ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம் – நூல் விமர்சனம்

ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம் – நூல் விமர்சனம்.

ஆங்கில மூலம்: ஜான் பெர்கின்ஸ். தமிழாக்கம்: போப்பு. விடியல் பதிப்பகம் வெளியீடு.

வலதுசாரி பொருள் வேட்கையையும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும், நிறுவனவியத்தையும் உரித்துக் காட்டி ஏழைகள் எப்படித் தொடர்ந்து உறிஞ்சப்பட்டார்கள் என்பதை இந்தப் புத்தகம் காட்டுவதாகவும், சமகால கார்ப்பரேட் சுரண்டல்களுக்கு இந்நூல் ஓர் ஆவணம் என்றும் பரவலாகப் பேசுகிறார்கள். இந்த நூலை வைத்திருப்பதும், படித்ததாக சொல்லிக்கொள்வதும் தங்களுக்கு உள்ள சமூக அக்கறையையும், ஏகாதிபத்தியம் குறித்த விழிப்புணர்வுடன் இருப்பதையும் மென்மேலும் கூர்மையாக்கும் என்றும் சிலர் நம்புகின்றனர்.

வெளிநாட்டுத் தத்துவங்களை – கம்யூனிசம் உட்பட – கருதுகோள்களை, கோட்பாடுகளை இந்தியாவில் அப்படியே இறக்கி, பொறுத்திப் பார்க்க முடியாது. இங்குள்ள சாதிய அமைப்பு முறையின் நுட்பமும், ஆழமும், கொடூரமான முகமும் அப்படி.

இந்தப் புத்தகத்தை வைத்து, அமெரிக்காவின் ஏகாதிபத்திய வெறி உலகின் வளங்களைச் சூறையாடியது என்ற ஒரே டெம்ப்ளேட் வசனத்தில் முடித்துக்கொள்வோமேயானால் உலகத்திலுள்ள ஒவ்வொரு நாட்டின் வரலாறு, பிராந்திய வேறுபாடுகள், ஏற்றதாழ்வுகள், பல்லாயிரக்கணக்கான மக்களின் உழைப்பு, மாற்றம் வராதா என்று எதிர்பார்த்தவர்களின் கனவுகள் என அனைத்தையும் படு கேவலமாக உதாசீனப்படுத்துவதாகவே அமையும்.

பல இடங்களில் ஆசிரியர் மனந்திறந்து பேசுகிறார். அதையும் அவர் செய்த வேலையையும் ஒவ்வொரு புள்ளியாக இணைத்துக்கொண்டே வந்தால் சில பல இடங்களில் அவர் சென்ற நாடுகளில் உள்ள உள்ளூர் சூழல் குறித்த அறியாமையும், சில இடங்களில் அவரது அப்பட்டமான சுயநலமும், சில இடங்களில் தனிமையின் விரக்தி காரணமாக அவர் உளறுவதையும், சில இடங்களில் படுமுட்டாள்தனமாக விளக்கம் கொடுப்பதையும் புரிந்துகொள்ள முடியும்.

ஒரளவுக்கு வசதியான குடும்பத்தில் பிறந்த அவர் அந்த வேலையை ஏற்றுக்கொள்ள காரணம் என்று சொல்பவை யாவும் இயல்பாகவே கொஞ்சம் அட்ரினலின் டிரைவ் அதிகமாக உள்ள இளைஞர்கள் விரும்புவதுதான். (மொழி தெரியாத, தனியாக சுற்றி வரவேண்டிய, முறையான அலுவலக அமைப்புகள் இல்லாத, புதிய கலாச்சார பின்னணி உடைய நாடுகளில் சுற்றுவதை அதாவது ஓர் உதிரி ஊழியனாக இருப்பதை பெரும்பாலான இளைஞர்கள் தவிர்த்து விடுவர்). இத்தகைய அட்ரினலின் junkie வகை இளைஞர்களுக்கு இருக்கும் புதியனவற்றைத் தேடும் வேட்கை, அதனால் கிடைக்கும் நுகர்வு கலாச்சார அனுபவங்கள், எதிர்பாலினர் மீதுள்ள மோகம் போன்றவற்றை இரண்டு மூன்று அத்தியாயங்களுக்கு மேல் வளைத்து வளைத்துப் பேசுகிறார். கடைசி அத்தியாயங்களிலும் இஃது ஆங்காங்கே வெளிப்படுகிறது. ஆனால் இதைத்தான் அவர் ஒரு பொருளாதார அடியாளைக் கட்டமைக்கும் கார்ப்பரேட் அணுகுமுறையாக என்னென்னவோ சொல்லி சூடம், சாம்பிராணி எல்லாம் காட்டி “அடேய், இது ரொம்ப சக்தியான சாமி, ஏமாத்தனும்னு நினைச்சா கண்ணை குத்திப்புடும்” என்ற ரீதியில் முழக்குகிறார்.

பயிற்சிக் காலத்தில் ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்த அவர் பிற நாடுகளுக்கு பணி நிமித்தமாக சென்றதும் ஏற்பட்ட தனிமையின் அழுத்தம் காரணமாக அவருக்குக் கிடைத்த அந்தந்த ஊர் குமுதம், ஆனந்த விகடன் படித்துவிட்டு தண்ணியடித்த மப்பில் எதையாவது உளறுகிறார். அதை ஏதோ வரலாற்று ஆவண வாரத்தைகளாக நம்மூர் மக்கள் படிப்பது கொடுமை. சந்தையில் உதிரி ஊழியர்களாக பணிபுரியும்போது அவரவர் வேலைக்கேற்ப பலரை நாம் சந்திப்போம். சிலர் நம்மை ஆச்சரியப்படுத்துவார்கள். சிலர் வெறுப்பேற்றுவார்கள். சராசரி அலுவலக ஊழியர்களுக்குக் கிடைக்காத இந்த வாய்ப்புகளை எப்படி வேண்டுமானாலும் உருட்டி மிரட்டி மற்றவர்களிடம் கதை சொல்லலாம். ஏனென்றால் கதை கேட்பவர்களால் சம்பந்தப்பட்ட நபரிடம் சென்று ‘நீங்க இப்படியெல்லாம் சொன்னீங்களா?’ என்று கேட்க முடியாது. அதுவும் அந்த நபர் இறந்துவிட்டால் நாம் சொல்வதுதான் கதை. அதைத்தான் அடுத்தடுத்து சில அத்தியாயங்களில் ஜான் பெர்கின்ஸ் செய்கிறார்.

அத்தியாயம் 5: “என் ஆன்மா விற்கப்பட்டது” – இதுதான் இந்தப் புத்தகத்தின் ஆகச்சிறந்த ஹைலைட். இந்தோனேசியாவில் ஒரு பெரிய மின்திட்டத்திற்காக விரிவான அறிக்கை தயாரிக்கும் பணியில் அவருக்கும் ஹாவர்ட் என்கிற வயதான அதிகாரிக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தை வைத்து பெர்கின்ஸ் பயங்கரமாக மனம் திறந்து படக்கு படக்கு என்று பேசுகிறார். அஃது ஒன்றுமில்லை. அவர் செய்த வேலை DPR எனப்படும் Detailed Project Report தயாரிப்பது. சிலபல கோடி கடன் வாங்க வேண்டுமென்றாலே DPR கட்டாயம் எனும்போது பல ஆயிரம் கோடி தொகையைக் கொட்ட இருக்கும் வங்கிகளுக்கு ஒரு glorified DPR கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும்.

எப்போதுமே DPR என்பது ஊதிப் பெரிதாக்கப்பட்ட பலூன் என்று அதில் புழங்கும் அத்துனை பேருக்கும் தெரியும். கடன் வழங்கும் வங்கிக்கும் தெரியும். நாளைக்கு புராஜக்ட் ஊத்திக்கொண்டால் சட்டப்படி எல்லாரும் தப்பித்துகொள்ள செய்யப்படும் ஏற்பாடுகள். புராஜக்ட் சிறப்பாக செயல்பட்டால் ஊழியர்களது பதவி உயர்வுக்கு உதவும். இவர் கொஞ்சம் அதிகமான நம்பர்களைப் போட விரும்புகிறார். அதற்கு அந்த ஹாவர்ட் என்கிற பெரியவர் ஒப்புக்கொள்ள மறுக்கிறார். அவ்வளவுதான். மற்றபடி அதற்கு இந்தோனேசியாவை விற்கிறோம், அறுத்துக் கூறுபோடுகிறோம் என்பது, அங்கே சும்மா வாய்க்காலில் ஆய் கழுவப்போன பையன்களை இரண்டு பத்திக்கு விவரித்து தனது சமூக அக்கறையைக் காட்டுவது என்று கும்மி அடிக்கிறார். அத்தியாயத்தின் ஆரம்பத்தில் இன்டர்-கான்டினென்டல் ஓட்டலில் வளைய வரும் பெண்களைப் பார்த்துப் பார்த்து சலிப்பாக இருக்கிறது என்று சொன்னதையும் சேரத்து வைத்துப் படித்தால் இவர் DPR போட்டது தெளிவாகப் புரியும்.

இவருடைய DPR இந்தோனேசியாவையே அழித்து அடிமைப்படுத்துமளவுக்கு இருந்ததாக பயங்கரமாகப் பூ சுற்றுகிறார். மற்றபடி இந்தோனேசியாவின் அரசியல் சூழல், வரலாறு குறித்து எந்தவித அடிப்படை ஞானமும் அவருக்கு இருந்திருப்பதாகத் தெரியவில்லை.

Sapiens நூலில் இருந்து எடுக்கப்பட்ட இந்த வரிகளின் முக்கியத்துவத்தை விட ஒரு மின் நிலையத்துக்கு ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டமான முழக்கங்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

//The most famous Dutch joint-stock company, the Vereenigde Oostindische Compagnie, or VOC for short, was chartered in 1602, just as the Dutch were throwing off Spanish rule and the boom of Spanish artillery could still be heard not far from Amsterdam’s ramparts. VOC used the money it raised from selling shares to build ships, send them to Asia, and bring back Chinese, Indian and Indonesian goods. It also financed military actions taken by company ships against competitors and pirates. Eventually VOC money financed the conquest of Indonesia. Indonesia is the world’s biggest archipelago. Its thousands upon thousands of islands were ruled in the early seventeenth century by hundreds of kingdoms, principalities, sultanates and tribes. When VOC merchants first arrived in Indonesia in 1603, their aims were strictly commercial. However, in order to secure their commercial interests and maximise the profits of the shareholders, VOC merchants began to fight against local potentates who charged inflated tariffs, as well as against European competitors. VOC armed its merchant ships with cannons; it recruited European, Japanese, Indian and Indonesian mercenaries; and it built forts and conducted full-scale battles and sieges. This enterprise may sound a little strange to us, but in the early modern age it was common for private companies to hire not only soldiers, but also generals and admirals, cannons and ships, and even entire off-the-shelf armies. The international community took this for granted and didn’t raise an eyebrow when a private company established an empire. Island after island fell to VOC mercenaries and a large part of Indonesia became a VOC colony. VOC ruled Indonesia for close to 200 years. Only in 1800 did the Dutch state assume control of Indonesia, making it a Dutch national colony for the following 150 years. Today some people warn that twenty-first-century corporations are accumulating too much power. Early modern history shows just how far that can go if businesses are allowed to pursue their self-interest unchecked. While VOC operated in the Indian Ocean, the Dutch West Indies Company, or WIC, plied the Atlantic. In order to control trade on the important Hudson River, WIC built a settlement called New Amsterdam on an island at the river’s mouth. The colony was threatened by Indians and repeatedly attacked by the British, who eventually captured it in 1664. The British changed its name to New York. The remains of the wall built by WIC to defend its colony against Indians and British are today paved over by the world’s most famous street –Wall Street.//

கார்ப்பரேட் கம்பெனிகளில் சிறிய வயதில் சடசடவென மேலே ஏறி உயர்பதவிகளைப் பிடிப்பவர்களுக்கு கட்டாயமாக யாராவது ஒரு காட்ஃபாதர் இருப்பார். அதை பெர்கின்சுடைய வாழ்க்கையிலும் காணலாம். மெய்ன் நிறுவனத்தில் அவ்வாறு வளர்ந்ததோடு அல்லாமல் அதன் முக்கிய பங்குதாரராகவும் ஆகிவிட்டார். அது வழக்கமாக ஊழியர்களுக்கு சும்மா தரப்படும் ESOP அல்ல.

கொலம்பியாவில் பணிபுரிந்தபோது பாவ்லா என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டு ஆங்காங்கே ஊர் சுற்றிப் பார்த்துவிட்டு அவ்வப்போது தண்ணியடித்துவிட்டு பேசுகிறார். எழுத்தாளர்கள், கவிஞர்கள் மது அருந்தினால் மனசாட்சியைத் திறந்து வைத்துப் பேசுவார்கள் அல்லவா? அதை தவறாமல் பெர்கின்சும் செய்கிறார்.

உயர்பதவிக்குச் சென்றதும் கீழிலிருக்கும் ஊழியர்களைப் பயிற்றுவிப்பது, அடுத்தகட்ட தலைவர்களை அடையாளங்கண்டு அவர்களுக்கு நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளில் புகுத்தி அனுபவங்களை உண்டாக்கித் தருவது போன்றவை கார்ப்பரேட் நிறுவன உயரதிகாரிகளின் அடிப்படைக் கடமைகள். அதாவது Succession planning என்று சொல்வார்கள். அந்த வேலையைச் செய்வதை இரண்டு அத்தியாயங்களில் புதிய பொருளாதார அடியாட்களை உருவாக்குவதாகவும் அஃதுவொரு மாபாதகச் செயலைப்போல சொல்கிறார்.

மெய்ன் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புக்கு வந்த மெக்ஹால் என்ற அதிகாரி பெர்கின்ஸின் காட்ஃபாதரான புரூனோவை வேலையை விட்டு நீக்கி விடுகிறார்.

விர்ஜின் தீவுகளில் சொகுசுக் கப்பல் ஒன்றில் மேரி என்ற சக ஊழியை+தோழியுடன் உல்லாசப் பயணம் போகிறார் பெர்கின்ஸ். அங்கு ஓரிடத்தில் நங்கூரமிட்டுவிட்டு மது அருந்திவிட்டு பலவாறாக யோசிக்கிறார். ஐரோப்பிய காலனிகள், கடற்கொள்ளையர்கள், அமெரிக்க சுதந்திரப் போராட்டம் என பலவற்றைப் பேசும் பெர்கின்ஸ் ஒருகட்டத்தில் கரையில் தனியாகக் கத்திக் கதறி தன் இயலாமையை வெளிப்படுத்துகிறார்.

அத்தியாயம் 25-இல் பல்வேறு மனக்குமுறல்களுக்குப் பிறகு மெய்ன்-இல் இருந்து வேலையை விட்டு விலகுவதை எழுதியிருக்கிறார். சராசரி வாசகர்கள் நிச்சயமாக அவரது மனசாட்சியையும், நேர்மையையும் கண்டு அசந்து போவார்கள். ஆனால் உண்மையில் அவரது காட்ஃபாதர் வேலையை விட்டு நீக்கப்பட்ட அதிர்ச்சியில், தனக்கு இனிமேல் அங்கு பாதுகாப்பும், மரியாதையும் இருக்காது என்ற பயத்தில்தான் விலகுகிறார். கார்ப்பரேட் நிறுவனங்களில் இஃது இயல்பாக நடப்பதுதான். ஒரு பெருந்தலை வெளியேறினாலோ, வெளியேற்றப்பட்டாலோ பின்னாலேயே ஒரு கூட்டம் பேப்பர் போட்டுவிட்டு கிளம்புவது வழமையான ஒன்று.

அதேநேரத்தில் பெக்டெல் என்ற மிகப்பெரிய நிறுவனத்தின் தலைமைக் கட்டடவியல் நிபுணரின் மகளான, மெய்ன்-இன் சுற்றுச்சூழல் பிரிவில் பணிபுரிந்த வின்னிபிரெட் உட்பட பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததை பெர்கின்ஸ் ஒப்புக்கொள்கிறார். புதிய அணுமின்நிலையை வரைவுத் திட்டம் ஒன்றில் 3X சம்பள உயர்வுடன் சேர்ந்துகொள்கிறார். கடந்த அத்தியாயத்தில் மப்பு அதிகமானதால் காணப்பட்ட நேர்மை இப்போது காணவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வின்னிபிரெட் சீமாட்டியுடன் சொகுசுக் கப்பலில் ஜாலியாகச் சுற்றிவரும் பெர்கின்ஸ் தனி பங்களா எடுத்து அவளுடன் திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிறார். இந்நிலையில் அவர் பணிபுரிந்த அணுமின் திட்டத்தில் அணுமின் கழிவை அகற்றுவது குறித்த வரைவில் சட்டப்பூர்வமாக இவரே கையொப்பமிட வேண்டும் என்ற நிலை வந்தவுடன் பேப்பர் போட்டுவிட்டு ஓட்டம் பிடிக்கிறார்.

இந்நிலையில் இவரது மாமனார், அதாவது வின்னிபிரெட்டின் அப்பா பெக்டெல்லில் பங்குதாரர் ஆகிவிடுகிறார். பின்னர் வின்னியும் அதில் பங்குதாரர் ஆகிறாள்.

இந்த சூழலில் பெர்கின்ஸ் தனியாக கம்பெனி ஆரம்பிக்கிறார். அதற்கு அவருடைய பழைய காட்ஃபாதரான புரூனோ அப்போது அவர் பணிபுரியும் வங்கி ஒன்றின் மூலம் கடனை வாரி வழங்குகிறார். பெர்கின்சுடைய மாமனாரது சவுதி அரேபியத் தொடர்புகளும் அவரது கம்பெனி வளர்ச்சிக்கு அனுகூலமாகிறது.

அவரது தொடர்புகள் மூலமாக கம்பெனியை மடமடவென வளர்த்து, நல்ல விலைக்கு விற்றுவிட்டு அதே கம்பெனியில் முரட்டு சம்பளத்திற்கு ஆலோசகராக அமர்ந்துகொள்கிறார் பெர்கின்ஸ்.

ஒரு நிறுவனத்தை இன்னொரு நிறுவனம் வாங்கியதும் அதன் ஸ்தாபகருக்கு ஆலோசகர் பதவி வழங்கி சில மாதங்கள் அல்லது வருடங்கள் M&A பணிகள் முடிவடையும்வரை வைத்திருப்பார்கள். பின்னர் அவர்களாகவே விலகிவிடுவார்கள். பெர்கின்ஸ் விசயத்திலும் இது அப்படியே நடந்துள்ளது. ஆனால் அவ்வப்போது மப்பு ஏறியதால் மனசாட்சியைத் திறந்து பேசுவதாக எதையெதையோ உளறுகிறார்.

மொத்தத்தில் அவரது வேலை, சுகானுபவங்கள், பொருளாதார நலன்கள், வருவாய் என எதிலும் குறை வைக்காமல் விவரமாகவே இருந்திருக்கிறார். ஓய்வுபெற்றதும் வெளிச்சத்திலேயே இருக்கவும, சில்லறை வருவாய்க்காகவும் ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம் என்று புத்தகத்தையும் எழுதிவிட்டார். அதாவது காரியப் பைத்தியகாரன் என்று சொல்லுவோமே, அதேதான்.

இடையில் ஈரான், ஈராக், சவூதி அரேபியா, பனாமா, குவாதமாலா, கொலம்பியா என இவர் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நாடுகளையெல்லாம் இணைத்து மசாலா ஆம்லெட், ஆபாயில், ஃபுல்பாயில், கரண்டி ஆம்லெட், வெள்ளைக்கரு ஆம்லெட், மிளகு போட்ட ஒன்சைடு ஆம்லெட், காரம் தூக்கலான சின்ன வெங்காயம் போட்ட கலக்கி என பலவற்றைச் சுட்டுப்போட்டு வாசகர்களை மகிழ்விக்கிறார். நாட்டுக்கோழி முட்டை ஆம்லெட் இல்லையா என்று கேட்பவர்களுக்கு ஆங்காங்கே பெண்கள், விபசாரிகள், சிப்பாய்கள், போராளிக் குழுக்கள், விமான விபத்துகள் என சிலவற்றை இணைத்திருக்கிறார்.

எந்தவொரு திட்டத்திலும் நேரடியான பணியில் இல்லாத, சும்மா ரிப்போர்ட் அடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்துவிட்டு வந்த பெர்கின்ஸ் விட்ட கதைகளைக் கதைகளாக மட்டுமே பார்க்கலாம். அதை இந்தியாவிக்கு இறக்குமதி செய்து எங்கேயும் பொறுத்திப் பார்க்க முடியாது. அவ்வாறு செய்யவும் கூடாது.

இந்தியாவில் உள்ள சாதி அமைப்பு முறை உலகத்திலேயே மிக ஆழமான ஊழல் மிகுந்த அமைப்பாகும். அமெரிக்க ஏகாதிபத்தியம், சுரண்டல் என்பதெல்லாம் இந்திய சாதி அமைப்பு முறையிடம் பிச்சை வாங்க வேண்டும். இதை விடுத்து ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம் போன்றவற்றை ஏதோ அரிதலும் அரிதானவறை அருளும் பொருளியற்சுரண்டல் சிந்தாமணி என்ற அளவுக்கு சித்தரிப்பதெல்லாம் புத்தகம் விற்பதற்கான அற்பமான மார்க்கெட்டிங் மட்டுமே.

தமிழகத்துக்குள் இத்தகைய மொழிபெயர்ப்பு கன்றாவிகள்தான் வலதுசாரி முதலாளித்துவ பொருளாதாரத்தினைப் புரியவைக்க கிடைக்கும் ஆதாரங்கள் என்றால் சொல்வதற்கு ஏதுமில்லை.

‘ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம்’ பொருளாதாரத்தைச் சமூக கண்ணோட்டம் இல்லாமல், வெறும் எண்களாக மட்டுமே பார்க்கும் ஆகச்சிறந்த குப்பை. இதையெல்லாம் படித்து நேரத்தை வீணாக்குவதை விட டிக்டொக் பார்ப்பது மனதுக்கு இனிமையானது. இன்னும் படிக்கவில்லை என்றால் உடனடியாக அதை எடைக்குப் போட்டு பேரீச்சம்பழம் வாங்கி உண்பது உடலுக்கு ஆரோக்கியமானது.

Author: Prabu RS

* Views expressed here are personal * With consent, anyone can use the essays anywhere * Write to me at PRABU48@GMAIL.COM * In HAM radio VHF repeaters of Tamil Nadu, call me as VU3WWD *