கோயமுத்தூரில் கட்டப்பட்டுள்ள அதிசய இரண்டடுக்குப் பாலம்

கோயமுத்தூரில் கட்டப்பட்டுள்ள அதிசய இரண்டடுக்குப் பாலத்தைப் பலரும் பரிகசித்து வருகின்றனர். ஆனால் அதன் பின்னால் உள்ள அறிவியல் உண்மையையும், பண்டைய உரோமானியப் பேரரசுகளுக்கும் உள்ள தொடர்பையும் குறித்த இரகசியத் தகவல்களை வெளியிடுவது இப்போது அவசியமாகிறது.

இந்தியாவில் உள்ள இரயில்வே பிராட்கேஜ் தண்டவாளங்கள் ஐந்தரை அடி (1676 மிமீ) அகலமுடையவை. கிட்டத்தட்ட எல்லா தண்டவாளங்களும் இன்று பிராட்கேஜ் ஆகிவிட்டன.

ஸ்டேண்டர்டு கேஜ் என்பது 4 அடி 8.5 அங்குலம் (1435 மிமீ) இடைவெளி கொண்டவை. டில்லி, பெங்களூர், சென்னை மெட்ரோ போன்றவை, டிராம் இரயில்கள் எல்லாம் ஸ்டேண்டர்டு கேஜ் அகலமுடைய தண்டவாளத்தில்தான் இயங்குகின்றன. இந்தியாவின் முதல் இருப்புப்பாதை ஸ்டேண்டர்டு கேஜ் அகலத்தில்தான் அமைக்கப்பட்டது.

அதை அமைத்தவர்கள் ஆங்கிலேயேப் பொறியாளர்கள். தளவாடங்கள், இரயில் பெட்டிகள் அங்கிருந்தே எல்லா இடங்களுக்கும் சென்றதால் கிட்டத்தட்ட உலகம் முழுவதும் பிராட்கேஜ் என்பது 4 அடி 8.5 அங்குலம் அல்லது சற்றுக் கூடுதலாக மட்டுமே அமைந்துவிட்டது.
அமெரிக்காவிலும் முதல் இரயில்வழித்தடங்களை அமைத்தவர்கள் ஆங்கியேயர்களே என்பதால் அங்கும் ஸ்டாண்டர்ட் கேஜ் என்பது அதே அளவுதான்.

ஏன் ஆங்கிலேயப் பொறியாளர்கள் தண்டவாளங்களை 4 அடி 8.5 அங்குலமாக வடிவமைத்தனர்? இன்னும் பெரிதாக எட்டு அடி, பத்து அடி அகலத்தில் அமைத்திருக்கக்கூடாதா?

ஆரம்பத்தில் டிராம் தண்டவாளங்களை 4 அடி 8.5 அங்குலத்தில் வடிவமைத்த பொறியாளர்கள் அதே தளவாடங்களைப் பயன்படுத்தி நெடுந்தூர இருப்புப்பாதைகளையும் வடிவமைத்தனர்.
ஏனெனில் அதைவிட அகலமான தண்டவாளங்கள் போட்டால் அதன் பெட்டிகளை சாலைகளில் எடுத்துவர முடியாது.

சாலைகளில் இரயில் பெட்டிகளை எடுத்துவரும் சரக்கு வண்டிகளிலும் இரு சக்கரங்களுக்கு இடையேயான இடைவெளியும் 4 அடி 8.5 அங்குலமே இருந்தது.

காரணம், இங்கிலாந்து உட்பட அந்தக் காலத்தில் ஐரோப்பா முழுவதும் சாலைகளை அமைத்தவர்கள் உரோமானிய பேரரசர்கள். மக்கள் குதிரைமீது அமர்ந்து மட்டுமே போருக்கும், வியாபாரத்துக்கும் பயணப்பட்ட காலங்களில் அவர்கள்தான் முதன்முதலில் இரண்டு குதிரைகள் பூட்டப்பட்ட இரதங்களைப் போருக்கும், சரக்குப் போக்குவரத்திற்கும் பயன்படுத்தினர்.

அந்த உரோமானிய பேரரசர்களின் இரதங்களில் இரண்டு சக்கரத்துக்கு இடையே இருந்த அகலம் 4 அடி 8.5 அங்குலம். இரண்டு போர்க்குதிரைகளை ஒரு இரதததில் பூட்டும்போது தேவைபட்ட இடைவெளிதான் இது. அதாவது the width of two horses’ asses. என்பதே.

இன்று விண்வெளிக்கு மனிதர்களை எடுத்துச் சென்றுவரும் விண்வெளி ஓடங்கள்தான் உலகின் அதிநவீன போக்குவரத்துக் கருவி. அதில் நடுவில் உள்ள மைய எரிபொருள் தொட்டியுடன் solid rocket booster எனப்படும் துணை எரிபொருள் தொட்டிகள் ஏன் தனியாக இணைக்கப்படுகின்றன? ஏன் அதற்கென மிக விரிவான எலக்ரிகல், எலக்ட்ரானிக் தொடுப்புகள் உண்டாக்க வேண்டியிருக்கிறது?

Solid rocket booster-ஐயும், மைய எரிபொருள் தொட்டியையும் தயாரிப்புக் கூடத்திலிருந்து பெரிய சரக்கு லாரிகளில்தான் கொண்டுவர வேண்டும். எரிபொருள் நிரப்பப்பட்ட பூஸ்டர்கள் விண்வெளி ஓட தயாரிப்பு மையத்திலிருந்து ஏவுதளத்திற்கு இரயில் தண்டவாளங்கள் வழியாகத்தான் எடுத்துச் சென்றாக வேண்டும். அதற்குத் தேவையான இதர கருவிகள் அனைத்தும் இரயில் பெட்டிகளில் வைத்தே எடுத்துச் செல்ல முடியும்.

உரோமானியப் பேரரசில் சக்கரங்களை இரதத்தில் பொருத்த இரண்டு குதிரைகளின் ass அகலத்தை அளந்து பார்த்துக்கொண்டிருந்த நபர்களுக்குத் தாங்கள் செய்தது எப்பேர்ப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவம் என்று தெரியாது.

இப்போது கோயமுத்தூர் பாலத்திற்கு வருவோம். பண்டைய உரோமானியப் பேரரசில் இருந்த இரண்டு குதிரைகளின் ass-தான் இன்று வடிவமைக்கப்படும் இரயில், கார், லாரிகளுக்கு ஆரம்ப மூலம் என்பது மாதிரி இந்த பாலத்திற்கும் இரண்டு ass-களின் அகலமே போதும் என்று படத்தில் உள்ள இரண்டு ass-கள் முடிவு செய்ததாலேயே பாலம் அவ்வளவு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பது தெரிய வருகிறது.

ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சம்பவத்தைச் செய்கையில் சின்ன மிஸ்டேக் ஆகிவிட்டதால் What an ass! என்று சொல்வதற்குப் பதிலாக Bloody assholes என்று சொல்லும்படி ஆகிவிட்டதாம்.

நம்முடைய முன்னோர்களின் ஒவ்வொரு செயலிலும் அறிவியல் காரணங்கள் கொட்டிக் கிடக்கிறது என்று சொல்வார்கள். இதைப் படித்த பின்னர் எந்த asshole அப்படி சொன்னது என்று கேட்கக்கூடாது.

Author: Prabu RS

* Views expressed here are personal * With consent, anyone can use the essays anywhere * Write to me at PRABU48@GMAIL.COM * In HAM radio VHF repeaters of Tamil Nadu, call me as VU3WWD *