கோடைகாலத்தில் தக்காளி விலையேறுவதும், நுகர்வோர் புலம்பல்களும்

னி சதியைப் பார்த்தித்தீர்களா என்று ஆரம்பித்துவிடுவார்கள். மற்றபடி அதன் அறிவியல் பின்னணி என்ன, எதிர்கால விளைவுகள் எப்படியிருக்கும் என்பதெல்லாம் யாருக்கும் கவலையில்லை. அப்போதைக்கு வல்லுனராக, நிபுணராகக் காட்டிக்கொள்ளவேண்டும்; யாரையாவது திட்ட வேண்டும்.

தக்காளியில் இரவு வெப்பநிலை 22 டிகிரியை தாண்டினால் பூவிலுள்ள மகரந்தம் அதன் முளைக்கும் செயல்திறனை இழந்துவிடும். Heat set எனப்படும் வெயிலை தாங்கி வளரும் பண்பு இருந்தாலும் இதுதான் வர்த்தக ரீதியில் பயன்படுத்தப்படும் இரகங்களின் அதிகபட்ச அளவு. அவ்வாறு மகரந்தம் கிடைக்காதபட்சத்தில் சூலகம் தானாகவே ஓரளவுக்கு வளர்ந்து விதையில்லாத சிறிய காயைத் தரும். படத்தில் இருப்பது அதுதான். கடந்த மாதம் தாறுமாறாக விலையேறக் காரணம் இந்த இரவுநேர வெப்பநிலை விளைவுதான்.

இந்த களேபரத்துக்கிடையில் ஓர் ஆர்வலர் பன்னாட்டுக்கம்பெனிகளின் விதைகள் heat set என்ற பண்பு இல்லாதவை அதனால் கோடையில் காய்கள் வராது. அரசிடம் இருக்கும் ‘மருதம்’ என்ற இரகம் வெயிலைத்தாங்கி வரும் ஆனால் அதிகாரிகள் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து சதி செய்து அதை சந்தைப்படுத்தாமல் செய்துவிட்டனர் என்று சொன்னதாக விகடன் கட்டுரை வெளியிட்டிருந்தது. அதைப் படித்தபின் ‘யாருய்யா நீ, எனக்கே உன்னை பாக்கனும்போல இருக்குதே’ என்று ஆச்சரியப்பட்டுப் போனோம்.

மாடுகளுக்கு சினை ஊசி போட்டு கலப்பினம் உண்டாக்கி A2 பால் கிடைக்காமல் செய்து, சர்க்கரை நோயை பரப்பியதால் இது பன்னாட்டு மருந்துக் கம்பெனிகளின் சதி என்று சமூக அக்கறையுடனும், மாடுகளுக்கு உடலுறவுகொள்ள காளை கிடைப்பதில்லை என்று தார்மீக அக்கறையுடனும் பேஸ்புக்கில் கண்துஞ்சாது களப்பணியாற்றும் ஆர்வலர்களின் வாய்க்கு இன்னொரு அவல் கிடைத்திருக்கிறது.

கால்நடைகளில் காளைக்கன்று பிறந்தால் சில மாதங்களுக்குப் பிறகு கறிக்கு விற்றுவிடுவது நடைமுறை. பெரும்பாலான நேரங்களில் போதுமான பால், தீனி கிடைக்காமல் காளைக்கன்றுகள் சாகக் கிடக்கும்; சில நேரங்களில் செத்துவிடும். அதேநேரம் கிடாரியாக இருந்தால் ஆறேழு மாதங்கள் கழித்து கருவுற்றபின் விற்றால் கூடுதல் வருவாய்; சிலநேரங்களில் அதை வைத்துக்கொண்டு ஆறேழு ஈற்றுகளைத் தாண்டிய வற்றிய தாய்க்கறவைகளை கறிக்கு விற்றுவிடுவர்.

விந்தணுவில் இருந்து XX நிறப்புறி (குரோமோசோம்) உடைய, அதாவது பெண் கன்றுகள் மட்டுமே ஈனக்கூடிய சினை ஊசிகளை மட்டும் சந்தைக்கு அனுப்ப தற்போது அரசின் National Dairy Research Institute மூலமாக ஆராய்ச்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. தற்போது இருக்கும் Flow Cytometry மூலமாக 90% பெண் குரோமோசோம்களைப் பிரித்தெடுக்க முடியும் என்றாலும் அது நடைமுறைக்கு ஒத்துவராத விலையில் இருக்கிறது. நமது விஞ்ஞானிகள் இத்தகைய தொழிநுட்பத்தை உண்டாக்கினால் ஊரக கால்நடை வளர்ப்பின் மூலம் வரும் வருவாய் கிட்டத்தட்ட 30% வரை அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. எதிர்காலத்தில் காளைக்கன்றுகள் முழுவதுமாகக் கிடைக்காமல் போனால் மாட்டுக்கறி வணிகம் முழுவதும் கழித்துக்கட்டப்படும் வத்தக்கறவைகளை நம்பியே இருக்கவேண்டிவரும். ஒரு மாடு அதன் முழு உற்பத்தித்திறனை இழந்தபிறகே கறிக்கு அனுப்பப்படும் என்பதால் மாட்டுக்கறி, தோல், எலும்பு போன்றவை விலையேற வாய்ப்பிருக்கிறது. சுத்த சைவ மக்கள் சாப்பிடும் மாத்திரைகளின் base material-கூட மாட்டு எலும்புதான் என்பதால் மாத்திரைகளும் ஓரளவுக்கு விலையேறலாம். ஆனாலும் தொழில்நுட்பத்தின் விளைவு நல்லதா கெட்டதா என்ற நமது ஊகங்களின் அடிப்படையில் ஆராய்ச்சிகளை ஒருபோதும் புறக்கணிக்கக் கூடாது.

கோமாதாவின் காவலன் மோடி அரசுதான் இதற்கு முழு ஆதரவு அளித்து முன்னெடுத்திருக்கிறது. //The research has been on for several years. It got a push after the change of government in 2014 at the Centre. A team of 25-30 scientists are working on the project, assisted by research scholars //

இருப்பினும் பளிச்சென்று சூழ்நிலைக்குத் தக்கவாறு ஒரு விளக்கத்தைக் கொடுத்து இந்த புராஜெக்ட்டை முன்னெடுத்திருக்கும் பெயர் தெரியாத அந்த விஞ்ஞானியின் ராசதந்திரத்தைக் கண்டு வியக்கிறேன். //”If you don’t have ox and bulls, there won’t be any issues around cow slaughter, as killing of female milch cows is strictly prohibited,” the scientist explained.//

மேலும் படிக்க:
http://www.business-standard.com/article/current-affairs/bullish-about-female-calves-116061900776_1.html

Author: Prabu RS

* Views expressed here are personal * With consent, anyone can use the essays anywhere * Write to me at PRABU48@GMAIL.COM * In HAM radio VHF repeaters of Tamil Nadu, call me as VU3WWD *