOT rejected.

விவசாயப் பல்கலைக்கழகம் உண்டாக்கும் Inbreeding Depression

எப்படியாச்சும் பி.எஸ்.சி அக்ரி முடிச்சிடனும். ஒரு டிபார்ட்மெண்ட்ல ஸ்பெசிலைஸ் பண்ணுவோமேன்னு எம்.எஸ்.சி சேரனும். அந்த ரெண்டு வருசத்துலயாவது எதாச்சும் படிச்சு பரீட்சை எழுதி பல்கலைகழத்தவிட்டு இடத்தை காலி பண்ணனும். இல்லன்னா சொந்தமா பிராக்டீஸ் (இதெல்லாம் டாக்டருங்க, வெட்னரி டாக்டருங்க பண்றதாச்சே!) பண்ணனும். குறைந்தபட்சம் ஒரு தனியார் நிறுவனத்துலயாவது வேலைக்கு போயிடனும்.

இன்னும் கொஞ்சம் நாள் எடுத்து யோசிப்போமேன்னு பி.எச்.டி சேரனும். அப்படியே அந்த NET எழுதி சர்டிபிகேட் வாங்கிடனும் (பத்து வருசமா ஒரே மேட்டர படிச்சு நெட்-கூட வாங்கலன்னா எப்படி?!). அங்கேயே காதலன்/காதலியை ரெடிபண்ணி முடிஞ்சவரைக்கும் சொந்த சாதிலயே பாத்து கல்யாணமும் பண்ணிக்கனும். அங்கேயே ஏதாச்சும் தற்காலிக ஆராய்ச்சி வேலைல சேர்ந்து அடுத்த உதவிப்பேராசிரியர் வேலைக்கு எப்ப எடுப்பாங்கன்னு வருசக்கணக்குல நாள் எண்ணிட்டு இருக்கனும்.

ரொம்ப வருசம் ஆகும்னு தெரிஞ்சா அப்டியே ஒரு போஸ்ட்-டாக் பண்ண எதோ ஒரு நாட்டுக்கு போகனும். சரி, அவ்ளோதூரம் போயிட்டோமே அங்கேயே இருந்து கொஞ்சம் முன்னுக்கு வருவோமேன்னு எந்த சிந்தனையும் இருக்கக்கூடாது. எப்படா AP கால்ஃபெர் வரும்னு பாத்துட்டே இருந்து ஓடியாந்தரனும்.

இங்கவந்து சேரை தேச்சுகிட்டு யுனிவர்சிட்டிக்குள்ளயே ஓட்டனும். வெளிய போனவனுங்க கொஞ்சம் உருப்பட்டுட்டதா தெரிஞ்சா ‘அவனெல்லாம் அந்த காலத்துல’ என்று பழம்பெருமை பேசனும். எதுக்கெடுத்தாலும் ‘நான் விஞ்ஞானி, சைன்டிஸ்ட்டு’னு பேசிப்பேசி சைன்டிஸ்ட்டு ஆகாதவன்லாம் அக்யூஸ்ட்னு நெனச்சிட்டு சுத்தறதா நெனப்புல திரியணும்.

இவனுங்க இப்படியே ஆயுசுக்கும் யுனிவர்சிட்டிய விட்டே வெளிய போகாம விவசாயிகளை முன்னுக்கு கொண்டுவரேன்னு மிக்சர் தின்னுட்டே சுத்தறானுங்களேன்னு தற்காலிக ஆராய்ச்சி வேலையெல்லாம் மூணு வருசத்துக்குமேல செய்யக்கூடாதுன்னு ரூல்ஸ் போட்டு அப்பவாச்சும் வெளில போவானுங்களேன்னு பாத்தா ரூல்ஸ் போட்ட அதிகாரி என்ன சாதி, அடுத்தவாட்டி இந்தாளு திரும்பவும் பதவிக்கு வருவாரா, ஒருவேலை தனியார் கல்லூரிங்ககிட்ட காசு வாங்கிட்டு இங்க இருக்கறவனயெல்லாம் அங்கபோயி வேலை செய்யட்டும்னு துரத்தி விடறாரான்னு யோசிச்சிட்டு இருக்கானுங்க.

நான் பி.எஸ்.சி முதலாமாண்டு படிக்கும்போது தமிழில் மேடையில் சிறப்பாக பேசக்கூடிய ஆராய்ச்சிமாணவர் ஒருவர் பல்கலைக்கழக விழா ஒன்றில் ஆங்கிலத்தில் சொன்னது:

Those who exit the university after BSc are the Real Products,

Those who exit the university after MSc are the Byproducts,

Those who complete PhD and seek employment in the same university the Waste products.

அவர் இப்போது பல்கலைகழகத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது!

பத்து வருடங்கள் அங்கேயே படிச்சிட்டு, அங்கேயே வேலையும் வாங்கிட்டு மாசத்துக்கு ஒருவாட்டி ஏதாச்சும் ஒரு விவசாயி தோட்டத்துலபோயி இளநீர் குடித்துவிட்டு நான் சைன்டிஸ்ட்டு, விவசாயிகளைப்பத்தி, விவசாயத்தைப்பத்தி எனக்கு தெரியாததே இல்லன்னு சொன்னா அங்க ஸடூடன்டா இருக்கறவன் வேணும்னா கேட்டுக்கிட்டு ‘ஆமா சார், நீங்க பெரிய ஆளு’ என்று சொல்லலாம். தினமும் இருநூறு, முன்னூறு கிலோமீட்டர் போயி விவசாயிகள், விற்பனையாளர்கள், புரோக்கர்கள், கொள்முதல் ஆலை அதிபர்கள்னு பலதரப்பட்ட ஆட்களையும் சந்திச்சு win-win டீலிங் பண்றவன்கிட்டலாம் ‘நான் சைன்டிஸ்ட்டு’னு சொன்னா ‘போ தம்பி, போயி வீட்ல பெரியவங்க இருந்தா வரச்சொல்லு’னு சொல்லாம வேற என்ன சொல்லுவான்?

சுமார் 20 சதவீத ஆட்கள்தான் உண்மையான ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானி என்று கொண்டாட தகுதியானவர்கள். இன்றும் அதுபோன்ற பேராசிரியர்களிடமிருந்து ஒரு போன் வந்தால்கூட எழுந்து நின்று பேசக்கூடிய அளவில் உயர்வான இடத்தில் இருக்கிறார்கள். அவர்களை போன்றவர்களால்தான் ஏதோ கொஞ்சம் இருக்கிறது.

பேஸ்புக்ல தான் சொன்ன கருத்துக்கு மாற்றுக்கருத்து சொன்னா பதில் சொல்றதுக்குப்பதிலா டெலீட் பண்ணி, பிளாக் பண்ணிட்டு சொம்படிக்கிற கூட்டத்தை மட்டும் வெச்சுகிட்டா ஒரு பத்து வருசத்துல நாமளும் பெரிய சொம்பாத்தான் இருப்போம்.

இதையெல்லாம் படிச்சிட்டு ஒரு கணிசமான எண்ணிக்கைல பல்கலைக்கழக மக்கள் என்னை unfriend செய்யக்கூடும். போனா போகட்டும். சொம்புமேல கோபப்பட்டு குண்டி கழுவாம போன கதைதான்! (நண்பர் ஒருவர் அண்மையில் அறிமுகப்படுத்திய பழமொழி!).

முற்றும்.